அன்பினைச் சேர்தது ஐம்பூதங்கள் ஆறு!
இன்னும் சில மணிநேரங்கள் தான்… ஒரு நொடிப்பொழுதுதான்… அவ்வளவே தான்! இன்னுமொரு ஆண்டும் ஓடியேவிட்டது. இவ்விரவில் நான் சந்தித்த மனிதர்களையும், கண்ட அனுபவங்களையும் நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை நொடிகள்? எத்தனை நகரங்கள்? எத்தனை மனிதர்கள்? பரிமாறிக் கொண்ட நேசங்களும், கோபங்களும், கடந்து போன மனிதர்களும், கடந்து போக எண்ணும் உறவுகளும் தான் எத்தனை? எத்தனை? அன்பும் கோபமும் அவ்வளவு நெருக்கமானவையா என்ன? இந்த ஆண்டில் தான் நான் முன்னைக்கும் மேலாக மிகவும் கோபப்பட்டிருக்கிறேன். மனதுடைந்தும் போயிருக்கிறேன். சந்தர்பம் கிடைக்கும்…









