ஆடுகளம்
சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள் மாறியிருக்கும் நீ நினைக்கிறாயா நான் பதுமையென்று புதுமையும் பதுமையம் எம் விரல் நுனியில்தான் எந்த விரல் நீட்டுவதென்று நானே தீர்மானிக்கிறேன் நாணி ஆடவும் நாண் ஏற்றவும் கூட என் சுட்டுவிரல் போதும். சுடுகுழல் தூக்குதற்கும் கூட செக்குமாடாய் பின் முற்றத்தில் போட்ட வட்டங்கள் எல்லாம்…









