இப்படியாகப்பட்டவள் நான்

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும்…

தனிமை உடைக்கவே விரும்புகிறேன்

நேற்று வானம் உடைந்து தண்ணீரில் கிடந்தது என்றால், நம்பமுடிகிறதா? அதன் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அந்தக்காட்சி ஒருவித மாயை. மாயையை முழுமையாய் உணர சில நொடி தனிமை தேவைப்படுகிறது. அது, அந்தத் தனிமை அந்தக்கணம்தான். பிறகு தனிமையை உடைத்தெறியவே மனம் விரும்புகிறது. உணர்வுகளை எல்லாம் அறிவிடம் அடிபணிய வைத்துவிடும் இந்தத் தனிமையை, அதற்காகவேனும் உடைத்துப்போட வேண்டும். தனிமையில் மனம் தான்தோன்றித்தனமாய் கட்டுடைத்துச் செல்வது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. கட்டுடைப்புகள் அசௌகரியமானவை. அதனால்தான் அசௌகரியங்கள் எல்லாம்…

கறுப்பு வெள்ளைக் கனவுகள்!

மாலை நேரம். சினேகிதி வீட்டிலிருந்து கிளம்ப மனமற்று கதிரையோடு உறைந்து போயிருந்தேன். மனம் இலகுவாக இருந்தது. எனது மகனும் அவனுடைய சினேகிதனும் விடியோ விளையாட்டில் மூழ்கிப்போயிருந்தார்கள். வெளியே வானம் மிருதுவான மழைத்துமிகளை தூவிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் போனால் வெளியில் சில பூச்செடிகள் வைக்க வேண்டும் என்பது இன்றைய எனது திட்டமாக இpருந்தது. போகும் போதே எந்த நிறத்தில் என்ன செடி வாங்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டால் போகும் வழியிலுள்ள பூக்கடையில் வாங்கிப் போகலாம். ஆகக் கூடி இங்கு இன்னும்…

எமது சிந்தனைச் சேமிப்புகளின் உலகப்பெரும் வங்கி.

நோர்வேஜிய மொழி: Jan Vincents Johannessen  தமிழ்: கவிதா (நோர்வே)   கலைஞராக கடல்வணிகராக விவசாயியாக அல்லது விஞ்ஞானியாக, நாம் யாராக இருந்தாலும், யாரோ ஒருவரின் பிரதிபலிப்பாகவே நாம் இருக்கின்றோம். யாரினுடைய பிம்பமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்பது மட்டுமே எம்மால் தீர்மாணிக்கப்படுகின்றது. நாம் ஒரு குழுவில் எம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருவதென்பது எமது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நாமும்  சரி அக்குழுத் தலைமைகளும் சரி குழுவின் முக்கிய கொள்கைகளை மீறாதிருப்பது கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகிவிடுகிறது. நாம் இணைந்துகொண்ட குழுவின்…

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?

மனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும். இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும்,…

விமர்சனம், விமர்சகன்.

ஆரோக்கியமான விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமான சூழலில்தான் எழமுடியும். ஒரு கலைஞனோ ஒரு அமைப்போ தனது படைப்பின் அல்லது தனது குழுவின் மீது தெளிவான நம்பிக்கை கொண்டுள்ள இடத்திற்தான் அதற்கமைய ஆரோக்கியமான விமர்சகங்களுக்கான சூழல் அமைகின்றது. தனது படைப்பில் தெளிவான கருத்துடைய ஒரு படைப்பாளியால் தன் தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ அல்லது செவிமடுத்துகொள்வதிலோ தான் தாழவில்லை இதனால் முடிந்தவரை நான் உயர்வதற்கான வழிகளையே உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்ற மனநிலையில் இருந்து ஒரு விமர்சனத்தைப் பார்க்க முடியும். ஒரு விமர்சனத்தை…

கற்றிருத்தல் வேறு, கற்பித்தற்கலை வேறு

  “சமூகம் விரும்புவதைக் கொடுப்பவன் அல்ல கலைஞன். எம் சமூகத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து அதை அவர்கள் மாற்றும் வண்ணம் கொடுப்பவனை சிறந்த கலைஞனென சமூகத்தில் நாம் இனம்காண முடியும்.” கற்பித்தல் என்பது ஒரு கலை என்பதை நான் உணர்ந்தபோது நடனத்தில் கற்பித்தலைத் தொடங்கி எட்டு ஆண்டு காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த எட்டு ஆண்டுகளில் என் மாணவர்களை வருத்தியும் கண்டித்தும் திட்டியும் புரியவைத்தும் அவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும் அவர்களது கலைத்திறனிலும் சரி வளர்ச்சியிலும் சரி நான்…

செங்கடல் – என்னோடு பயணிக்கவில்லை

2011 ஆம் ஆண்டு நோர்வேயில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் செங்கடல் திரையிடப்பட்டபோது என்னால் சமூகமளிக்க முடியவில்லை. நேற்று மீண்டும் ஒஸ்லோவில் திரையிடப்பட்ட முழுநீள திரைப்படத்தைப் பார்த்துவிடுவதென்ற எண்ணத்தோடு சென்றிருந்தேன். படத்தின் இயக்குனர், நடிகை லீனா மணிமேகலை மற்றும் நடிகர் வசன கர்த்தா ஷோபாசக்தியும் சமூகமளித்திருந்ததால் அவர்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அறியும் ஆவல் என்னிடமிருந்தது. இந்திய, இலங்கை அரசுகளை கையில் எடுத்திருப்பதால் தணிக்கைக் குழுவினால் தடை செய்யப்பட்டு கூடுதல் கவனம் பெற்ற படம் என்பதாலும் செங்கடலைப் பார்ப்பதில் கூடுதல்…

உறவு

தமது அடையாளங்களைத் தொலைத்திருக்கும் புலம்பெயர் ஈழத்துத்தமிழ் திரைப்படங்கள் தற்பொழுது மீண்டும் தமது முகவரிகளைத் தேடத்தொடங்கியுள்ளன. அவ்வப்போது திரையிடப்படும் குறும்படங்களிலும், ஒளிஇசைகளின் மூலமும் மெல்ல மெல்ல தமது பாதையைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஈழத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் வளர்ந்துவரும் திரைக்கலை பெரும் சவால்களுக்கு மத்தியில் தன்னை இழுத்துக் கொண்டுபோகவேண்டிய நிலையில் உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். தென்னிந்திய சினிமாக்களின் தாக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் மீறி ஈழத்துச்சினிமா தனது அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிளம்பும்போது…

”மீண்டும்” திரைப்படம் ஒரு பார்வை – கவிதா

  இந்தியத் திரைப்படக்குவியலுக்குள் புதைந்து கிடக்கும் எம் உறவுகள் தமது சொந்த ஈழப் படைப்புகளுக்கு வரவேற்ப்புக் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத் தமிழர்களும் திரைப்பட படைப்பாளர்களும் தமது படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய NT picture ன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்” 12.09.09 அன்று மாலை ஒஸ்லோவில் இரண்டு தடவைகள் திரையிடப்பட்டது. காதலுடன் கூடிய…