ஆன்மீகம் – மெய்யியற்தேடல்

ஆன்மீகம் – மெய்யியற்தேடல் …… இந்தியக் கலைமரபு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பலரும் சொல்லும் விடயங்களில் முதன்மையானது ஆன்மீகம். மனித புத்திக்கு எட்டாத, அப்பாற்பட்ட விடயங்கள் என்று மனம் கருதும் விடயங்களை நோக்கிய தேடலே ஆன்மீகம். ஆன்மாவினூடு நடைபெறும் தேடல் என்பது அதன் பொருள். இந்தியக் கலை மரபிலிருந்து ஏனைய கலை மரபுகளை வேறுபடுத்திக் காட்டும் தன்மையுடையது ஆன்மீகம். எனினும் ஏனைய நாட்டுக் கலைமரபுகளில் ஒட்டுமொத்தமாக ஆன்மீகம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியக் கலைமரபில் ஆன்மிகம்…

இந்தியக்கலையின் அங்கங்கள்- அழகியலும் கருத்தியலும் – பாகம் 1

இந்தியக் கலை மரபு: அங்கங்கள் | அழகிய ல் | கருத்தியல் உயிர்மிகும் ஓவியங்கள் அரங்காற்றுகை  பாகம் 1 இந்திய ஓவியக்கலை வரலாற்றில் இரவிவர்மாவினுடைய ஓவியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இரவிவர்மாவின் ஓவியங்களினூடு இந்தியக்கலையின் அழகியல் அங்கங்களைப் பேசுவதே «உயிர்மிகும் ஓவியங்கள்» என்ற தலைப்பிலானா அரங்காற்றுகையாகும். இந்தியக் கலை மரபுகளை ஆய்ந்தறிந்த அறிஞர்களின் பார்வைகளின் படி, இந்தியக் கலை மரபுகளுக்கென்று தனித்துவமான பல கோட்பாடுகள் (அங்கங்கள்) இருக்கின்றன. பிறநாட்டுக்குரிய கலை மரபுகளிலிருந்து இந்தியக் கலை மரபுகள் வேறுபட்டுத் திகழ்வதற்குக்…

எழுத்து என் சுதந்திரம்

நேர்காணல் செய்தவர்: றஜித்தா சாம் கவிதா லட்சுமி: இலங்கையில் பிறந்து, இந்தியாவில் சிறுபராயத்தின் சில ஆண்டுகளைக் கடந்து, புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் குறிப்பிடத்தக்க இளம் பெண் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியம், நடனம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என பன்முக ஆளுமை கொண்டவர். தமிழ் இலக்கிய தேடல் உள்ளவர். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆழமான கருத்தியல்களைப் பதிவாக்கம் செய்பவர். கவிதையும் நடனமும் இவருக்கு உடலும் ஆன்மாவும் போன்றது. பனிபடலத் தாமரை, என் ஏதேன் தோட்டம், தொட்டிப்பூ, கறுத்தப் பெண், சிகண்டி என…

சக்திக்கூத்து

பாரதியின் சக்திக்கூத்துஅகம் – அண்டம் – கலவியின்பம் – உயிர்த்தொடர்ச்சி பாரதியின் கவிதைகள் ஆழமானவை. இந்தியத் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகள் பலவற்றை எளிமையாக எடுத்தியம்புபவை. கண்ணன் பாடல்கள், சக்திப் பாடல்கள், குயில் பாட்டு என்பவை அவைக்குச் சிறந்த உதாணரங்கள். பாரதியின் சக்திக்கூத்தும் அவ்வகையே. சக்திக்கூத்தினை இரண்டு வகையாக உணர்ந்துகொள்ள முடியும். சாக்த்த தத்துவச் சிந்தனையும் சக்தி வடிவமும் அகத்தகத்தகத்தினிலே உள்நின்றாள்.அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றாள் ‘அகத்தகத்தகத்தினிலே’:அகத்தின் அகத்து அகம்.மனித அகம் என்றாலும் அல்லது இவ் அண்டத்தின்…

தொல்காப்பியம் கூறும் உலக வழக்கு – நாடக வழக்கு

நாடக வழக்கு உலக வழக்கு என்ற சொற்பதங்களை தொல்காப்பிய இலக்கணநூல் பொருளதிகாரத்திற் பேசுகிறது. தொல்காப்பியம் கூறும் வழக்குகள் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்பாடல் சான்ற புலனெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்உரிய தாகும் என்மனார் புலவர்(தொல்: பொருள்: அகத்: 56) இலக்கியம் சார்ந்த புலனெறி வழக்கத்தை, நாடக வழக்கிலோ, உலகியல் வழக்கிலோ சொல்லும் பொழுது, கலிப்பாடல், பரிபாடல் என்ற இரு வடிவங்களும் ஏற்றதாக இருக்கின்றன என்று புலவர்கள் சொல்கின்றனர். விளக்கவுரை புலநெறி வழக்கத்தை, நாடகவழக்கு எனப்படும் இலட்சியப்படுத்தப்பட்ட…

பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’

பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு’ பாரதியின் பாடல்களை அசைவுகளால் காட்சிப்படுத்தும் முயற்சியில் இந்தப் பாடல் நடனமமைக்கப்பட வேண்டுமென்பது நீண்டநாள் ஆசை. இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது. இது முன்னோட்டம்.விரைவில் நோர்வேயின் கிழக்கு மலைக்குன்றுகளில் காட்சிப்படுத்தப்பட்டு முழுப் பாடற்காணொளி வெளிவரவுள்ளது. அஸ்வமித்ரா இசையில், கிரனின் குரலில், கணேஸின் சொற்கட்டுக்களோடு உயிர்பெறக் காத்திருக்கிறது.ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு கலாசாதனா கலைக்கூடம்

எகிப்து

எகிப்துபயணங்களும் பதிவுகளும் பயணத்தின் அனுபவங்களையும், அதிர்வுகளையும் சேகரித்து வைப்பதே இதுவரை எனது வைப்பில் இருக்கும் மிகப்பெரும் சொத்துக்கள். முதன் முதலாக எகிப்து பற்றி அறிமுகமாகும் போது எனக்குப் பத்து வயது. ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் சொல்லித்தந்த வரலாற்றுப் பாடத்தில் தான் எகிப்து பற்றியும் உலகின் தொன்மையான சமூகம் ஒன்று வாழ்ந்து பயிர்த்தொழில் செய்யத் தொடங்கிய இடத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அப்போதே அந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 2018- இல் எகிப்துக்குச் செல்லும்…

நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் -Bokhandelens hus

Bokhandelens hus நோர்வேயின் அரச நூல்வர்த்தக இல்லம் (bokhandelens hus) 1851 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒன்று. நோர்வே நாட்டில் வெளியிடப்படும் நூல்களை மேம்படுத்துவதும், ஆவணப்படுத்திப் பாதுகாப்பதும், நோர்வேஜிய மொழியின் இலக்கியத் தரத்தை, சமூகத்தில் புத்தகங்களுக்கான இடத்தை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாக இருக்கின்றது. எழுத்தாளர்களும் அவர்கள் தொடர்பான ஆவணங்களும் காணக்கிடைக்கின்றன. முக்கியமான அனைத்து பதிப்பகங்களும், புத்தகக்கடைகளும் இந்நிறுவனத்தின் உறுப்பினராக இருக்கின்றனர்.புத்தகங்கள் தொடர்பான, கடைகள், வெளியீட்டாளர்கள், புத்தகம் தொடர்பான வர்த்தக கல்வியில் நாட்டமுள்ளோர், அனைவருக்குமான தொழில்முறைக்கல்வியும் இங்கே ஒரு…

‘The Great Indian Kitchen’

ஒரு திரைப்படம் பற்றி நான் எழுதுவது என்பது, எனக்கு நானே எழுதிக்கொள்வது போன்றது. திரைக்காட்சிகள் தரும் மெய்யுணர்வை எழுத்துக்களால் நிரப்பிவிட முடியாது. சில படங்களைப் பார்க்கும்போது அதைப் பற்றி யாரிடமாவது பேசவேண்டும் போல தோன்றும். பேசிய பின்னும் மனதில் ஏதோ ஒன்று படிந்துபோய் இருந்தால் எழுதத் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் பேனா மிகப்பெரும் சுமைதாங்கி. இந்தப்படத்தின் கதையொன்றும் புதிய கருப்பொருளைப் பேசவில்லை. பலகாலமாக கவிதைகளும் சிறுகதைகளும் கையாண்டுவரும் பேசுபொருள்தான். ”மூலைகள்” என்ற எனது கவிதையும் இதே பேசுபொருள்தான்.…

போரைப் பேசுதல்

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே அழிவதை நின்று பாரக்கும் ஒரு பெண்ணை நீங்கள் சந்தித்ததுண்டா? ஒஸ்லோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி ஓவியக்கண்காட்சி. ”ரோஜாஅரண்மனை” என்பது ஒரு ஓவியக் கண்காட்சி. இரண்டாம் உலகயுத்ததின் போது நோர்வே சந்தித்த பேரழிவுகளின், ஆக்கிரரமிப்பின் சாட்சியாக…