பிளவுகள்
இதோ எனது பூமி என் கால்களுக்கடியிலிருந்து நழுவுகிறது அரசியல் ஆணிகளாலும் பிளவுமனக் கடப்பாறைகளாளும் ஓங்கி அடித்தவண்ணம் ஆக்கிரமிக்கும் அடங்காத உயிரினங்கள் போல ஆறாதநடனம் புரிகின்றனர் எனது உலகு பல கூறுகளாக்கப்படுகிறது வெடிப்புகளின் நுனியிலிருந்து கோசங்கள் புறப்பட்டு புலரும் திசையெங்கும் பீங்கான் கோப்பைகள் போல சத்தமாய் உடைகிறது பூமி இவர்கள் தம்மை தேவர் என்றும் அவர்களை அசுரர் என்றும் அறிவிக்கின்றனர் அவர்கள் இவர்களை அரக்கர் எனவும் தம்மை வானவர் எனவும் அறிக்கையிடுகின்றனர் பிளவுபடும் பூமியில் மனிதன் என்ற ஒன்று…









