ஹம்சகீதே – ஒரு இசைக்கலைஞனின் கதை

ஹம்சகீதே பொதுவாக நாவல்கள் திரைக்கதையாக மாறும் போது படைப்பு முழுமையடைவில்லை என்றே தோன்றும். மோகமுள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் அதற்குச் சாட்சி சொல்லும். ஹம்சகீதே என்ற நாவலைத் திரைப்படமாக்கியவர் இயக்கியவர் ஜி.வி.ஐயர். நல்லவேளையாக நான் ஹம்சகீதே நாவலைப் படிக்கவில்லை. நாவலைப் படிக்காமல் திரைப்படத்தைப் பார்த்த வகையில் முழுமையான படைப்பென்றே சொல்லவேண்டும். ஹம்சகீதேவை எனக்குப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உண்டு. ஹம்சகீதே அகம் சார்ந்த கதை. இசை, நடனம், வரலாறு என்ற கூறுகளை…

ஞானரதம்

ஞானரதம் பாரதி கவிதைகளைப் போலவேதான் பாரதியின் உரைநடைகள், கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் ஞானத்தேட்டத்திற்கானவை. ஆனாலும் பாரதி கவிதைகளைப் போல அவை வாசிப்புப் பெருவெளியை இன்னும் சென்றடையவில்லை என்பது என் எண்ணம். ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை. குறுநாவல். தத்துவ விசாரணை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே அவ்வப்போது கற்பனையிற் கண்ட புதிய உலகொன்றில் சஞ்சாரம் செய்வதுண்டு. அப்படியான ஒரு சஞ்சாரப் பொழுதில் பாரதி பற்பல உலகங்களில் பறந்து திரிந்து யாத்த கற்பனைச் சித்திரந்தான் ஞானரதம். வாழ்வின் உன்னத கணமொன்றைத்…

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு – பகுதி 1

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு. பிண்டி – பிணையல் – எழிற்கை – தொழிற்கை – பொருட்கை போன்ற தமிழ்வழிச் நாட்டியச் சொற்களுக்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’

நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’ எனும் படைப்பாக்கத் திட்டத்தின் மூலம் நம் தமிழ் மரபின் வழி வந்த சிந்தனையை, சொற்களை, அழகியலை, கலைத்துவத்தை அறிமுகம் செய்ய விழைகின்றோம். இப்பதிவுகளின் வழியாக தமிழ்வழி நாட்டியத்திற்குரிய கைகள், அசைவுகள், மெய்ப்பாடுகள், கோட்பாடுகள், வரலாற்றுப் போக்குகள், தத்ததுவார்த்த சிந்தனைகள் ஆகியவை தொடர்பாகப் பேசவுள்ளோம். தொல்காப்பியம், கூத்த நூல், பஞ்சமரபு, சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் நூல்களின் வழி – இப்பாடத் திட்டத்தினை ஒளி-ஒலி வடிவத்தினூடாக உங்களுக்கு அளிப்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.…

செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.  … எனது அன்பான சகோதரர்களே!! குழந்தைகளே!!!  என்னிடம் எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். °மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.  நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது,…

பாரதி மறந்த ஆசைமுகம்….

ஒரு தேடல்கவிதா லட்சுமி பாரதியின் கவிதைகளில் அதீத காதலுள்ளவள் நான். சில பாடல்களை வருடக்கணக்கில் இரைமீட்டுக் கொண்டிருப்பேன். அப்படியாக என்னை அலைக்கழித்த பாடலில் ஒன்று ‘ஆசைமுகம் மறந்து போச்சே’. பல வருடங்களாக இதன் பொருளைத் தேடி அலைந்திருக்கிறேன். பாரதியின் கவிதைகள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை அடுக்கும் முறையிலும் அதன் எளிமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். எளிய இனிய சொற்களைக் கொண்ட கவிதைகளாயினும் அக்கவிதைகளின் பொருளுணர்ந்து கொள்வது பெரும்பாலும் அத்தனை இலகுவானதல்ல. பாரதியின்…

Gejje Pooje (சலங்கை பூஜை) காட்டும் தேவதாசிச் சமூகம்

தேவரடியார் மரபினை பேசும் படங்கள் தமிழில் மிகக் குறைவு. இது கன்னடப்படம். கோயில் தேவதாசி மரபுத் தடைச்சட்டம் இந்தியவில் அமுலுக்கு வந்த பின் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த வகை தேவரடியார்கள் தம் கலை வாழ்வை காலத்தால் மறந்துவிட்டவர்கள். பிரபுக்களும், ஜமின்தார்களும் போலவே பிராமணர்களும் தேவரடியார்களை தமது பெண்களாக பரிசம் போட்டு வைத்துக்கொள்வது அன்றைய கால வழக்கு. இந்தப்படம் காட்டும் தேவரடியார் குடும்பம் சற்று வளமானது. ஒருகாலத்திற்கு ஒருவர் பெண்ணை தாசியாக வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டவர்கள்.  பாட்டி, தாய்,…

Oscarsborg கோட்டை

நோர்வேயின் டிரோபாக் (Drøbak) நகரில் அருகருகே உள்ள இரு தீவுகளின் மேல் கட்டப்பட்ட பிரதான பாதுகாப்புக் கோட்டைதான் ஒஸ்கார்ஸ்பொர்க் (Oscarsborg) கோட்டை.இக் கோட்டை 1848 ல் கட்டப்பட்டாலும், 1905 ஆம் ஆண்டில் தான் வலுப்படுத்தப்பட்டு முழுமையடைந்ததாக கூறப்படுகிறது.  ஒஸ்லோ நோர்வேயின் தலைநகராக்கப்பட்ட பின்னர், அதன் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட இந்தக் கோட்டை இன்று தொல்லியல் காப்பகமாகவும், சுற்றுலாத் தலமாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கோட்டையின் முக்கியத்துவத்தின் பின்னால் இரண்டு மகா உலக யுத்தங்கள் இருக்கின்றன. இதன் இருப்பிடம் நோர்வேயின்…

நிறமற்றுப் போன கனவுகளோடு நோர்வே நாட்டில் ஒரு ஈழத்துக் கவிஞன்

கத்தரிக்கப்பட்ட சொற்களுக்கும் காத்திரமான வரிகளுக்கும் சொந்தக்காரன். கவிஞர் இளவாலை விஜயேந்திரன் கவிதைகள்   உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது. தோழில்நுட்பம் அறிவியல் என்று பல மைல்கல்லைத் தாண்டி வேகமாக பயணிக்கும் இன்றைய யதார்த்த உலகிலும், நெருக்கடி மிகுந்த இந்தத் தருணங்ளிலும் இயற்கை, சூழல், சமூகம் குறித்த குறிப்புகளோடு கவிஞர்கள் தமது அக்கறையையும், கருத்துக்களையும் பகிர்ந்த வண்ணமே உள்ளனர். நம் கண்முன் கரைந்து காணமல் போகும் கணப்பொழுதுகளைக் காப்பாற்றி மீண்டும் எம்முன்…

முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம் – Norway

முகநூலில் நான் அவசரமாகக் கடந்து செல்லும் சில ஒளிப்பதிவுகள் இருக்கின்றன. அவைகளில் முதன்மையாக இருப்பது முதுமையில் சில மனிதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திய பதிவுகள்தாம்.  அசையக்கூட முடியாத மூதாட்டிகளை அடிப்பதும், உதைப்பதும், பலங்கொண்ட மட்டும் இழுத்துவீசுவதும் பார்த்திருக்கிறேன். அது ஏற்படுத்தும் வலியாலும், செயலற்ற எனது நிலையாலும், அவசரமாகத் தாண்டிச் செல்ல முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிந்ததில்லை.கொடுமைகளை அனுபவிக்கும் முதியவர்களுக்கு முதுமையில் வரும் மறதி என்பது ஒரு வரமாகவும் இருக்கக் கூடும். மறதி என்பது எந்த…