கடவுளர்களுக்கு என்னவாயிற்று? புனிதங்கள் என்னவாயின?
சோக்கிரட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் இங்கே எழுதப்படுவது அவர் பற்றிய விவரணையில்லை. இன்னொரு விடயத்தைப் பற்றிப் பேசுவதற்க்கு முன்னரான ஒரு சிறுகுறிப்பே. இனம் மதம் மொழி தாண்டி கல்விக்கூடங்களிலும், கலைக்கூடங்களிலும் பாடப்பொருள் ஆகியிருக்கும் மனிதர் சோக்கிரட்டீஸ். கிருஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவரை மேலத்தேய சமூகம், தத்துவர்த்த சிந்தனைப்போக்கின் ஆரம்பமாக கருதுகின்றனர். மேலத்தேய சமூகத்திடம் மட்டுமல்லாது, அனைத்து சமூகங்கிடையும், எம்மிடையும் பாட புத்தகங்களிலும், கலைமேடைகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர். கல்விக்கூடப் பாடத்திட்டங்களில் தவிற்கமுடியாத ஒரு நபராக,…









