நாளொரு கவிதை வேண்டும்

சித்தார்த்!

கள்ளெனச் சொட்டும் போதையை
உள்ளிழுத்து நுகர்ந்து
நரம்புகளுள் ஊடுருவவிட்டு
குருதியோடதைக் கலந்து
உனைப்போலவே கண்மூடி
என்னை நானே மறந்தோய
நாளொரு கவிதை வேண்டும்
அல்லது
நீ வேண்டும்

பின்னூட்டமொன்றை இடுக