புதியமாதவி – எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எதிர் முகங்கள் கண்டு நான் எழுதுவதை நிறுத்திவிட எண்ணியதும் உண்டு! – பகிர்வு 4
கவிதைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுதலைவிட சிறந்தது கவிதையை ஆறஅமர இருந்து உணருவது. ஒரு கவிதை படித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் போது சில வேளைகளில் குழப்பம் தோன்றும். கவிதையின் உயிர் இருக்கும் பகுதியை மட்டும் கவிதைக்கு வலித்துவிடாமல் பிரித்து கொணரும்போது சின்னதாய் ஒரு கீறல் கைமீறி மனதில் ஏற்பட்டுவிடுகிறது. கவிதையை எப்படி உணருவது? உணர்வின் அதிர்வை ஏற்படுத்தக்கூடிய உச்சம் கவிதையில் எங்கே கிடக்கிறது? அதை எப்படி உணரப்போகின்றோம்? வார்த்தைகள் பிரசவிக்குமிடத்திலா? மனம் லயிக்கும் இடத்திலா? இதோ…









