தமிழ் சினிமா – தமிழ் சமூகம் – தமிழர் கலைகள்

. பெருந்தாக்கத்தையும் மாற்றத்தையும் குறுகிய காலத்தில் ஒரு சினிமா கொண்டு வரும். எந்தச் சமூகத்திற்கும் இது பொருந்தும் எனினும் தமிழ்ச் சமூகத்தில் தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கிறதே, அதை விளங்கிக்கொள்ளவே முடியாது. இன்றைய காலம் வரை, நாங்கள் எதைச் சரியென்றும் எதைப் பிழையென்றும் கருத வேண்டும் என்பதைச் சினிமாதான் தீர்மானிக்கிறது. காதல், வன்முறை, நுகர்வு மயமாக்கல் போன்றவற்றைத் தீர்மானிக்கிறது. பார்வையாளர்களின் சமூக, உலகப் பார்வையை மெதுமெதுவாக வடிவமைக்கின்றன. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை வடிகட்டி எடுத்து வந்து, அவற்றை…

ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது!

ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது! எனக்கு நான்கு சித்தப்பாக்கள். மூவர் இன்று உயிரோடு இல்லை. எனக்குத் தெரிந்து அப்பம்மா அழாத நாட்களே இல்லை. தினமும் கந்த சஷ்டி கவசம் பாடுவார். பாடிக்கொண்டு சமைப்பார். அவருடைய கண்ணீர் சமையலறை முழுதும் சிந்திக் கிடக்கும். சமைக்கும் போதெல்லாம் அவருடைய அழுகுரல் மனதை ஏதோ செய்யும். நான் இலங்கையில் அவருடன் தங்கியிருந்த காலத்தில் அந்தக் குரலை தினமும் கேட்டிருக்கிறேன். இப்போது கூட எங்காவது கந்த சஷ்டி…

நீளிரா

முன்பு போல பார்க்கும் எல்லாவற்றிற்கும் எனது கருத்தைப் பதிவிடும் மனநிலை இப்போது என்னிடமில்லை. ஏதோ ஒரு வகையில் ஒரு படைப்பு முக்கியமானதாகப்பட்டால் மட்டுமே எழுத மனம் உந்தும். நீளிரா எனக்கு அந்த வகை. பெரும் போர்க்காலத்தைக் கடந்த ஒரு சமூகம், காலத்திற்கேற்பத் தன்னை மீளமைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும் தளங்களில் திரைப்படத்துறையும் ஒன்று. இத்தனை காலமாக இலங்கைத் தமிழர்களிடம் இருந்து வந்த திரைப்படைப்புகளை அவதானித்தவரை, மனதில் இனம்புரியாத அச்சவுணர்வொன்று இருக்கத்தான் செய்தது. அந்த இறுக்கத்தைச் சற்றே தளர்த்தியிக்கிறது நீளிரா.…

நூலைப்படி!

நூலைப்படி! நூலைப்படி — சங்கத்தமிழ்நூலைப்படி — முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படிநூலைப்படி பாரதிதாசன் தனது பாடலில் நூலைப்படி என்று வெறுமாகக் சொல்லவில்லை, குறிப்பாக சங்கத்தமிழ் நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அதையும் முறைப்படி, பொருள் விளங்கும் படி படிக்கச் சொல்கிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்கக்கவிதைகள், சங்கமருவியகாலத்துக் காப்பியங்கள் வரையான நூல்களைக் கைகாட்டுகிறார். தொல்காப்பியத்திற்கும், சங்கக்கவிதைகளுக்கும் அத்தனை முக்கியத்துவம் ஏன்? எல்லாமொழிகளும் சிறந்தனவே. உலகின் அனைத்து மொழிகளுக்கும் இலக்கண நூல் இருப்பது வழமையே. ஆனாலும் தமிழ்…

ஊர் – Conques

சென்ற நடைப்பயணத்திலேயே பிடித்த கிராமத்தின் பெயர் கொங்க்ஸ். பேரழகு வாய்ந்ததொரு கிராமம். கிராமத்தின் அழகை என்னிடம் உள்ள சொற்களை கொண்டு வர்ணித்து விட முடியாதிருக்கிறது. அக்கிராமம் ஒரு மலையின் இடுக்கில் இருக்க, மலைத் தாழ்வாரத்தில் மிக அழகிய நதி ஒன்றும் அதன் மீது கடந்து செல்கிறது. பழமை வாய்ந்த பாலம் ஒன்றும் அழகின் முத்தாய்ப்பாய் காணக் கிடைக்கின்றது. கிராமத்தைச் சுற்றி மலை காடுகள் பச்சை பசேல் என்று விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே முகில்களை தமக்குள் உறிஞ்சி கொண்டிருந்தபடி…

தலைகீழாக வைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர்ப்பலகைகள்

இந்த ஆண்டின் நடைப்பயணம் சென்ற ஆண்டைப் போலில்லாமல், மிகவும் ஒரு சவாலான யாத்திரையாக அமைந்தது. இரண்டு வாரமாக 350 கி. மி தூரத்தை நடந்திருக்கின்றேன். பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து சன்டியாகோ தி கொம்பஸ்தெல்லா நோக்கி பயணிப்பதே இலக்கு.. நாளும் ஒரு மலையைக் கடந்தாக வேண்டும். ஒவ்வொரு மலைத் தாழ்வாரங்களிலும் ஒரு குட்டிக் கிராமம் எமக்காகக் காத்திருந்தது. சில வேளைகளில் இரண்டோ மூன்றோ மலைகளைத் தாண்டி, மூன்று கிராமங்களைத் தாண்டியும் பயணம் நீண்டது. எனக்கு நடை…

இப்சனுடனான பொழுதுகள் (பருவம் – 2)

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் இரண்டுஇடம்: கிரிம்ஸ்தா முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல் கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு…

இப்சனுடனான பொழுதுகள்

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் ஒன்றுஇடம்: ஷீயன் ……… கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய…

கொஞ்சம் நான் கொஞ்சம் கலை

நேற்று உலக நாடக நாள். நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக நாட்டியம் கற்கத் தொடங்கினேன். பரதநாட்டியம் கற்பதிற் பயனில்லை. நாட்டியக்கலை மதம் சார்ந்த சடங்குகளாகவே இருக்கிறது என்பதால் வீட்டில் மாமாக்களுக்கு நாட்டியத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்கவில்லை. கராத்தே கற்றுக்கொடுத்தாற் கூட பயனுண்டு என்ற வாதமும் உரையாடலும் வீட்டில் நடைபெற்றது. நான் நாட்டியம் கற்றது எனது தனிப்பட்ட விருப்பின்…

சூனியக்காரியின் பதக்கம்

சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து ஸ்பெயின் நாட்டில் போய் முடிவடைந்த நடைப்பயணம். அது சண்டியாகோ டி கொம்பஸ்டெல்லா என்ற பழைமையான சிறப்புமிக்க ஒரு தேவாலயத்திற் சென்று நிறைவடைந்தது. தேவாலயக் கதைகள், வரலாறு என்பவை ஒருபக்கம் இருக்கட்டும். தேவாலயத்தினைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கடைத்தெருக்களைப் பார்க்கும் ஆவல் வயதுவந்த பின்னரும் விட்டுவைப்பதில்லை.…