‘The Great Indian Kitchen’

ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது என்பது, எனக்கு நானே எழுதிக்கொள்வது போன்றது. திரைக்காட்சிகள் தரும் மெய்யுணர்வை எழுத்துக்களால் நிரப்பிவிட முடியாது. சில படங்களைப் பார்க்கும்போது அதைப் பற்றி யாரிடமாவது பேசவேண்டும் போல தோன்றும். பேசிய பின்னும் மனதில் ஏதோ ஒன்று படிந்துபோய் இருந்தால் எழுதத் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் பேனா மிகப்பெரும் சுமைதாங்கி. இந்தப்படத்தின் கதையொன்றும் புதிய கருப்பொருளைப் பேசவில்லை. பலகாலமாக கவிதைகளும் சிறுகதைகளும் கையாண்டுவரும் பேசுபொருள்தான். ”மூலைகள்” என்ற எனது கவிதையும் இதே பேசுபொருள்தான்.…

போரைப் பேசுதல்

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே அழிவதை நின்று பாரக்கும் ஒரு பெண்ணை நீங்கள் சந்தித்ததுண்டா? ஒஸ்லோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி ஓவியக்கண்காட்சி. ”ரோஜாஅரண்மனை” என்பது ஒரு ஓவியக் கண்காட்சி. இரண்டாம் உலகயுத்ததின் போது நோர்வே சந்தித்த பேரழிவுகளின், ஆக்கிரரமிப்பின் சாட்சியாக…

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

எத்தனை எத்தனை கவிஞர்கள் பிறந்து வந்திருக்கின்றனர். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை , பாரதியின் கவி வரிகளை மேவியோ கடந்தோ ஒற்றைச் சொல்லைக் கூட இதுவரை இலகு தமிழில் யாரும் எழுதிவிட இல்லை என்றே தோன்றுகிறது. துமிக்கும் மழையின் முதற் துளி போல அத்தனை இளமையோடு இருக்கின்றன அவன் எழுதிய வரிகள். அவனது ஒற்றைச் சொற்களுக்குக்கூட அத்தனை வலிமையுண்டு. ஆண்டு பலவாய் அவன் கவிதைகளைப் படித்து வந்தபோதும் அவன் யாத்த சொற்களும் வரிகளும் இன்றும் நம் உணர்வுகளைப் புத்தம்…

Trolltunga – நெடுமலைப்பயணம் – நோர்வே

இயற்கையை அனுபவிக்க நோர்வே ஒரு மிகச் சிறந்த நாடு. மலைத் தொடர்கள் அதனோடு சேர்ந்த உட்கடல்கள் என இயற்கையின் பிரம்மாண்டங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. நள்ளிரவுச் சூரியன் (Midnight sun) வடதுருவ ஒளி (Northen lights) போன்ற இயற்கையின் அற்புதங்களையும் அதிசய நிகழ்வுகளையும் இங்கு கண்டுகளிக்கலாம். வார இறுதியில் மலைகளுக்குச் செல்வதும், மலைவீடுகளிற் (மலைக் குடில்களில்) தங்கி வருவதும் நோர்வே மக்களுக்களின் வழக்கங்களில் ஒன்று. நானும் அவ்வப்போது நண்பர்களோடு சென்று வருவது உண்டு. சமீபத்தில் இங்குள்ள துறொல்துங்கா (Trolltunga)…

ஹம்சகீதே – ஒரு இசைக்கலைஞனின் கதை

ஹம்சகீதே பொதுவாக நாவல்கள் திரைக்கதையாக மாறும் போது படைப்பு முழுமையடைவில்லை என்றே தோன்றும். மோகமுள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் அதற்குச் சாட்சி சொல்லும். ஹம்சகீதே என்ற நாவலைத் திரைப்படமாக்கியவர் இயக்கியவர் ஜி.வி.ஐயர். நல்லவேளையாக நான் ஹம்சகீதே நாவலைப் படிக்கவில்லை. நாவலைப் படிக்காமல் திரைப்படத்தைப் பார்த்த வகையில் முழுமையான படைப்பென்றே சொல்லவேண்டும். ஹம்சகீதேவை எனக்குப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உண்டு. ஹம்சகீதே அகம் சார்ந்த கதை. இசை, நடனம், வரலாறு என்ற கூறுகளை…

ஞானரதம்

ஞானரதம் பாரதி கவிதைகளைப் போலவேதான் பாரதியின் உரைநடைகள், கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் ஞானத்தேட்டத்திற்கானவை. ஆனாலும் பாரதி கவிதைகளைப் போல அவை வாசிப்புப் பெருவெளியை இன்னும் சென்றடையவில்லை என்பது என் எண்ணம். ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை. குறுநாவல். தத்துவ விசாரணை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே அவ்வப்போது கற்பனையிற் கண்ட புதிய உலகொன்றில் சஞ்சாரம் செய்வதுண்டு. அப்படியான ஒரு சஞ்சாரப் பொழுதில் பாரதி பற்பல உலகங்களில் பறந்து திரிந்து யாத்த கற்பனைச் சித்திரந்தான் ஞானரதம். வாழ்வின் உன்னத கணமொன்றைத்…

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு – பகுதி 1

தமிழ்வழி நடனம் அறிய விரும்புபவர்களுக்கான ஒளிப்பதிவு. பிண்டி – பிணையல் – எழிற்கை – தொழிற்கை – பொருட்கை போன்ற தமிழ்வழிச் நாட்டியச் சொற்களுக்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’

நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’ எனும் படைப்பாக்கத் திட்டத்தின் மூலம் நம் தமிழ் மரபின் வழி வந்த சிந்தனையை, சொற்களை, அழகியலை, கலைத்துவத்தை அறிமுகம் செய்ய விழைகின்றோம். இப்பதிவுகளின் வழியாக தமிழ்வழி நாட்டியத்திற்குரிய கைகள், அசைவுகள், மெய்ப்பாடுகள், கோட்பாடுகள், வரலாற்றுப் போக்குகள், தத்ததுவார்த்த சிந்தனைகள் ஆகியவை தொடர்பாகப் பேசவுள்ளோம். தொல்காப்பியம், கூத்த நூல், பஞ்சமரபு, சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் நூல்களின் வழி – இப்பாடத் திட்டத்தினை ஒளி-ஒலி வடிவத்தினூடாக உங்களுக்கு அளிப்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.…

செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.  … எனது அன்பான சகோதரர்களே!! குழந்தைகளே!!!  என்னிடம் எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். °மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.  நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது,…

பாரதி மறந்த ஆசைமுகம்….

ஒரு தேடல்கவிதா லட்சுமி பாரதியின் கவிதைகளில் அதீத காதலுள்ளவள் நான். சில பாடல்களை வருடக்கணக்கில் இரைமீட்டுக் கொண்டிருப்பேன். அப்படியாக என்னை அலைக்கழித்த பாடலில் ஒன்று ‘ஆசைமுகம் மறந்து போச்சே’. பல வருடங்களாக இதன் பொருளைத் தேடி அலைந்திருக்கிறேன். பாரதியின் கவிதைகள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை அடுக்கும் முறையிலும் அதன் எளிமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். எளிய இனிய சொற்களைக் கொண்ட கவிதைகளாயினும் அக்கவிதைகளின் பொருளுணர்ந்து கொள்வது பெரும்பாலும் அத்தனை இலகுவானதல்ல. பாரதியின்…