ஊழிக்கூத்து – உணர்ந்தார்க்குப் பேரனுபவம்!

கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று பாரதியின் பல படைப்புகள் அவனின் கவித்திறனை பறைசாற்றிய போதும், தனிப் பாடலாக உச்சத்தைத் தொட்ட கவிதைகளுள் அவனின் ஊழிக்கூத்து சிகரமாக நிற்கின்றது. ஆழ்ந்த பொருளுள்ள பாரதியின் கவிதைகளில் ‘ஊழிக்கூத்து’ மிகவும் தனித்துவமிக்கது. தெய்வப் பாடல்கள் என்ற பகுப்பில் இக்கவிதையைச் சேர்த்திருப்பது எத்தனை தூரம் பொருந்தும் என்பதை இக்கவிதையை படித்துணர்ந்தவர்களின் முடிவிற்கே விட்டு விடுதல் நன்று. இப்பாடலின் உட்பொருளாகி ஆடும் அன்னை பிரபஞ்ச சக்திகளின் மூலம். மூலசக்தி! அவள்…

Kunstner Ravi Varma

Raja Ravi Varma Koil Thampuran (29 april 1848 – 2 oktober 1906)   Kort livshistorie Raja Ravi Varma Koil Thampuran (født 29 april 1848) ble født på Kilimanoor palass i Travancore, sør India og var tilknyttet til kongefamilien.   Ravi Varma hadde tre søsken, en søster og to brødre. Minste av brødrene var også en maler…

ஒரேயொரு கையேடுதான் எம்மிடம் இருக்கிறது. அது சலிப்பூட்டுகிறது.

நமது சமூகத்தில் ஒரு நபரை இழிவுபடுத்த வேண்டும், காயப்படுத்த வேண்டும், ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் ஒரே கையேடு தான் பாவிக்கப்படுகிறது. அதிலும் இரண்டே இரண்டு விடயங்கள் தான் கையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சாதாரணக் குடிமகன்களில் இருந்து பெரியார் வரை இந்த ஒரு விடயம்தான். ஆணாக இருந்தால், பெண்கள் விடயத்தில் ஆள் சரியில்லை என்று காட்ட முயல்வது. பெண்ணாக இருந்தால் ஆண்கள் விடயத்தில் சரியில்லை என்று காட்ட முயல்வது. அல்லது ஏதும் பணம் தொடர்பாக கொள்ளையடித்தார்கள்,…

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம்

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம் (தொல்காப்பியம் – பொருளதிகாரம் – களவியல்) களவு என்பதின் வினை அடி கள்ளுதல். கள்ளுதல் – கவருதல். ஒருவருடைய உயிரை இன்னொருவர் கவருதல். (களவாடுதல், களவு செய்தல் எனும் பொருள்படும்.) இரண்டு அகங்கள் சேருகின்ற அகச் சேர்க்கையின் மனம் புணர் உணர்வே களவியல். ”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம் காணுங்காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.…

சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்

தென்னக ஓவியக்கலைகளின் முன்னோடியாக இருப்பது சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டின் இடைக்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை ஓவியங்கள் இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் தொன்மை வாய்ந்த ஓவியக்கலைகளைக் காணலாம். அதில் ஒன்று அஜந்தா மற்றொன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமைந்த சித்தன்ன வாசல். ’சித்தன் கிரி வாசல்’ என்ற பெயரிலும், ’சிறிய அன்னல் வாழிடம்’ என்ற பெயரிலும் பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.     2019ஆம் ஆண்டு சித்தன்ன…

Sigrid undset – நோர்வே நாட்டில் நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர்

Sigrid undset –நோர்வே நாட்டில் இலக்கியத்துறையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களில் பெண் எழுத்தாளர் சிக்றிட் உன்செத். அவர் வாழ்ந்த இல்லம் அருங்காட்சியமாக பேணப்பட்டுவருகிறது. வீட்டினை சுற்றி சிற்றோடை, பூங்கா மட்டுமல்ல ஒரு பகுதியை அப்படியே காட்டுப்பகுதியாகவே விட்டு வைத்திருக்கிறார். அவருடைய அழகியல் உணர்வு வீடுமுழுதும் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு அறையிலும் புத்தகத்தட்டுக்கள், புத்தகங்கள் மட்டும் தோராயமாக பத்தாயிரம் என அறியக்கிடைத்தது. தொன்மைவாய்ந்த தளபாடங்களின் மேல் அவருக்குப் பெருவிருப்பு இருந்திருக்கிறது. மிகநுணுக்கமாண வேலைப்பாடுகளை தன் இல்லம் முழுவதும் கலைத்துவத்தோடு வடிவமைத்திருக்கிறார். ஓவியங்களையும் பழங்காலத்துப் பொருட்களையும் அவர் அவைகளை வைத்திருக்கும் நேர்த்தியும் மிக அழகு. அவரைப்பற்றி பானுபாரதி எழுதிய அறிமுகக்குறிப்பு ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

Hvem er Tamiler?

Hvem er Tamiler? Folkegruppen Tamiler har levd i Sør Asia i flere tusen år. Men hva som gjør at Tamilenes bakgrunn skiller seg fra de andre folkegruppene. Jo, de aller fleste folkegruppenes kulturelle bakgrunn, røtter og historie er begrenset spesifikt til stat, landområder, religion, rase eller geografi. Det er sjelden at folkegrupper avviker fra disse…

Innovation

Innovation: புத்தாக்கம் – படைப்பாற்றல் – கண்டுபிடிப்பு, தாண்டி வேறு பெறுமதிகளையும் கொண்டது. Innovation? தற்போது பல இடங்களில் பலதரப்பட்ட முறையில் பாவிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அந்தச் சொல் அதற்கான சரியான அர்த்தத்தில்தான் பாவிக்கப்படுகிறதா? Innovation என்பதை புத்தாக்கம் என்று தமிழ்ப்படுத்தலாம். ஆயினும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தினை முற்றுமுழுதாக புத்தாக்கம் என்ற சொல் தருகின்றதா என்பது கேள்விக்குரியதே. படைப்பாற்றலை ஆங்கிலத்தில் creativeness/creation என்று சொல்கிறோம். அதைத்தாண்டி Innovation என்ற சொல்லைப் பாவிக்கிறோம் என்றால் நாம் அதனை விளங்கிக்சொண்டிருப்பது…

வீடு

இப்போதெல்லாம் வீடுகள் மிகவும் வெறுமையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு, புதிது புதிதாய் கட்டப்படும் வீடுகள் எல்லாம் வெள்ளை நிறச் சுவர்களையே அதிகமாக் கொண்டிருக்கின்றன. பொருட்களைக் குறைத்து வெள்ளை நிறச் சுவர்களை வெறுமனே விட்டு வைப்பதே நாகரிகம் என்று ஆகிவிட்டது. இருக்கையும் முன் மேசையும் அதில் ஒரு மெழுகு திரிக் குவளையும் முகட்டின் உள்ளே பொருத்தப்பட்ட விளக்கும் போதுமானதாக இருக்கிறது. இருக்கையின் பின்புறமோ, தூரமாகவோ ஒரு கலைத்துவமிக்க படம் வெகு கவனத்துடன் மாட்டப்பட்டிருக்கிறது. அது கலைத்துவம் மிக்கது என்பதைவிட…