தன்னை முன்வைக்கும் நவீனத்துவம் : கவிதா லட்சுமியின் சிகண்டி – அ. ராமசாமி

  கேட்கும் இடத்தில் இருந்து வாசிக்கும் கவிதை வாசகர்களுக்குத் தர்க்கம் சார்ந்த புரிதல்களையும் காரணகாரியங்கள் கொண்ட விளக்கங்களையும் முன்வைப்பதைத் தவிர்ப்பது கவிதையின் அழகியல் கூறுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. நேரடி விளக்கங்களைத் தவிர்த்து முன்வைக்கப்படும் சொற்களின் வழி உருவாக்கப்படும் குறியீடுகள், படிமங்கள், உவமங்கள்,உருவகங்கள் போன்றவற்றின் வழியாக வாசிப்புத்தளங்களைக் கவிதைகள் உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் தான்   கவிதை   எழுத்துக்கலைகளில் உச்சம் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதப்படுவதின் பின்னணிகள் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல.   இலக்கியப்பிரதி…

பரிஸில் எம்மைக் கவர்ந்தவர்களிற் சிலர்- 6

சிருஸ்டித் திறன் மிகுந்த நர்த்தகி – கவிதா லக்ஷ்மி   பரீஸில் இம்முறை நான் சந்தித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கவிதா லக்ஷ்மி. ஆற்றலும்,திறனும்,அறிவும்,தேடல் எண்ணமும் கவிதை புனையும் ஆற்றலும் மிக்க ஒரு பெண் பண்டைய காலத்தில் நமது தமிழ் நட்டிய மகளிர் பல்திறன் மிக்கோராயிருந்தமைக்குச் சான்றுகள் உண்டு அத்தகைய பல் திறன்கள் பெற்ற ஒரு நர்த்தகியைக் கண்டது பெரு மகிழ்ச்சி தந்தது நோர்வே நாட்டிலிருந்து அவர் தம் கலைக் குழுவுடன் பொங்கல் விழாவுக்கு நிகழ்ச்சிகள் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார். கலாசாதனா…

சகித்துக்கொண்டுதான் சாகசங்கள் புரிகிறோம் வெட்கமில்லாமல்

நூல் அறிமுகம்: கவிதாவின் ‘என் ஏதேன் தோட்டம்’ எல்லா நூல்களையும் படிப்பதுபோல் கவிதைநூலை எடுப்பதுமில்லை; படிப்பதுமில்லை. ஒரு புதினத்தை , வாழ்க்கை வரலாற்றை, சிறுகதைத்தொகுப்பை, கட்டுரை நூலைப் படிக்கும் வேகம், கவிதை நூலைப் படிக்கும்போது இருக்காது. ஓராண்டில் படித்த நூல்களைப் பட்டியலிட்டால் கவிதைநூல்கள் குறைவாக இருக்கும். நூல்களின் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தால் கவிதை நூல்களை அதிகம் எடுத்துப் படிக்கலாம்.காரணம் பக்கங்கள் குறைவாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை கவிதைநூல்களைப்படிக்கும்போது 5 பக்கங்களுக்குமேல் விரைவாக படிக்கமுடியாது. காரணம் அது கவிதை. கவிதைச்சொற்கள்…

கவிதா சினிமாவுக்குப் போனால்…? by piraththiyaal//

எனது திரைப்பாடல் தொடர்பான  பானுபாரதியின் விமர்சனம்… கவிதா சினிமாவுக்குப் போனால்…? by piraththiyaal// பெண்ணியக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த கவிதா, தமிழக சினிமா சகதிக்குள் எப்படி, எப்படி விழுந்தாரோ…? ஆணாதிக்கத்தை ஆவேசமாகச் சாடிய கவிதா எப்படி எப்படி இப்படி…? “உன் விரல்களில் வில்லாய் உடல் வளைகிறதே, கழுத்துவரை புது உலகம் ஒன்று நகர்கிறதே… கணைகளுமே என் விழியில் வந்து பாய்கிறதே…” ஆணின் போகப்பொருளாய் பெண்ணுணர்வுகளை எப்படி வெளிப்படுத்த முடிகிறது.// முகநூலில் பதிவிடப்பட்ட கவிதாவின் இந்தப் பாடலுக்கு இப்படியொரு குறிப்பை…

மே 22. 2010உம் கவிதாவின் கவிதைகளும் -சஞ்சயன்

மே 22. 2010 நேரம் 23:50 இடம்: ஒஸ்லோ அவசர நோயாளர் வைத்தியசாலை (Olso legevakt) இன்றைய நாள் நல்லாகத் தான் விடிந்தது மலர்ந்தது. மாலை வரை பிரச்சனையேஇல்லாமல் சிவனே என்று போய்க் கொண்டிருந்தது. அதிசயமாய் கொம்பியூட்டர் திருத்தச் சொல்லி எனது கம்பனிக்கு ஆடர்வரமலிருந்தது இன்று. முன் மதியம் நட்பு ஒன்றுடன் குறொன்லான்ட் என்றும் புறநகர்ப் பகுதிக்கு போய்வந்தேன். மதியம் ப்ளாக் இல் எழுதினேன். மாலை காவிதாயினி கவிதாவிடம் இருந்து இரண்டு புத்தகங்கள் வாங்கிக் (காசுகொடுக்காமல்) கொண்டு…

என் ஏதேன் தோட்டம் பற்றிய விமர்சனம் – கலைஞன்

  விமர்சனத்தின் ஆரம்பத்திலேயே முரண்பாடுகள் பற்றி பேசுவதாக யோசிக்ககூடாது. கவிதாவின் கவிமழையில நனைந்தபோது இடியாகவும், மின்னலாகவும் முதலில் முரண்பாடுகளே எனது கவனத்தை ஈர்த்துள்ளன. ஆண் ஆணாக இருக்கட்டும், பெண் பெண்ணாக இருக்கட்டும்.. பிரச்சனை இல்லை. ஆனால், பெண்ணாக தன்னை இனம்காட்டி கவிதை படைத்துள்ள கவிஞர் அவர்கள் ஆணாக இருக்கக்கூடியவர்களை தனக்கு ஒப்பான இடத்தில் வைத்து தரிசிக் கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பெண்கள் எவ்வாறு எவ்விதத்திலும் ஆண்களிற்கு சளைத்தவர்கள் இல்லையோ அதுபோலவே ஆண்களும் பெண்களிற்கு நிகரானவர்கள்தானே? பெண்கள்…

பெண்ணியத்தின் தளை முறிக்கும் முன்னெடுப்பு – -சிங்கப்பூர் ராமசாமி

  சென்ற வாரம் சென்னை கோகுலம் பார்க் ஹோட்டலில் நண்பர் குகனின் அழைப்பின் பேரில் நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்கு சென்றிருந்தேன்.  இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ, கவிஞர் மு.மேத்தா, இயக்குனர் பாலுமகேந்திரா, தீனா, கவிஞர் யுகபாரதி மற்றும் சிலர் வாழ்த்துரைக்கவும், விமர்சனம் செய்யவும் வருகை தந்திருந்தனர். நூல் விமர்சனத்துக்கும், நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்… நிச்சயம் இல்லை. அந்த விழாவில் பேசியவர்களின் பேச்சுக்கும்  கவிதாவின் கவிதை நூலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையோ அது போலத்தான் இதுவும்.…

கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு – ரூபன் சிவராஜா

கவிதாவின் இரு நூல்கள் நோர்வேயில் வெளியீடு; – சில அறிமுகக் குறிப்புகள் (‘கருவறைக்கு வெளியே’, ‘கறுத்த பெண்’) ‘கருவறைக்கு வெளியே’ என்ற தலைப்பிலமைந்த சிறுகதைத் தொகுதி, ‘கறுத்த பெண்’ என்ற தலைப்பிலமைந்த கவிதைத் தொகுதி ஆகிய இரு நூல்களின் வெளியீடும் அறிமுகமும் மே மாதம் 10ஆம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இவை நோர்வேயில்வாழ்ந்துவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த கவிதாவின் நூல்கள். ஆளுமை மிக்க ஒரு நடன ஆசிரியராகவும் கவிஞராகவும் அறியப்பட்டவர் கவிதா. பாடல்களையும் எழுதக்கூடியவர். ஏற்கனவே…

தாழ் உடைக்கும் கவிதைகள் – பேராசிரியர் சண்முகரட்ணம்

  “கறுத்தபெண் – நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்” பேராசிரியர் சண்முகரட்ணம் அவர்களுடைய அணிந்துரை. “இந்தக் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் கூர்மையான சமூக விமர்சனங்கள் பொதிந்துள்ளன. இக்கவிதைகளை வரையும் போது கவிதா என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என அவரிடம் கேட்பதைவிட அவர் எழுதிய வரிகள் எத்தகைய சிந்தனைகளை நம்முள்ளே தூண்டுகின்றன என்பதே முக்கியமெனலாம்.” தாழ் உடைக்கும் கவிதைகள் கவித்துவமின்றிக் கவிதை தோன்ற முடியாது. ஆனால் கவித்துவமாகக் கவிஞர் எதைச் சொல்கிறார் என்ன சேதிகளைத் தர முயற்சிக்கிறார் என்பது முக்கியமென்பதை அழுத்திக்…

என் ஏதேன் தோட்டம் பற்றி….. (2008) -அறிவுமதி

உயர்மலைக் காட்டின் உள் மௌனம் அடைகாத்த இருட்டின் ஓடுடைத்துப் பறக்கிற ஒளிப்பெண்களின் காலமிது. உழைப்பு விலக்கி உணர்வு விலக்கி பாடல் விலக்கி ஆடல் விலக்கி உள்படர்ந்து சுடர்விடும் காமம் விலக்கி உடைந்து பேசும் மொழி விலக்கி ஊமைகளாய் உள்ளொடுங்கி வாழ்ந்த பெண்களின் காலம் பெருமழைக் காற்றுப் பிடித்தலுக்கும் அதிர்ச்சிக்கு ஈடுகொடுக்க இயலாத வேப்ப மரத்துப் பில்லுளிச் செடியாய்ப் பிய்ந்து பறக்கிறது. பாடலும் ஆடலும் வற்றிய உடல்களுக்கு சுயம் வாய்க்காது சூரியன் வாய்க்காது வானமற்ற சிறை இருளே வாய்க்கும்…