பிரதி மேயர் கம்சாயினி – விமர்சனங்கள்

பிரதி மேயர் கம்சாயினி இலங்கையில் நடாத்திய கலந்துரையாடல்கள் தொடர்பாக கருத்துக்கள் பேசப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இங்கு காணப்படும் பெரும்பான்மை  அனைத்தும் பெண் என்பதை முன்வைத்து கீழ்த்தரமாக இரண்டாம் மூன்றாம் தரப் பத்திரிக்கைகள் போல தனிநபர்கள் தமது வக்கிரத்தை எழுதுவது அருவெறுப்பையே உண்டு பண்ணுகிறது. சமூக வலைத்தளப் போராளிகளே கம்சாயினியுடைய கலந்துரையாடல் சம்மந்தமாக தங்களுடைய கருத்துக்களையோ விமர்சனங்களையோ பதிவிடுங்கள். அதைவிடுத்து அவரே தரவேற்றிய புகைப்படங்களை எடுத்து ஏதோ புதிதாக நீங்கள் கண்டுபிடித்துவிட்டது போல பதிவிட்டு…

இப்படியாகப்பட்டவள் நான்.

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும்…

அன்பினைச் சேர்தது ஐம்பூதங்கள் ஆறு!

இன்னும் சில மணிநேரங்கள் தான்… ஒரு நொடிப்பொழுதுதான்… அவ்வளவே தான்! இன்னுமொரு ஆண்டும் ஓடியேவிட்டது. இவ்விரவில் நான் சந்தித்த மனிதர்களையும், கண்ட அனுபவங்களையும் நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை நொடிகள்? எத்தனை நகரங்கள்? எத்தனை மனிதர்கள்? பரிமாறிக் கொண்ட நேசங்களும், கோபங்களும், கடந்து போன மனிதர்களும், கடந்து போக எண்ணும் உறவுகளும் தான் எத்தனை? எத்தனை? அன்பும் கோபமும் அவ்வளவு நெருக்கமானவையா என்ன? இந்த ஆண்டில் தான் நான் முன்னைக்கும் மேலாக மிகவும் கோபப்பட்டிருக்கிறேன். மனதுடைந்தும் போயிருக்கிறேன். சந்தர்பம் கிடைக்கும்…

பெயர் என்பது வெறும் பெயரல்ல.

ஒரு மனிதனுடைய பெயர் என்பது வெறும் பெயரல்ல. அது ஒரு பெயராக மட்டும் மனதில் பதிவதில்லை. அது உடலுக்கும் உயிருக்குமான அடையாளம் என்பதுகூட அல்ல. மனிதனுடைய செயற்பாடுகளினதும், செயற்பாட்டின் வினைகளாலும் அது கட்டியெழுப்பப்படுகிறது. பெயர்கள் எமது உணர்வலைகளைக் தட்டியெழுப்பக்கூடியவை. ஒவ்வொருவருக்கும் சில பெயர்கள் மனிதில் பதிந்துவிடும். சில பெயர்களின் மேல் ஒதுவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும்.     இந்தப் பெயர்களைப் பற்றியெல்லாம் நான் அதிகம் சிந்தித்ததில்லை. இருந்தும் பல வருடங்களாக எனக்குள் ஒருவித கிளர்ச்சியை, இனம் தெரியாத…

அடைமழைப் பொழுதுகளில்…

எல்லாம் மனது ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கத் தொடங்கி விடுகிறது. சடசடவெனக் கொட்டி, மழை போடும் கூரைச் சத்தத்தைக் கேட்டு, விடுபட்டதொரு இறகினைப்போல மனம் அமைதியாகிவிடுகிறது. மேலும் இக்கணங்களெல்லாம் ஏன் உன்னையே நினைவுபடுத்துகிறது சொல்! இலைகளின் முனைகளில் இருந்து கொட்டும் ஒவ்வொருசொட்டும் எத்தனை சுவர்கள் தாண்டியும் வந்துவிடுகிறது. அந்தச் சலசலப்பு அதுதான் உன் நினைவுகள்போல அவை எதையும் ஊடுருவிச் சேரவல்லது. நீ அறியாததா என்ன! மழைநாள் எத்தனை அழகானதோ, அத்தனை விசித்திரமானதும் கூட! இப்போது பார் இந்தத்…

கொஞ்சம் தேனீர்!

எனக்குத் தெரிந்த உலகின் மிக ரம்யமானதொரு கலைப்பொருள் என்றால் அது தேனீர்க்குவளைதான். ஒன்றுபோல் டசின் கணக்காக வாங்கி வைத்திருக்கும் தேனீர்க் குவளைகளைவிட அப்பப்போ தனித்தனியாக அழகியல் வேலைப்பாடுகளுடன் குவளைகளை வாங்கிச்சேர்ப்பதில் தனி ஆர்வம் உண்டெனக்கு. இப்போதும் தேனீர்குவளையில் இருந்து கிளம்பி காற்றோடு கலந்துவிடும் ஆவியின் அழகினைப் பார்த்தபடிதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். குவளையின் விளிம்பில் இருந்து அதன் வாசம் போதையெனக் கிளம்புகிறது. விரல்களைச் சூடேற்றியபடி இந்தப் பனிக்காலத்தை பருகியிருத்தல் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். பிறர் தரும் தேனீர்த் தருணங்களில்…

இப்படியாகப்பட்டவள் நான்

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே விடிந்துவிடுகிறது. உணவோ, பொருளோ, பொன்னோ, மண்ணோ எதுவும் என்னை திருப்தி கொள்ளவிடுவதில்லை. இளவரசியைப்போலவும், சாண்டில்யன்கதையில் வரும் வெண்குதிரை நாயகர்களின் நாயகியாகவும் நான் கண்டகனவுகள் எல்லாம் சிறுபிராயத்துக் கனவுகள்தான். எனது கனவுகள் அடங்காத குணமுடையவையாகப் பெருகி நிற்கின்றன. கண்ணகியாகவும், மணிமேகலையைத் தந்த மாதவியாகவும், நானே மணிமேகலையாகவும் இருந்திருக்கிறேன். பதின்மவயதிலேயே அதுவும்…

தனிமை உடைக்கவே விரும்புகிறேன்

நேற்று வானம் உடைந்து தண்ணீரில் கிடந்தது என்றால், நம்பமுடிகிறதா? அதன் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அந்தக்காட்சி ஒருவித மாயை. மாயையை முழுமையாய் உணர சில நொடி தனிமை தேவைப்படுகிறது. அது, அந்தத் தனிமை அந்தக்கணம்தான். பிறகு தனிமையை உடைத்தெறியவே மனம் விரும்புகிறது. உணர்வுகளை எல்லாம் அறிவிடம் அடிபணிய வைத்துவிடும் இந்தத் தனிமையை, அதற்காகவேனும் உடைத்துப்போட வேண்டும். தனிமையில் மனம் தான்தோன்றித்தனமாய் கட்டுடைத்துச் செல்வது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. கட்டுடைப்புகள் அசௌகரியமானவை. அதனால்தான் அசௌகரியங்கள் எல்லாம்…

எமது சிந்தனைச் சேமிப்புகளின் உலகப்பெரும் வங்கி.

நோர்வேஜிய மொழி: Jan Vincents Johannessen  தமிழ்: கவிதா (நோர்வே)   கலைஞராக கடல்வணிகராக விவசாயியாக அல்லது விஞ்ஞானியாக, நாம் யாராக இருந்தாலும், யாரோ ஒருவரின் பிரதிபலிப்பாகவே நாம் இருக்கின்றோம். யாரினுடைய பிம்பமாக நாங்கள் இருக்கப் போகிறோம் என்பது மட்டுமே எம்மால் தீர்மாணிக்கப்படுகின்றது. நாம் ஒரு குழுவில் எம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வருவதென்பது எமது வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றது. நாமும்  சரி அக்குழுத் தலைமைகளும் சரி குழுவின் முக்கிய கொள்கைகளை மீறாதிருப்பது கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகிவிடுகிறது. நாம் இணைந்துகொண்ட குழுவின்…

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?

மனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும். இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும்,…