பிளவுகள்

இதோ எனது பூமி என் கால்களுக்கடியிலிருந்து நழுவுகிறது அரசியல் ஆணிகளாலும் பிளவுமனக் கடப்பாறைகளாளும் ஓங்கி அடித்தவண்ணம் ஆக்கிரமிக்கும் அடங்காத உயிரினங்கள் போல ஆறாதநடனம் புரிகின்றனர் எனது உலகு பல கூறுகளாக்கப்படுகிறது வெடிப்புகளின் நுனியிலிருந்து கோசங்கள் புறப்பட்டு புலரும் திசையெங்கும் பீங்கான் கோப்பைகள் போல சத்தமாய் உடைகிறது பூமி இவர்கள் தம்மை தேவர் என்றும் அவர்களை அசுரர் என்றும் அறிவிக்கின்றனர் அவர்கள் இவர்களை அரக்கர் எனவும் தம்மை வானவர் எனவும் அறிக்கையிடுகின்றனர் பிளவுபடும் பூமியில் மனிதன் என்ற ஒன்று…

17 may – ஒரு பொழுது!

எங்கும் சிவப்பு நிறக்கொடிகள் பறந்துகொண்டிருந்தன முகம் மலர்ந்த மனிதர்கள் ஈசல்களைப் போல வந்துகொண்டிருந்தார்கள் வாழ்த்துக்கள் சொன்னார்கள்இ வாழ்த்துக்கள் சொன்னேன் இசைமுழங்கினர் கேட்டுக்கொண்டிருந்தேன் சுதந்திரம் பற்றிப் பேசினர் பார்த்துக்கொண்டிருந்தேன் சுதந்திரகீதம் முழங்கிற்று நானும் முணுமுணுத்துக்கொண்டேன் குழந்தைகள் அணிவகுத்துச் சென்றார்கள்இ அவர்கள் திரும்பும்வரை காத்துக்கொண்டிருந்தேன் அழகான ஆடைகள் அணிந்திருந்தார்கள் பலர் தமைநோக்கி அலைபேசிப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். சிறுமியர் மலர்கிரீடம் சூட்டியிருந்தனர். அழகாயிருந்தது பாண்டங்கள் கொடுத்தார்கள்இ கட்டியணைத்தார்கள் நிதிசேகரித்தார்கள்இ நின்று பேசினார்கள் தெருவெங்கும் பூக்கள் சுதந்திரமாய்ச் சிரித்தாடின. கைகட்டி அசைவற்று நாகரிகச் சிரிப்போடு…

நாளொரு கவிதை வேண்டும்

சித்தார்த்! கள்ளெனச் சொட்டும் போதையை உள்ளிழுத்து நுகர்ந்து நரம்புகளுள் ஊடுருவவிட்டு குருதியோடதைக் கலந்து உனைப்போலவே கண்மூடி என்னை நானே மறந்தோய நாளொரு கவிதை வேண்டும் அல்லதுநீ வேண்டும்

பதில் நீ தான் சொல்லவேண்டும்

என்னைப் பிடித்துபோனதாக சொல்லி என் கண்களிலும் கனவுகளைக் கொய்து போட்ட காதலனே.. முதலில் யாசிப்பதை நிறுத்து என் அடிமையென்று உளருவதை நிறுத்து எனக்கு அடிமைகளில் பிடிப்பில்லை அடிமைகளை நான் காதலிப்பதில்லை நிமிர்ந்து நில் என் வாழ்க்கைதுணையாகப் போகிறவனாய்… எனது வழியெங்கும் காதல் வினாக்களை வீசீ எறிகிறாய் என்னை நோக்கி உனது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது நானல்ல நீ தான்! நான் நடந்தால் பூவாசம் என்று சொன்னாய் அதானால் கேட்கிறேன் எனக்கு வியர்திருக்கையில் நீ பார்திருக்கிறாயா? என்…

அப்பா..

ஒளியின்றித் துளிர்க்கும் வடதுருவத்து வசந்தம் போல மேகத்திரைவிலக்கி மெலிதாய்த் தீண்டும் மழைபோல என்னை நனைத்துப்போகவரும் உன் ஞாபகத்துளிகள்! புல்லின் கீழ் மீதமிருக்கும் பனித்துளியாய் நானிருக்க… அதிகாலைக்கதிரவனாய் என்னைத் தட்டியெழுப்பும் உன் நினைவுக்கதிர்கள்! உணர்வு நீ, உருவம் நானாய்… பூமிப்பந்தின் அத்தனை சந்துகளிலும் நுழைந்துவரும் தென்றலைப்போல… என் மனதின் இரகசியப் பொந்துகளையும் தெரிந்து வைத்திருக்கிறது உன் நினைவுக்காற்று வசந்தம் துளிர்க்கும் வண்ணாத்தி சிறகடிக்கும் என் சின்னக் கிராமத்தில் சாய்ந்துவிட்ட ஆலை நீ! உன் விடுதலைக்கனவின் விம்பங்களில் வேர்படர்ந்தி விரைத்து…

பிறக்கப்போகும் சிறுமி

உடல் முழுதும் இறக்கைகளோடு முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும் நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள் அவளது ஆக்கும் திறனோடு மோதி பெருமதில்கள்; உடைந்தன ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின் கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள் நட்சத்திரங்களை சலங்கையாக்கி சிறுமி ஆடிக்கொண்டிருந்த பொழுதில் சிற்பிகள் வந்தார்கள் சிறுமியின் ஆற்றலிலும், ஆடலிலும் வனப்பிலும் அவளை தம் பெண்தெய்வங்கள் வீற்றிருந்த கோவில்களில் வாஞ்சையோடு மீண்டும் சிற்பம் வடிக்கத் தொடங்கினர் பெரும் பாறைகளின்று பெயர்த்து தன்னிலிருந்த துகள்களைத் தட்டியபடி உங்கள் உளியை என்னிடம் தருவீர்களானால்…

நான் மழை

இந்த அற்புத நகரத்துள் நீங்கள் வந்ததுண்டா இங்கேதான் மழைப்பெண்ணாக அழகிய மகள் ஒருத்தி பல்லாயிரம் ஆண்டுகளாய் வாசம் செய்கிறாள் தனது நகரத்தின் சுவர்களை அழகுணரத் துளிர்க்கத் துளிர்க்கத் பெருவெளிகளாலும் மழைத்துளிகளாலும் மிளரச்செய்கிறாள் பேதமற்ற மனித குழந்தைகள் குதித்தாட நீர்தேக்கங்களை நகர வெளியெங்கும் சமைத்து நீர்ப்பெண்ணாய் ஊறிவருகிறாள் அடைமழையில் மூழ்கத்தானே செய்யும் காகிதக்கப்பல்கள் காற்றலையும் சேலையோடும் தலைப்பூவோடும் சமயங்களில் முள்ளந்தண்டில் சிறகு முளைக்க தன் நகரம் தாண்டியொரு பறவையாகி கடல்மேவிக் வெளியோடு கரைந்துபோகிறாள் கண் எட்டும் தூரம்வரை அவளது…

பாதத்தின் கீழெல்லாம் எனது உலகம்

நாம் உரையாடத்தான் எத்தனை நினைவுகள்! சிறுகச்சிறுகக் கிளம்பி மேலெழுந்து கரைமோதி விழும் அலைகளென சாமம் மூழுதும் பேசிக்கிடந்தோம். கர்த்தரின் கைஆட்டுகுட்டியின் கண்கள் திடீரென கிடைத்த ஒரு முத்தம் காலாவதியான காதலனின் முகம் கடந்துபோன பால்யகாலத்துக் கனவுகள் அது தரும் புன்னகை கதிகலங்கக் காயப்படுத்திய அற்புத மனிதர்கள் என்னை எதிர்த்து, அடித்து என்னை முழுதாய் அறிந்தபின்னும் கையோடு பயணிக்கும் கிறுக்குத் தோழி விசித்திரமாதுதான் உலகம். காற்றலையும் இறகினைப் போல நதியோடு போகும் ஒரு இலையினைப் போல வேறொன்றுமில்லை வாழ்க்கை

நான் பெய்யெனப் பெய்யும் மழை!

வள்ளுவா! உன்னுடன் கொண்ட முரண்பாடொன்று முறிந்து விட்டது உண்மைதான் ஓம் நான் பெய்யெனப் பெய்யும் மழை! வெள்ளம் பெருகும் உடைந்தோடும் வரப்புகள் வழிந்து தணியும் வையம் பரந்த உலகழித்த தோழர்களே… நீர் சமைத்த பெண்ணொடுக்கி ஒற்றையடிப்பாதையுடைத்து வழி நெடுக பிராய்ந்தழித்து கரை மருவிக் கலகம் செய்யும் நதியாக எனது மழை நுழைகிறது கலைந்த கூந்தலோடு உம்மையும் பெண் கற்பைப்பாடும் உம்மொத்த புலவர்களையும் பிடுங்கியெறிய என் மழை எழுகிறது புரண்டோடும் இப்பெருவெள்ளம் ஒர்நாள் அடங்கும் மானுடம் குதித்து விளையாடும்…

உயிர்த்தோழி

தேவாலயச் சுவரோரம் ஒளி உமிழும் மெழுகுகளின் நீள்வட்ட தீக்குஞ்சுகளின் ஓளிர்வோடு உன்னிடம் பேசவென வெறுவெளியில் புகைந்திருக்கின்றன தோழமைக்காலங்களுக்கான வார்த்தைகள்   இப்போதுதான் வேலைமுடிந்து வந்தேன் மழைப்பதத்தின் ஈரத்தோடு நிகழ்கிறது கருவறையிலிருந்து விடுபட்ட குழந்தைகளின் அலட்டல்கள் இங்கு வெளிப்புற ஜன்னல்க் கண்ணாடியில் இடைமறிக்கப்பட்டு பூமிபுணர இறங்கிய மழை ரேகைகள். அழகாய் விடிந்துபோகிற இரவு. சாத்தியங்களுடன் தாவிச்செல்லும் நாட்களையும் புறம்தள்ளி தவிப்பு நிறையும் வெளிகளின் நெளிவு அவர் சமைத்துக் கொண்டிருக்கிறார் மகனின் வீட்டுப்பாடத்தோடு நான் அமர்ந்திருந்தேன் கடல்மணலை அளையும் தருணம்…