ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது!
ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது! எனக்கு நான்கு சித்தப்பாக்கள். மூவர் இன்று உயிரோடு இல்லை. எனக்குத் தெரிந்து அப்பம்மா அழாத நாட்களே இல்லை. தினமும் கந்த சஷ்டி கவசம் பாடுவார். பாடிக்கொண்டு சமைப்பார். அவருடைய கண்ணீர் சமையலறை முழுதும் சிந்திக் கிடக்கும். சமைக்கும் போதெல்லாம் அவருடைய அழுகுரல் மனதை ஏதோ செய்யும். நான் இலங்கையில் அவருடன் தங்கியிருந்த காலத்தில் அந்தக் குரலை தினமும் கேட்டிருக்கிறேன். இப்போது கூட எங்காவது கந்த சஷ்டி…




