மே 22. 2010உம் கவிதாவின் கவிதைகளும் -சஞ்சயன்

மே 22. 2010 நேரம் 23:50 இடம்: ஒஸ்லோ அவசர நோயாளர் வைத்தியசாலை (Olso legevakt) இன்றைய நாள் நல்லாகத் தான் விடிந்தது மலர்ந்தது. மாலை வரை பிரச்சனையேஇல்லாமல் சிவனே என்று போய்க் கொண்டிருந்தது. அதிசயமாய் கொம்பியூட்டர் திருத்தச் சொல்லி எனது கம்பனிக்கு ஆடர்வரமலிருந்தது இன்று. முன் மதியம் நட்பு ஒன்றுடன் குறொன்லான்ட் என்றும் புறநகர்ப் பகுதிக்கு போய்வந்தேன். மதியம் ப்ளாக் இல் எழுதினேன். மாலை காவிதாயினி கவிதாவிடம் இருந்து இரண்டு புத்தகங்கள் வாங்கிக் (காசுகொடுக்காமல்) கொண்டு…

என் ஏதேன் தோட்டம் பற்றிய விமர்சனம் – கலைஞன்

  விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே முரண்பாடுகள் பற்றி பேசுவதாக யோசிக்ககூடாது. கவிதாவின் கவிமழையில நனைந்தபோது இடியாகவும், மின்னலாகவும் முதலில் முரண்பாடுகளே எனது கவனத்தை ஈர்த்துள்ளன. ஆண் ஆணாக இருக்கட்டும், பெண் பெண்ணாக இருக்கட்டும்.. பிரச்சனை இல்லை. ஆனால், பெண்ணாக தன்னை இனம்காட்டி கவிதை படைத்துள்ள கவிஞர் அவர்கள் ஆணாக இருக்கக்கூடியவர்களை தனக்கு ஒப்பான இடத்தில் வைத்து தரிசிக் கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பெண்கள் எவ்வாறு எவ்விதத்திலும் ஆண்களிற்கு சளைத்தவர்கள் இல்லையோ அதுபோலவே ஆண்களும் பெண்களிற்கு நிகரானவர்கள்தானே? பெண்கள்…

பெண்ணியத்தின் தளை முறிக்கும் முன்னெடுப்பு – -சிங்கப்பூர் ராமசாமி

  சென்ற வாரம் சென்னை கோகுலம் பார்க் ஹோட்டலில் நண்பர் குகனின் அழைப்பின் பேரில் நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன்.  இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ, கவிஞர் மு.மேத்தா, இயக்குனர் பாலுமகேந்திரா, தீனா, கவிஞர் யுகபாரதி மற்றும் சிலர் வாழ்த்துரைக்கவும், விமர்சனம் செய்யவும் வருகை தந்திருந்தனர். நூல் விமர்சனத்துக்கும், நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்… நிச்சயம் இல்லை. அந்த விழாவில் பேசியவர்களின் பேச்சுக்கும்  கவிதாவின் கவிதை நூலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையோ அது போலத்தான் இதுவும்.…

கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு – ரூபன் சிவராஜா

கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு; – சில அறிமுகக் குறிப்புகள் (‘கருவறைக்கு வெளியே’, ‘கறுத்த பெண்’) ‘கருவறைக்கு வெளியே’ என்ற தலைப்பிலமைந்த சிறுகதைத் தொகுதி, ‘கறுத்த பெண்’ என்ற தலைப்பிலமைந்த கவிதைத் தொகுதி ஆகிய இரு நூல்களின் வெளியீடும் அறிமுகமும் மே மாதம் 10ஆம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இவை நோர்வேயில்வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த கவிதாவின் நூல்கள். ஆளுமை மிக்க ஒரு நடன ஆசிரியராகவும் கவிஞராகவும் அறியப்பட்டவர் கவிதா. பாடல்களையும் எழுதக்கூடியவர். ஏற்கனவே…

தாழ் உடைக்கும் கவிதைகள் – பேராசிரியர் சண்முகரட்ணம்

  “கறுத்தபெண் – நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்” பேராசிரியர் சண்முகரட்ணம் அவர்களுடைய அணிந்துரை. “இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்.” தாழ் உடைக்கும் கவிதைகள் கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக்…

என் ஏதேன் தோட்டம் பற்றி….. (2008) -அறிவுமதி

உயர்மலைக் காட்டின் உள் மௌனம் அடைகாத்த இருட்டின் ஓடுடைத்துப் பறக்கிற ஒளிப்பெண்களின் காலமிது. உழைப்பு விலக்கி உணர்வு விலக்கி பாடல் விலக்கி ஆடல் விலக்கி உள்படர்ந்து சுடர்விடும் காமம் விலக்கி உடைந்து பேசும் மொழி விலக்கி ஊமைகளாய் உள்ளொடுங்கி வாழ்ந்த பெண்களின் காலம் பெருமழைக் காற்றுப் பிடித்தலுக்கும் அதிர்ச்சிக்கு ஈடுகொடுக்க இயலாத வேப்ப மரத்துப் பில்லுளிச் செடியாய்ப் பிய்ந்து பறக்கிறது. பாடலும் ஆடலும் வற்றிய உடல்களுக்கு சுயம் வாய்க்காது சூரியன் வாய்க்காது வானமற்ற சிறை இருளே வாய்க்கும்…

தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009

தொட்டிப் பூ பற்றி – மு.மேத்தா – 2009 ”அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்! இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார், யார் எந்தையும் இலமே!” என்பது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனின் பெண் மக்கள் பாடிய பாட்டு. —– சங்க இலக்கியத்தில் என்னை மிகவும் பாதித்த பாட்டு இது! படரத்துடித்த ஒரு பூங்கொடிக்கு தன் தேரையே பரிசாகக் கொடுத்த பார்வேந்தனின் மகள்-இன்று-…

நந்திபோலொரு இடைமறிப்பு! பானுபாரதி

பனிப்படலத்தாமரை முகவுரை – பானுபாரதி 2006 ——————————————————— புகலிடத் தமிழ்படைப்புலகில் பெண்களின் பிரவேசம் முன்னெப்போதையும் விடவும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், நாடகம், பத்திரிகை, குறும்படம் என கலை இலக்கியத் துறைகளில் பெண்கள் தம் ஆளுமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களது பிரச்சனைகள் பெண்களாலேயே வெளிக் கொணரப் படுகின்றன இது பெண்ணியக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகும். இருந்த போதிலும் இன்னமும் மறுபுறத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் தொடர் வரலாறாய் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பெண்கள் சுதந்திரம்(?)…