பனிப்படலத்தாமரை
பனிப்படலத்தாமரை (கவிதைநூல்) 2007 கவிதாவின் படைப்புலகப் பிரவேசம் பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுயள்ளது. அவரது குழந்தைப்பருவம்முதல் நோர்வேயில்தான் நகர்தப் பட்டிருக்கிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எமது மண்ணிலிருந்து அனுபவித்தவரல்ல. ஆனாலும் அவரது கவிதைகளில் தென்படும் பெண்ணொடுக்குமுறை பற்றிய கவிதைகளை நோக்குமிடத்து, இந்தத் தேசத்தில் வளரும் எமது பெண் குழந்தைகள்கூட எமது சமூகக் கட்டுமானங்கள், கலாச்சாரம் என்பதன் பெயரால் திணிக்கப்படும் கருத்துச் சூழலுக்குள்ளும், அதன் தாக்கத்தினுள்ளும்தான் வளர்க்கப் படுகிறார்கள் என்பது தெளிவாகின்றது. பானுபாரதி




