நாயகனின் செருப்பை ஏன் காட்டுகிறீகள் என்று நாங்கள் கேட்டதுண்டா

சாயஉதடுகள் குவிப்பதுவும் மைஇமைகளைக் கொட்டுதலும் காற்றிற் கூந்தல் சுற்றிச் சுழலுதலும் அரைநிர்வாணமாய் குலுங்கும் முலைகளுடனும் வெண்சாயத் தேவதைக்கனவுகள் சுமந்துவரும் மனுசிகள் சுரக்கும் திரைஅரங்கில், நாயகனின் செருப்பை முதலில் காட்டுகிறார்கள் ம்…? கடவுள் உட்பட இப்படியிருக்கக் கடவதாக சொன்ன இயக்குனர்கள் மற்றும் மனிதர்கள் ஏதோவொன்றின் நகலாகவே விரும்பும் திரைமார்பில் பாலுறுஞ்சிய தோழர் தோழியரின் கனவுகள் அப்படியே கலையாதிருக்கிறது எப்போதும் விறைத்துப்பெருத்த வண்ணமே இருக்கும் திரைமார்புகள் இங்கு யார்மீதும் எதற்காகவும் ஆத்திரப்படுவதற்கு முன் எதிர்த்தலை முதலில் என் சலனத்தோடு வைத்தபின்…

அலகு

  கொண்ட நேசங்களுக்கும் வெறுப்பு உணர்வுகளுக்கும் அலகு மயிரிழைதான் பூக்களும் இலையும் செடியும் மரமும் வெளிகளும் மலைகளும் வானும் அகண்ட சமூத்திரங்களும் பெரும் பிரபஞ்சமும் எதனாலும் நிரப்பப்படுவதற்கில்லை. பால்மண்டலத்தைபோல விரிந்து கிடக்கிறது இந்த மயிரிழை விரிசல் அதன் மாயையின் பொருள் விளங்கா செய்வதறியாது உறைந்துவிட்டேன் சகி! இருந்தும் ஒன்று கண்டு வந்தேன் அண்டமெங்கும் அதுவே சக்தியென எதையும் தகர்த்து எதையும் மறைத்து எதையும் உடைத்து சூன்யத்தை நிறைத்து வாழ்க்கையை நிரப்பிவிடுகிறது இந்த முகமூடி.  

பனிப்படலத்தாமரை

பனிப்படலத்தாமரை (கவிதைநூல்) 2007 கவிதாவின் படைப்புலகப் பிரவேசம் பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுயள்ளது. அவரது குழந்தைப்பருவம்முதல் நோர்வேயில்தான் நகர்தப் பட்டிருக்கிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எமது மண்ணிலிருந்து அனுபவித்தவரல்ல. ஆனாலும் அவரது கவிதைகளில் தென்படும் பெண்ணொடுக்குமுறை பற்றிய கவிதைகளை நோக்குமிடத்து, இந்தத் தேசத்தில் வளரும் எமது பெண் குழந்தைகள்கூட எமது சமூகக் கட்டுமானங்கள், கலாச்சாரம் என்பதன் பெயரால் திணிக்கப்படும் கருத்துச் சூழலுக்குள்ளும், அதன் தாக்கத்தினுள்ளும்தான் வளர்க்கப் படுகிறார்கள் என்பது தெளிவாகின்றது. பானுபாரதி

பரிஸில் எம்மைக் கவர்ந்தவர்களிற் சிலர்- 6

சிருஸ்டித் திறன் மிகுந்த நர்த்தகி – கவிதா லக்ஷ்மி   பரீஸில் இம்முறை நான் சந்தித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கவிதா லக்ஷ்மி. ஆற்றலும்,திறனும்,அறிவும்,தேடல் எண்ணமும் கவிதை புனையும் ஆற்றலும் மிக்க ஒரு பெண் பண்டைய காலத்தில் நமது தமிழ் நட்டிய மகளிர் பல்திறன் மிக்கோராயிருந்தமைக்குச் சான்றுகள் உண்டு அத்தகைய பல் திறன்கள் பெற்ற ஒரு நர்த்தகியைக் கண்டது பெரு மகிழ்ச்சி தந்தது நோர்வே நாட்டிலிருந்து அவர் தம் கலைக் குழுவுடன் பொங்கல் விழாவுக்கு நிகழ்ச்சிகள் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார். கலாசாதனா…

சகலமும் நான்

நீ சூரியனா இருந்து கொள்… தூரம் என்றாலும் உன் கதிர்கள் என்னை உரசிக்கொண்டுதானிருக்கும். நான் பூமி. நீ பறவையோ தூரம் போவாயோ…போய்வா நீ நிச்சயம் வருவாய். உன் கூடு என் விரல்களில். நான் மரம். காற்றாக மாறு காணாமல் போ. ஒவ்வொரு நொடியும் என்னுள் நிரப்பிக் கொள்வேன் நான் சுவாசம். மேகமாகி நீ அலைந்து திரி பொழிந்து கொட்டு எங்கோ வீழ்ந்து எங்கும் பாய்ந்து.. நீராகி நதியாகி உன் இறுதி சங்கமம் என்னிடம் தான். நான் கடல்.

இறைமீட்பு

நீ கொடுப்பாய் என்று தெரிந்தபின்னும் கேட்காமல் நான் எடுத்துக்கொண்டது காதல் ஒரு முறை அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச்சொன்னார் இயேசு அடிக்கடி நினைவில் வந்து தொலைக்கிறது அது நீ கொடுத்த முத்தத்தில் இன்பப் படுக்கையில் உன் நினைவுகளின் இறைமீட்பு. போர்த்திக் கொள்கிறது கனவு உன் விரலால் என் விரல் கவ்வி நீ கற்று தா நாம் கலைகள் பயில்வோம் நிலவினிலே மென் இதழ் முத்தமொன்றும் இதழ் உதிர்க்கும் வார்த்தைகளும் அள்ளிபோக நான் வருவேன் யாசகனாய்  இருப்பதில் ஆட்சேபனை எனக்கில்லை…

நீளமான இரவுகள்

நீளமான இரவில் இருட்டின் அடர்த்தி கிழித்து எரிந்து கொண்டிருந்தது உருகிவழிந்த மெழுகுவத்தி அழகான மழை வெளியே அற்புதமாயிருக்கிறது மண்வாசம் நிசப்தத்தின் ஆழுமையில் வெடித்து சிதறுகிறது உன்னுடனான என் முதல் நாள் நினைவுகள் ஒரு நொடியாய்க் கரைந்துபோன அந்த ஒருநாளப்பொழுது எத்தனை இரவை நீளமாக்கும் சொல் சிதறிய உன் நினைவுத்துண்டுகள் பொறுக்கி கீறிப்பார்க்கிறேன் என் உயிர்முழுதும் கசிந்துபோகும் ஏக்கத்தின் உச்சத்தில் யார் என்று நான் சொல்லியா தெரியவேண்டும் உனக்கு?

ஜடாமுடியில் நெளியும் பாம்புகள்

என் வெளிமீது படரும் பொய்க்காலங்களின் கண்கள் என்னை மேவி நுழைகிறது என் ஜடாமுடியிலிருந்து பிடுங்கி எறிந்த பிறகும் இறகு முளைத்த சர்ப்பங்களென நினைவுகளில் ஊர்ந்து விடத்தின் வீரியத்தை வக்கிரமாய் கக்கியெறிகிறது ஆற்றாமல் நெளிந்து, அருவெறுத்து ஒதுங்கி நின்று தள்ளி நடந்து பாராமல்ச் சென்றும்… உன்னோடானா அன்றைய பொய்காலங்களின் தனல் பட்டு அதிர்ந்து மௌனித்தேன் ரத்தம் கண்ட வடுகளில் வலி பழைய புண்களைக் கிளறும் துர்நாற்றம் பரபி உச்சந்தலையுள் ஊடுருவும் சடலங்கள் எனக்கடந்த யுகங்கள் மீண்டும் நிகழுமென் வெளிமீதில்…

பிளவுகள்

இதோ எனது பூமி என் கால்களுக்கடியிலிருந்து நழுவுகிறது அரசியல் ஆணிகளாலும் பிளவுமனக் கடப்பாறைகளாளும் ஓங்கி அடித்தவண்ணம் ஆக்கிரமிக்கும் அடங்காத உயிரினங்கள் போல ஆறாதநடனம் புரிகின்றனர் எனது உலகு பல கூறுகளாக்கப்படுகிறது வெடிப்புகளின் நுனியிலிருந்து கோசங்கள் புறப்பட்டு புலரும் திசையெங்கும் பீங்கான் கோப்பைகள் போல சத்தமாய் உடைகிறது பூமி இவர்கள் தம்மை தேவர் என்றும் அவர்களை அசுரர் என்றும் அறிவிக்கின்றனர் அவர்கள் இவர்களை அரக்கர் எனவும் தம்மை வானவர் எனவும் அறிக்கையிடுகின்றனர் பிளவுபடும் பூமியில் மனிதன் என்ற ஒன்று…

17 may – ஒரு பொழுது!

எங்கும் சிவப்பு நிறக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன முகம் மலர்ந்த மனிதர்கள் ஈசல்களைப் போல வந்துகொண்டிருந்தார்கள் வாழ்த்துக்கள் சொன்னார்கள்இ வாழ்த்துக்கள் சொன்னேன் இசைமுழங்கினர் கேட்டுக்கொண்டிருந்தேன் சுதந்திரம் பற்றிப் பேசினர் பார்த்துக்கொண்டிருந்தேன் சுதந்திரகீதம் முழங்கிற்று நானும் முணுமுணுத்துக்கொண்டேன் குழந்தைகள் அணிவகுத்துச் சென்றார்கள்இ அவர்கள் திரும்பும்வரை காத்துக்கொண்டிருந்தேன் அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள் பலர் தமைநோக்கி அலைபேசிப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். சிறுமியர் மலர்கிரீடம் சூட்டியிருந்தனர். அழகாயிருந்தது பாண்டங்கள் கொடுத்தார்கள்இ கட்டியணைத்தார்கள் நிதிசேகரித்தார்கள்இ நின்று பேசினார்கள் தெருவெங்கும் பூக்கள் சுதந்திரமாய்ச் சிரித்தாடின. கைகட்டி அசைவற்று நாகரிகச் சிரிப்போடு…