அடைமழைப் பொழுதுகளில்…

எல்லாம் மனது ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கத் தொடங்கி விடுகிறது. சடசடவெனக் கொட்டி, மழை போடும் கூரைச் சத்தத்தைக் கேட்டு, விடுபட்டதொரு இறகினைப்போல மனம் அமைதியாகிவிடுகிறது. மேலும் இக்கணங்களெல்லாம் ஏன் உன்னையே நினைவுபடுத்துகிறது சொல்! இலைகளின் முனைகளில் இருந்து கொட்டும் ஒவ்வொருசொட்டும் எத்தனை சுவர்கள் தாண்டியும் வந்துவிடுகிறது. அந்தச் சலசலப்பு அதுதான் உன் நினைவுகள்போல அவை எதையும் ஊடுருவிச் சேரவல்லது. நீ அறியாததா என்ன! மழைநாள் எத்தனை அழகானதோ, அத்தனை விசித்திரமானதும் கூட! இப்போது பார் இந்தத்…

பாரதியும் புதுமைப்பித்தனும்

புதுமைப்பித்தனும் பாரதியும் எப்படி ஒரே பேசுபொருளை இரண்டு வேறுபட்ட இலக்கிய வடிவங்களுக்கூடாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரசியமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இவர்கள் வெவ்வேறு இலக்கிய வடிவங்களை மட்டும் கையில் எடுக்கவில்லை. எடுத்த விடயத்தைப் பார்க்கும் விதமும் அதைக் கையாளும் முறையும் மிக மிக வேறுபட்டிருக்கிறது. பாரதியோ காதல் குணம் படைத்தவன். அவனுடைய வடிவமோ ஒன்றிப் போவது. இதயத்திலிருந்தே விடயங்களைக் கையாள்வது. காதலும், ஆன்மீகமும், தத்துவமும் கூடிக் கவி செய்வது. கவிதையில் ஓசையும், அழகும், ஆழமும் கொண்டுவரும் கவிதைச்…

கண்ணம்மாவின் காதலர்கள்

ஒற்றைச்சூரியன் ஒரு நிலவு ஒரு உலகு ஒரே காதல் என்பது பொய் எங்கள் பார்வைக்கு வந்தது இதொரு சூரியன் தான் கண்ணுக்குக் காட்டப்படுவது இந்த ஒரு நிலவுதான் எங்கள் இருப்பைத் தாண்டி எங்கோ  உலகங்கள்  இருக்கலாம்; ஒரே காதல் என்பது ரகசிய நகரம் ஒரே காதல் என்பது மர்மங்கள் புதைந்த கண்ணாடிச் சவப்பெட்டி உடையாதவரை எந்தப் பேய்களும் கிளம்புதற்குரிய பீதியில்லை மனித இனத்தின் யதார்த்தங்களை இரவுகளில் ஒளித்துவைக்கக் கற்றவர்களின் நாணயங்கள் கரும்புலிகளின் கண்களைப்போல் ஒளிர்கின்றன கதவின் பின்புறத்தில்…

யசோதரை!

வயதான கிழவன் நோயாளி அழுகியதொரு பிணம் ஒரு முனிவன் ஒரு போதிமரம் புத்தன் போய் வெகுநாளாகிறது! வேறுலகம் காணக் கொஞ்சமாய் நகர்ந்தாலும் அம்மாகூடச் சொல்வாள் எங்கே போகிறாய் பேசாமல் இரு பிள்ளையோடென மரபின் தொடர்ச்சியாக அதே சாரத்தோடு இன்றுவரை தப்பிக்கத் தெரியாதவள் யசோதரை!  

நீ எங்கிருக்கிறாய்?

மண் நுழைந்து வேர்களினிடையே ஊறிய அந்தச் சொட்டுகள் போலவே என் பூமியின் விரிந்த தேகமெங்கும் கொட்டித் தீர்த்தனை நீ! என் வீட்டுப் புதர்களிலும் பூக்களிலும் படர்ந்து வரும் காற்றோடு கலந்து நின்றனை நீ! இப்போது எங்கிருக்கிறாய் நீ, என்று நான் கேட்கலாமா? யாதொன்றும் இல்லாத காலங்களின் அமைதியறுத்து யுத்தத்திற்குத் தயாராகி எழுந்து விரிகிறது ஒரு பறவை நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும் காற்றின் படர்வுமற்று எதுவும் தொலைத்த சிலவரிகளைத் தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி விரித்த சிறகோடு கண்…

கொஞ்சம் தேனீர்!

எனக்குத் தெரிந்த உலகின் மிக ரம்யமானதொரு கலைப்பொருள் என்றால் அது தேனீர்க்குவளைதான். ஒன்றுபோல் டசின் கணக்காக வாங்கி வைத்திருக்கும் தேனீர்க் குவளைகளைவிட அப்பப்போ தனித்தனியாக அழகியல் வேலைப்பாடுகளுடன் குவளைகளை வாங்கிச்சேர்ப்பதில் தனி ஆர்வம் உண்டெனக்கு. இப்போதும் தேனீர்குவளையில் இருந்து கிளம்பி காற்றோடு கலந்துவிடும் ஆவியின் அழகினைப் பார்த்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். குவளையின் விளிம்பில் இருந்து அதன் வாசம் போதையெனக் கிளம்புகிறது. விரல்களைச் சூடேற்றியபடி இந்தப் பனிக்காலத்தை பருகியிருத்தல் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். பிறர் தரும் தேனீர்த் தருணங்களில்…

இப்படியாகப்பட்டவள் நான்

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும்…

தனிமை உடைக்கவே விரும்புகிறேன்

நேற்று வானம் உடைந்து தண்ணீரில் கிடந்தது என்றால், நம்பமுடிகிறதா? அதன் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அந்தக்காட்சி ஒருவித மாயை. மாயையை முழுமையாய் உணர சில நொடி தனிமை தேவைப்படுகிறது. அது, அந்தத் தனிமை அந்தக்கணம்தான். பிறகு தனிமையை உடைத்தெறியவே மனம் விரும்புகிறது. உணர்வுகளை எல்லாம் அறிவிடம் அடிபணிய வைத்துவிடும் இந்தத் தனிமையை, அதற்காகவேனும் உடைத்துப்போட வேண்டும். தனிமையில் மனம் தான்தோன்றித்தனமாய் கட்டுடைத்துச் செல்வது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. கட்டுடைப்புகள் அசௌகரியமானவை. அதனால்தான் அசௌகரியங்கள் எல்லாம்…

வனச்சிறுக்கி

அந்தக் காட்டினில் ஒரு வனச்சிறுக்கியைப் போல பெயர் அறியாததொரு பூவைத் தேடி புறப்படவும் சூனியக்காரியைப் போல பறக்கும் கட்டையின் மேலேறி வானளாவக் கிளம்பும் பெருவிருப்பிலும் மந்தையில் இருந்து கழன்றதொரு ஆட்டுக்குட்டியைப்போல காலத்தைத் தாண்டியோடும் கனவுகளைச் சமைக்கிறது மனம். நளினமுமற்று நாணமுமற்று மதயானையின் வேகம் உச்சந்தலையில் சுர்ரென ஏற முள்வேலியைப் பிய்தெறியும்; ஒரு வேட்டை மிருகத்தைப்போலது சிலிர்ந்து கிளம்புகிறது. ஆட்டுக்குட்டிகள் சிலிர்கலாகாது சிலிர்தாலும் சீறலாகாது இது வேதாளத்தின் அறிகுறியென வனச்சிறுமிக்கு யார்யாரோ சொல்லிப் போகிறார்கள். தலைகீழாய் தொங்குவதே புனிதமோ…

பொம்மைத் தொழிற்சாலை

என் கனவு வானம் உயரத்தில் இருக்கிறது அங்கிருந்தபடியே அனைத்தையும் குனிந்து பார்க்கிறேன் பனிபடர் நிலத்தில் உயர்ந்த மரங்கள் மேலாகவும் சகாராவின் அழகிய அல்லிப்பூக்கள் நெடுகிலும் சிரித்துவிளையாடும் சோமாலியக் குழந்தைகளோடும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் புல்வெளிமீதும் இலங்கைத்தீவில் பௌத்த, இஸ்லாமிய மனிதர்களோடும் ஈரான் ஈராக்கிய புதிய நகரங்களுடாகவும் நான் பறந்து வருகிறேன். மேகத் துண்டுகள் மனதை துடைத்தெறிகிறது தேவதைகள் என்னோடு பூமிக்கு பயணப்படுகிறார்கள் உலக உருண்டையில், எதிலும் கோடுகள் இல்லை அண்டவெளியெங்கும் தெய்வீகமாக நான் கடவுள்கள் மனிதர்களாக பிறந்துகொண்டிருக்கின்றனர் சிரிப்பொலியில்…