பெண்மை விலங்கில்

என்னிடம் பெண்மையில்லை மன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்க கொழுசொலியுடன் வளையவரும் பெண்மை காலை முழுகி குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும் பெண்மை நாற்சுவரில் தூசிதட்டி நல்ல பெயர்வாங்க முடியவில்லை என்னால் கண்முடி நின்று கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும் பிரார்திக்க விருப்பமில்லை எனக்கு அதற்கும் மேலும் சிந்திக்க இருக்கிறது சமுகத்தின் வக்கிர வார்த்தைகளை வெல்ல மொழியும் வழியும் புரிந்து போனதில் மௌணித்திருக்க மறுக்கிறது அது தாயோ என்னை தனதாக்கிக் கொண்டவனோ தொங்கப்போடும் தாலியில் எனது கண்ணியத்தையும் பெண்மையையும் நிரூபிக்க இஸ்டமில்லை நிமிர்ந்தே…

மூலைகள்

இது எனது வீடு. இந்த வீட்டின் ஓவ்வொரு மூலையும் என்னுடையது ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை! இதோ இந்த மூலையில் இரண்டு பாத்திரம், நாலு கரண்டி ஒரு அடுப்பு… எல்லாம் எனது எதிர் மூலையில் எனக்கென்று வாங்கித்தந்த பெரும் இயந்திரங்கள் துணிகள் துவைக்கவும்.. காயப்போடவும்.. ஒவ்வொரு அறையிலும் பெரிய அலமாரிகள் காய்ந்ததை அடுக்கவென்று வலப்பக்கம் இருக்கும் மூலையில்தான் படுக்கையறை. படுக்கவும்… கலைக்கவும்… பின் விரிக்கவும்! அதன் இடப்புறமும் எனது மூலைதான் ஒரு தொட்டில் பால் போத்தல்கள் பொம்மைகள் அழுக்குத்…

ஆடுகளம்

சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள் மாறியிருக்கும் நீ நினைக்கிறாயா நான் பதுமையென்று புதுமையும் பதுமையம் எம் விரல் நுனியில்தான் எந்த விரல் நீட்டுவதென்று நானே தீர்மானிக்கிறேன் நாணி ஆடவும் நாண் ஏற்றவும் கூட என் சுட்டுவிரல் போதும். சுடுகுழல் தூக்குதற்கும் கூட செக்குமாடாய் பின் முற்றத்தில் போட்ட வட்டங்கள் எல்லாம்…

என் மகனின் காதலிக்கு!

கதவுகள் கழற்றிய சுவர்கள் இவை எங்கினும் விரிந்திருக்கிறது உனது வார்த்தைகளுக்கான  பிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போல உன் உடல் காணப்போகும் சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லை பேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிது நட்சத்திரத் தூவலைப்போல முத்தம் கொட்டிய முற்றமிது ஒவ்வொரு மாலையும் அது நிகழும் இயற்கையென உயிர்ப்பசி தீர்க்கவே நாடிவருவான் பிறவேர்களில் நீர்உறிஞ்சும் செடியல்ல மகளே உன் காலச்செடிகளை தொலைவுகாணப் படரவிடு அவன் நதிகளைக் கண்டவன் மழைத்துளியின் புதல்வனவன் அருவியும் பறவையும் கடலும் சுடுமணலும் அறிவான் சிறகுகளை…

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை – பகிர்வு 12

மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் காலை விடிந்தது. கவிதை என்பது உணர்வு. கல்விக்கூடங்கள் மூலமோ பயிற்றுவிப்புகள் மூலமோ நாம் கவிதையையோ கவிஞர்களையோ மல்லுக்கட்டி இழுத்துவர முடியாது. வாழ்வின் பெருநிலத்தில் உளவியல் விதைகளாலும் அனுபவ உரத்தினாலும் உழுது பயிரிட்ட உணர்வுகளின் அறுவடை கவிதை. விரிந்த ஆய்வும் ஆழமான தேடலும் இல்லாமல்…

மனுஸ்ய புத்திரன்- அதீதத்தின் ருசி” மனநிலத்தில் உள்ள எம் வெற்றிடங்களை நிரப்பத்தூண்டும் நடனமாகிறது. “பகிர்வு 13”

பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், எமது சந்தோசங்களுக்காக எதை எதையோ செய்தோம், சாதித்தோம், இறந்தோம் என வாழும் மனித வாழ்க்கையில் ஒரு சிலரே ஒவ்வொரு கணத்தையும் கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கவிதை என்றவுடன் அது ஒரு காதலையோ, மகிழ்ச்சியையோ, இன்பத்தையோ நினைவுபடுத்தும் ஒரு மாயச்சொல்லாக எம்முன் விரிகிறது. ஆனாலும் இக்கவிதை மொழி என்பது வாழ்க்கையின் இன்பக்கிளர்ச்சிகளைப் பேசிய காலங்களில் இருந்து கழன்று இன்று வாழ்க்கைக்கான கேள்விகளுடன் தனது தேடலைத் தொடங்கியிருக்கிறது. முக்கியமாக இன்றைய கவிஞர்களின் கவிதைகள் வாழ்நிலை யாதார்த்தங்களைப்…

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – பகிர்வு 11

யாப்புக்குள் அடங்கக் கூறுவது மரபுக் கவிதை. யாப்பின் திணிப்பறுத்து செய்திக்கு முதன்மை தருவது புதுக்கவிதை. சொற்சுருக்கம், உணர்ச்சிகளின் வேகம், வழக்கிலுள்ள சொல்லாட்சி, என்பன புதுக்கவிதையின் குறியீடுகள். புதுக்கவிதை இன்று தனக்கான ஒரு இடத்தை நிலைப்படுத்திக்கொண்டு பலராலும் விரும்பப்படும் இலக்கிய வடிவமாக இன்று வளர்ந்திருக்கின்றது. சமுதாயச் சீர்கேடுகளை உணர்த்தவும் உடனுக்குடன் பதிவு செய்யவும் இலக்கண யாப்பு தடையாக இருக்கின்றது. கருத்திற்கு முதன்மையளிப்பதே புதுக்கவிதையின் முதன்மை நோக்காகும். போரின் ரணங்களும் அதன் பரிமாணங்களும், விடுதலை வேட்கையும் கலந்த கவிதைகளை கொண்ட…

மனோரமா பிஸ்வால் – மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் – பகிர்வு 8

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” – பாரதி மிக அருகில் இருந்து ஆடித்திருவதைப்போல் நட்சத்திரங்கள், கைபிடித்துவரும் ஒற்றையடிப் பாதையின் காற்று, நிலா முட்டும் குடிசைகள், பொத்தான் தொலைத்து கோணலாக இழுத்துக் குத்தப்பட்ட காற்சட்டைச் சிறுசுகள், ஜன்னல் அருகில் காற்று வாங்கத் துடிக்கும் பாவாடை பூக்கள், மஞ்சள் பூசி வளைய வரும் ஆறுகள் எல்லாம் படியேறி எங்கே ஓடிவரப்போகிறது நாற்சுவரல் ஒடுங்கிவிட்ட எம் நகரத்து வாழ்க்கைக்கு?   ஓரியாவிலிருந்து ஒரு குட்டிக் கிராமத்தையே நம்…

குகை மா புகழேந்தி – ஒரு மனிதன் உணரக்கூடிய அற்புதமான உணர்வு காதல் – பகிர்வு 10

யாருமற்ற நிசப்த இரவில் போரும் வாழ்க்கையும் நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளைக் களைந்துவிட்டு அமைதியாய் சில நொடிகளை எமதாக்கிக்கொள்ளவதென்பது அரிதானது.இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை நல்லதொரு இலக்கியப் படைப்பினால் கொடுக்க முடியும். சில மணிப்பொழுதுகளானாலும் இந்த அமைதியை தரவல்ல சக்தியைக் கொண்டது காதல்க் கவிதைகள். இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் எம்மை சில நொடி பிரபஞ்சத்தின் வெளியே…

கனிமொழி – கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை – பகிர்வு 9

கனிமொழியின் கவிதைகளுக்கும் அவரின் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை. பொருள் புதைந்து, பரந்து வரியும் கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை. எந்த ஒளிப்பும் மறைப்பும் இன்றி, நடைமுறையை இலகு மொழியில் எளிமையாக எடுத்துவரக்கூடியது புதுக்கவிதை.. தமிழ் பெண்களின் கவிதை வெளிப்பாடுகள் என்பது தமிழ் இலக்கிய பரப்பில் சமீப காலமாக நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று.…