கொஞ்சம் நான் கொஞ்சம் கலை

நேற்று உலக நாடக நாள். நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக நாட்டியம் கற்கத் தொடங்கினேன். பரதநாட்டியம் கற்பதிற் பயனில்லை. நாட்டியக்கலை மதம் சார்ந்த சடங்குகளாகவே இருக்கிறது என்பதால் வீட்டில் மாமாக்களுக்கு நாட்டியத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்கவில்லை. கராத்தே கற்றுக்கொடுத்தாற் கூட பயனுண்டு என்ற வாதமும் உரையாடலும் வீட்டில் நடைபெற்றது. நான் நாட்டியம் கற்றது எனது தனிப்பட்ட விருப்பின்…

சூனியக்காரியின் பதக்கம்

சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து ஸ்பெயின் நாட்டில் போய் முடிவடைந்த நடைப்பயணம். அது சண்டியாகோ டி கொம்பஸ்டெல்லா என்ற பழைமையான சிறப்புமிக்க ஒரு தேவாலயத்திற் சென்று நிறைவடைந்தது. தேவாலயக் கதைகள், வரலாறு என்பவை ஒருபக்கம் இருக்கட்டும். தேவாலயத்தினைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கடைத்தெருக்களைப் பார்க்கும் ஆவல் வயதுவந்த பின்னரும் விட்டுவைப்பதில்லை.…

‘கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து

எது கலை? கலை என்பது என்ன? பெரும்பான்மை சமூகம் விரும்பவதெல்லாம் சிறந்த கலையாகிவிடுமா? நாயக முன்னிலைப்படுத்தல்கள், சமூகத்தை ஒடுக்கும் பஞ்ச் வசனங்கள், யதார்த்தமற்ற திரைக்கதைகள் தான் சிறந்த திரைப்படங்களுக்கான அடையாளமா அல்லது அளவுகோலா? பெண் உடலை வியாபாரப் பெருளாக்கும் காட்சிகளை, இலட்சியப்படுத்தப்பட்ட உடல்களை, பெண் ஆளுமையைச் சிதைத்து, நலிந்த மலினமான பாலினமாக்கும் உத்திகளை, எல்லா ஆணிகளையும் நாயகனே (ஆண்) பிடுங்குவான் என்ற பார்வையை, இரட்டை அர்த்தத்தில் வக்கிரத்தைக் கொட்டும் பாடல்களை, வசனங்களை, நகைச்சுவைகளைச்; சிறந்த கலையாக்கம் எனலாமா?…

பொது நிகழ்வுகளில் நிறுவனங்களின் இலட்சனை (Logo) பாவிக்கும் முறையும் – முரண்பாடுகளும்.

நாட்டியக் கலைக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்ச்சியிருப்பினும் அது காலத்தினூடு பல மாற்றங்களைக் கடந்தே இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. சில தசாப்த காலங்களுக்கு முன் நாட்டியத்தில் நிகழ்ந்த மாற்றங்களோடுதான் பெருவாரியாக இன்றும் நாட்டியம் பயணப்பட்டு வருகின்றது. நாட்டியக்கலையில் புதிய விடயங்களை எடுத்துச்செல்வதற்கு எதிரான கருத்துக்களே பெரும்பான்மையாக இருப்பினும் எனது கருத்துநிலை வேறானது. . நல் மாற்றங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் உட்படுத்துவது, எமது அடுத்த சந்ததிகளுக்கு இலக்கியம் சார்ந்து, சமூகம் சார்ந்து பேசும் ஒரு கலையாக நாட்டியக் கலையை நகர்த்திச்…

புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளும் எதிர்காலமும்

தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு ஐந்து தசாப்தங்களைக் கடந்துதிருக்கிறது. பெரும்பான்மையினர் போர் அழுத்தங்களாற் புலம் பெயர்ந்தவர்கள். தமிழ் உணர்வும், தம் நிலம் சார்ந்த பற்றும் இவர்களுடைய வாழ்வில் பல அமைப்புகளைக் கட்டியெழுப்புதலுக்கான உந்துதலாகவும், அடிப்படையாகவும் இருந்திருக்கின்றன. புலத்தில் வாழும் தம் சந்ததிகளுக்கு தமது மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றைக் கடத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்புகள், கல்விக்கூடங்கள், கலைக்ககூடங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. இவ்வமைப்புகளிற் பணியாற்றியவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்து வாழும் முதற் சந்ததியினர் தாம். அன்றைய சூழ்நிலையாலும் தேவைகளினாலும் அமைப்புகள்…

உலகின் மிக அழகிய புத்தகக் கடை

உலகின் மிக அழகான புத்தகக் கடை. தமிழகத்திற்கோ, இலங்கைக்கோ சென்றால் புத்தகக் கடைகளுக்குச் செல்வது வழக்கம். ஐரோப்பிய பயணங்களில் புத்தகக் கடைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தப் புத்தகக்கடை விதிவிலக்கு. அங்கு புத்தகங்கள் வாங்குவதற்காகவும் நான் செல்லவில்லை. எனது ஸ்பெயின் நடை பயணத்திற்காகப் போத்துக்கல்லின் பொட்டோ (Porto) என்ற நகரத்தில் வந்திறங்கி, யாத்திரைக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக ஒரு நாள் அங்கு தங்க வேண்டியிருந்தது. அந்த நகரில் உலகின் அழகிய புத்தகக் கடை இருப்பதை அறிந்து சனிக்கிழமையன்று காலையிலேயே…

மனித இனம் இன்னும் எத்தனை வன்முறைகளைக் கடக்க வேண்டும்

. எந்த இடத்தில் இருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கேள்விக்கு உட்படுத்துவது? எதன் அடிப்படையில் இப்படியான அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன? ஒரு பெண்ணை நிர்வாணமாக்குதல், அவளுடைய உடலை வன்முறைக்கு உள்ளாக்குதல் என்பது எதன் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு திருப்தியையோ மகிழ்ச்சியையோ அளிக்கின்றது? எந்தப் பின்புலமும் இல்லாமல் திடீரெனச் சிலருக்கு இப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றுமா? இப்படியான அவலங்களை நிகழ்த்துவது என்பது ஒரு தனிமனித மனப்பபிறழ்வா அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்பிறழ்வா? நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து பெண்களை…

சிப்பியும் சூனியக்காரியும்

(பயணம் 1 ) பயணங்களைப் பற்றி எழுதுவது என்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன். பயணங்களை நாம் எழுதும் போது அங்குள்ள தகவல்களைத் தரும் ஒரு கட்டுரையாக எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை. இன்றைய தகவற் தொழில்நுட்பக் காலத்திற் தகவல்களை நாம் இணையத் தளங்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஒரு பயணத்தின் போது மனிதன் எதைப் பெற்றுக் கொள்கின்றான்? பெற்றுக் கொள்கின்றானா… இல்லவே இல்லை. அவன் தன்னை இழக்கத் தொடங்குகிறான் என்பதே முதன்மையானது. ஒரு பயணத்தில்…

8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை

வேலைநிறுத்தம் செய்வது பெருமிதத்திற்குரியது. அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம்,…