மனிதம் – மானுடம்: ஓர் ஒப்பீட்டு நோக்கு

மனிதம் மற்றும் மானுடம்: ஓர் ஒப்பீட்டு நோக்கு மனிதம் மற்றும் மானுடம் இரண்டும் ஒத்த கருத்துப் போல தோன்றினாலும், இரண்டும் நுணக்கமான, ஆழமான வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட சொற்கள். இச்சொற்களின் மூலம் வடமொழி. மனு, மனுஸ்ய என்ற வடமொழியில் இருந்தே நாம் தமிழில் அதற்கான அர்த்தங்களை கற்பித்துக்கொண்டிருக்கிறோம். இவ்விரு சொற்களும் ஒரே பொருளைத் தருவது போல் தோன்றினாலும், ஆழமாக நோக்கும் போது இவற்றின் பயன்பாட்டிலும், தத்துவத்திலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன. மானுடம்: மனித இனத்தை, குழுமத்தை அடையாளப்படுத்தும்…

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே!

ஒரு கவிதையின் உயிர்  « நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே »       பாரதியார் எழுதிய பாடல்கள் கணிசமான தொகையுடையவையாக இருந்தாலும், தமிழ்த் திரைப்படங்களில் கையாளப்பட்ட பாரதி பாடல்களே பெரும்பான்மை மக்களால் அறியப்பட்டவையாக இருக்கின்றன. அத்தோடு கர்நாடக இசை-ஆளுமைகள், பாடகர்களினால் வெளியிடப்பட்ட இசை அல்பங்களிலும் கணிசமான பாரதி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்த் திரையுலகும், இன்னபிற படைப்புலகும் பாரதியின் பாடல்களிலிருந்து சூழ்நிலைகளுக்குரிய, பேசுபொருள் சார்ந்த வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து தத்தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. முழுமையான ஒரு படைப்பினை  நறுக்கிப்…

பட்டினத்தார் வரிகள்!

கருவிலிருந்து (விந்திலிருந்து) சாம்பல் வரை… வந்தது வெறுமையாக… செல்வதும் வெறுமையாக என்பதை நினைவுத்தும் வரிகள்! ஒரு மனிதனின் முழு வாழ்க்கைப் பயணத்தையும் ஏழு நிமிடங்களில் நம் கண்முன் நிறுத்தும் பாடல் இது. கருவறையில் உருவாகும் உயிர்… தவழ்ந்து, மழலை பேசி, வளரும் குழந்தைப் பருவம் எய்தி… ஆசைகளும் மோகங்களும் நிறைந்த இளமையும் எய்தி… பின், நரைத்த முதுமை எய்தி… இறுதியில் ஒரு பிடி சாம்பலோடு முடியும் வாழ்வை பாடுகிறார் பட்டினத்தார். பட்டினத்தார், பெரும் செல்வந்த வணிகராக வாழ்ந்தவர்.…

ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது!

ஒரு சமூக சிந்தனையாளன் இப்படியாகப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்கவே கூடாது! எனக்கு நான்கு சித்தப்பாக்கள். மூவர் இன்று உயிரோடு இல்லை. எனக்குத் தெரிந்து அப்பம்மா அழாத நாட்களே இல்லை. தினமும் கந்த சஷ்டி கவசம் பாடுவார். பாடிக்கொண்டு சமைப்பார். அவருடைய கண்ணீர் சமையலறை முழுதும் சிந்திக் கிடக்கும். சமைக்கும் போதெல்லாம் அவருடைய அழுகுரல் மனதை ஏதோ செய்யும். நான் இலங்கையில் அவருடன் தங்கியிருந்த காலத்தில் அந்தக் குரலை தினமும் கேட்டிருக்கிறேன். இப்போது கூட எங்காவது கந்த சஷ்டி…

நூலைப்படி!

நூலைப்படி! நூலைப்படி — சங்கத்தமிழ்நூலைப்படி — முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படிநூலைப்படி பாரதிதாசன் தனது பாடலில் நூலைப்படி என்று வெறுமாகக் சொல்லவில்லை, குறிப்பாக சங்கத்தமிழ் நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அதையும் முறைப்படி, பொருள் விளங்கும் படி படிக்கச் சொல்கிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்கக்கவிதைகள், சங்கமருவியகாலத்துக் காப்பியங்கள் வரையான நூல்களைக் கைகாட்டுகிறார். தொல்காப்பியத்திற்கும், சங்கக்கவிதைகளுக்கும் அத்தனை முக்கியத்துவம் ஏன்? எல்லாமொழிகளும் சிறந்தனவே. உலகின் அனைத்து மொழிகளுக்கும் இலக்கண நூல் இருப்பது வழமையே. ஆனாலும் தமிழ்…

ஊர் – Conques

சென்ற நடைப்பயணத்திலேயே பிடித்த கிராமத்தின் பெயர் கொங்க்ஸ். பேரழகு வாய்ந்ததொரு கிராமம். கிராமத்தின் அழகை என்னிடம் உள்ள சொற்களை கொண்டு வர்ணித்து விட முடியாதிருக்கிறது. அக்கிராமம் ஒரு மலையின் இடுக்கில் இருக்க, மலைத் தாழ்வாரத்தில் மிக அழகிய நதி ஒன்றும் அதன் மீது கடந்து செல்கிறது. பழமை வாய்ந்த பாலம் ஒன்றும் அழகின் முத்தாய்ப்பாய் காணக் கிடைக்கின்றது. கிராமத்தைச் சுற்றி மலை காடுகள் பச்சை பசேல் என்று விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே முகில்களை தமக்குள் உறிஞ்சி கொண்டிருந்தபடி…

இப்சனுடனான பொழுதுகள் (பருவம் – 2)

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் இரண்டுஇடம்: கிரிம்ஸ்தா முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல் கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு…

இப்சனுடனான பொழுதுகள்

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் ஒன்றுஇடம்: ஷீயன் ……… கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய…

கொஞ்சம் நான் கொஞ்சம் கலை

நேற்று உலக நாடக நாள். நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக நாட்டியம் கற்கத் தொடங்கினேன். பரதநாட்டியம் கற்பதிற் பயனில்லை. நாட்டியக்கலை மதம் சார்ந்த சடங்குகளாகவே இருக்கிறது என்பதால் வீட்டில் மாமாக்களுக்கு நாட்டியத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்கவில்லை. கராத்தே கற்றுக்கொடுத்தாற் கூட பயனுண்டு என்ற வாதமும் உரையாடலும் வீட்டில் நடைபெற்றது. நான் நாட்டியம் கற்றது எனது தனிப்பட்ட விருப்பின்…

புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளும் எதிர்காலமும்

தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு ஐந்து தசாப்தங்களைக் கடந்துதிருக்கிறது. பெரும்பான்மையினர் போர் அழுத்தங்களாற் புலம் பெயர்ந்தவர்கள். தமிழ் உணர்வும், தம் நிலம் சார்ந்த பற்றும் இவர்களுடைய வாழ்வில் பல அமைப்புகளைக் கட்டியெழுப்புதலுக்கான உந்துதலாகவும், அடிப்படையாகவும் இருந்திருக்கின்றன. புலத்தில் வாழும் தம் சந்ததிகளுக்கு தமது மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றைக் கடத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்புகள், கல்விக்கூடங்கள், கலைக்ககூடங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. இவ்வமைப்புகளிற் பணியாற்றியவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்து வாழும் முதற் சந்ததியினர் தாம். அன்றைய சூழ்நிலையாலும் தேவைகளினாலும் அமைப்புகள்…