தன்னை முன்வைக்கும் நவீனத்துவம் : கவிதா லட்சுமியின் சிகண்டி – அ. ராமசாமி

  கேட்கும் இடத்தில் இருந்து வாசிக்கும் கவிதை வாசகர்களுக்குத் தர்க்கம் சார்ந்த புரிதல்களையும் காரணகாரியங்கள் கொண்ட விளக்கங்களையும் முன்வைப்பதைத் தவிர்ப்பது கவிதையின் அழகியல் கூறுகளில் ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. நேரடி விளக்கங்களைத் தவிர்த்து முன்வைக்கப்படும் சொற்களின் வழி உருவாக்கப்படும் குறியீடுகள், படிமங்கள், உவமங்கள்,உருவகங்கள் போன்றவற்றின் வழியாக வாசிப்புத்தளங்களைக் கவிதைகள் உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் தான்   கவிதை   எழுத்துக்கலைகளில் உச்சம் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதப்படுவதின் பின்னணிகள் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல.   இலக்கியப்பிரதி…

பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

ஈழத்துப் பெண் ஜெயமோகனுக்கு எழுதிக்கொள்வது. பெண்கள் தொடர்பாக அடிப்படை அறமே உம்மிடம் இல்லையே ? எழுத்தாளர் பட்டியலில் எப்படி உம்மை இருத்தி வைத்தார்கள்? கவிதைகளால் பெண்களின் கற்பழிந்து போகும் என்றால் என்ன? எப்படி யோசித்தும் புரியவேயில்லை? உமது பார்வையில் பெண்களிடத்தில் கற்பு கடைசியாக எங்கே இருக்கிறது? எம் மண்ணின் கவிதைகள் அல்லது கவிஞர்கள் எந்த விதத்தில் பெண்களின் கற்பை அழித்துவிடுவார்கள் என்ற கவலை உமக்கு? விளக்கமாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோமல்லவா? உம் போன்றவர்களை இன்னும் எழுத்தாளர்கள்…

‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா.

பிரேம்ராஜ் நெறியாள்கையில், நோர்வே துரொண்ஹைம் தமிழ் அரங்கம் (Trondheim Tamil Theatre) கலைஞர்களின் ‘என்னோற்றான் கொல்’ —————————————————–     ‘என்னோற்றான் கொல்’ – நோர்வே வாழ் தமிழர்களின் சினிமா. புலம்பெயர் தமிழர்களின் முதற் சுற்று முடிந்துவிட்டது. எமது இரண்டாம் தலைமுறையின் சுற்று ஆரம்பித்திருக்கிறது. என்னோற்றான் கொல் இவர்களின் வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. என்னோற்றான் கொல் எமது கதை. புலம் பெயர்ந்த மனிதர்களின் மனநிலை. எம்மைச் சுற்றி இருக்கும் மனித மனத்தின் உளவியலைப் பேசும் திரைக்கதை. கதையின்…

‘ஜீவநதி’ இதழில் பிரசுரமான நேர்க்காணல் – கோமகன்

ஜீவநதி (இலங்கை) 02 பங்குனி 2016 “கவிதையின் அழகே அது சுதந்திரமாகவும், உண்மைத் தன்மையுடனும் தன்னை வெளிப்படுத்துவதுதான்.” கவிதா லட்சுமி , கலாசாதனா (நோர்வே) புலம் பெயர்ந்த ஈழத்து அகதிகளின் இரண்டாவது பரம்பரையின் அசுரவளர்ச்சிக்கு ஓர் சிறந்த உரைகல்லாக இருப்பவர் கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கவிதா லட்சுமி மிகச்சிறிய வயதில் புலப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டவர். தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவரும் கவிதா, கவிதை, இலக்கியம், நடனம் என்று பல்முக ஆற்றல்களை தன்னகத்தே கொண்டவர்.…

பரிஸில் எம்மைக் கவர்ந்தவர்களிற் சிலர்- 6

சிருஸ்டித் திறன் மிகுந்த நர்த்தகி – கவிதா லக்ஷ்மி   பரீஸில் இம்முறை நான் சந்தித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கவிதா லக்ஷ்மி. ஆற்றலும்,திறனும்,அறிவும்,தேடல் எண்ணமும் கவிதை புனையும் ஆற்றலும் மிக்க ஒரு பெண் பண்டைய காலத்தில் நமது தமிழ் நட்டிய மகளிர் பல்திறன் மிக்கோராயிருந்தமைக்குச் சான்றுகள் உண்டு அத்தகைய பல் திறன்கள் பெற்ற ஒரு நர்த்தகியைக் கண்டது பெரு மகிழ்ச்சி தந்தது நோர்வே நாட்டிலிருந்து அவர் தம் கலைக் குழுவுடன் பொங்கல் விழாவுக்கு நிகழ்ச்சிகள் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார். கலாசாதனா…

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை – பகிர்வு 12

மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் காலை விடிந்தது. கவிதை என்பது உணர்வு. கல்விக்கூடங்கள் மூலமோ பயிற்றுவிப்புகள் மூலமோ நாம் கவிதையையோ கவிஞர்களையோ மல்லுக்கட்டி இழுத்துவர முடியாது. வாழ்வின் பெருநிலத்தில் உளவியல் விதைகளாலும் அனுபவ உரத்தினாலும் உழுது பயிரிட்ட உணர்வுகளின் அறுவடை கவிதை. விரிந்த ஆய்வும் ஆழமான தேடலும் இல்லாமல்…

மனுஸ்ய புத்திரன்- அதீதத்தின் ருசி” மனநிலத்தில் உள்ள எம் வெற்றிடங்களை நிரப்பத்தூண்டும் நடனமாகிறது. “பகிர்வு 13”

பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், எமது சந்தோசங்களுக்காக எதை எதையோ செய்தோம், சாதித்தோம், இறந்தோம் என வாழும் மனித வாழ்க்கையில் ஒரு சிலரே ஒவ்வொரு கணத்தையும் கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கவிதை என்றவுடன் அது ஒரு காதலையோ, மகிழ்ச்சியையோ, இன்பத்தையோ நினைவுபடுத்தும் ஒரு மாயச்சொல்லாக எம்முன் விரிகிறது. ஆனாலும் இக்கவிதை மொழி என்பது வாழ்க்கையின் இன்பக்கிளர்ச்சிகளைப் பேசிய காலங்களில் இருந்து கழன்று இன்று வாழ்க்கைக்கான கேள்விகளுடன் தனது தேடலைத் தொடங்கியிருக்கிறது. முக்கியமாக இன்றைய கவிஞர்களின் கவிதைகள் வாழ்நிலை யாதார்த்தங்களைப்…

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – பகிர்வு 11

யாப்புக்குள் அடங்கக் கூறுவது மரபுக் கவிதை. யாப்பின் திணிப்பறுத்து செய்திக்கு முதன்மை தருவது புதுக்கவிதை. சொற்சுருக்கம், உணர்ச்சிகளின் வேகம், வழக்கிலுள்ள சொல்லாட்சி, என்பன புதுக்கவிதையின் குறியீடுகள். புதுக்கவிதை இன்று தனக்கான ஒரு இடத்தை நிலைப்படுத்திக்கொண்டு பலராலும் விரும்பப்படும் இலக்கிய வடிவமாக இன்று வளர்ந்திருக்கின்றது. சமுதாயச் சீர்கேடுகளை உணர்த்தவும் உடனுக்குடன் பதிவு செய்யவும் இலக்கண யாப்பு தடையாக இருக்கின்றது. கருத்திற்கு முதன்மையளிப்பதே புதுக்கவிதையின் முதன்மை நோக்காகும். போரின் ரணங்களும் அதன் பரிமாணங்களும், விடுதலை வேட்கையும் கலந்த கவிதைகளை கொண்ட…

மனோரமா பிஸ்வால் – மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் – பகிர்வு 8

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” – பாரதி மிக அருகில் இருந்து ஆடித்திருவதைப்போல் நட்சத்திரங்கள், கைபிடித்துவரும் ஒற்றையடிப் பாதையின் காற்று, நிலா முட்டும் குடிசைகள், பொத்தான் தொலைத்து கோணலாக இழுத்துக் குத்தப்பட்ட காற்சட்டைச் சிறுசுகள், ஜன்னல் அருகில் காற்று வாங்கத் துடிக்கும் பாவாடை பூக்கள், மஞ்சள் பூசி வளைய வரும் ஆறுகள் எல்லாம் படியேறி எங்கே ஓடிவரப்போகிறது நாற்சுவரல் ஒடுங்கிவிட்ட எம் நகரத்து வாழ்க்கைக்கு?   ஓரியாவிலிருந்து ஒரு குட்டிக் கிராமத்தையே நம்…

குகை மா புகழேந்தி – ஒரு மனிதன் உணரக்கூடிய அற்புதமான உணர்வு காதல் – பகிர்வு 10

யாருமற்ற நிசப்த இரவில் போரும் வாழ்க்கையும் நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளைக் களைந்துவிட்டு அமைதியாய் சில நொடிகளை எமதாக்கிக்கொள்ளவதென்பது அரிதானது.இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை நல்லதொரு இலக்கியப் படைப்பினால் கொடுக்க முடியும். சில மணிப்பொழுதுகளானாலும் இந்த அமைதியை தரவல்ல சக்தியைக் கொண்டது காதல்க் கவிதைகள். இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் எம்மை சில நொடி பிரபஞ்சத்தின் வெளியே…