பாதத்தின் கீழெல்லாம் எனது உலகம்

நாம் உரையாடத்தான் எத்தனை நினைவுகள்!
சிறுகச்சிறுகக் கிளம்பி
மேலெழுந்து கரைமோதி விழும் அலைகளென
சாமம் மூழுதும் பேசிக்கிடந்தோம்.
கர்த்தரின் கைஆட்டுகுட்டியின் கண்கள்
திடீரென கிடைத்த ஒரு முத்தம்
காலாவதியான காதலனின் முகம்
கடந்துபோன பால்யகாலத்துக் கனவுகள்
அது தரும் புன்னகை
கதிகலங்கக் காயப்படுத்திய அற்புத மனிதர்கள்
என்னை எதிர்த்து, அடித்து என்னை முழுதாய் அறிந்தபின்னும்
கையோடு பயணிக்கும் கிறுக்குத் தோழி
விசித்திரமாதுதான் உலகம்.
காற்றலையும் இறகினைப் போல
நதியோடு போகும் ஒரு இலையினைப் போல
வேறொன்றுமில்லை வாழ்க்கை

பின்னூட்டமொன்றை இடுக