மனுஸ்ய புத்திரன்- அதீதத்தின் ருசி” மனநிலத்தில் உள்ள எம் வெற்றிடங்களை நிரப்பத்தூண்டும் நடனமாகிறது. “பகிர்வு 13”

பிறந்தோம், வளர்ந்தோம், உழைத்தோம், எமது சந்தோசங்களுக்காக எதை எதையோ செய்தோம், சாதித்தோம், இறந்தோம் என வாழும் மனித வாழ்க்கையில் ஒரு சிலரே ஒவ்வொரு கணத்தையும் கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கவிதை என்றவுடன் அது ஒரு காதலையோ, மகிழ்ச்சியையோ, இன்பத்தையோ நினைவுபடுத்தும் ஒரு மாயச்சொல்லாக எம்முன் விரிகிறது. ஆனாலும் இக்கவிதை மொழி என்பது வாழ்க்கையின் இன்பக்கிளர்ச்சிகளைப் பேசிய காலங்களில் இருந்து கழன்று இன்று வாழ்க்கைக்கான கேள்விகளுடன் தனது தேடலைத் தொடங்கியிருக்கிறது. முக்கியமாக இன்றைய கவிஞர்களின் கவிதைகள் வாழ்நிலை யாதார்த்தங்களைப்…

எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கக் கூடாதோ அதையெல்லாம் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தில் இருந்து ஒரு குரல் – பகிர்வு 11

யாப்புக்குள் அடங்கக் கூறுவது மரபுக் கவிதை. யாப்பின் திணிப்பறுத்து செய்திக்கு முதன்மை தருவது புதுக்கவிதை. சொற்சுருக்கம், உணர்ச்சிகளின் வேகம், வழக்கிலுள்ள சொல்லாட்சி, என்பன புதுக்கவிதையின் குறியீடுகள். புதுக்கவிதை இன்று தனக்கான ஒரு இடத்தை நிலைப்படுத்திக்கொண்டு பலராலும் விரும்பப்படும் இலக்கிய வடிவமாக இன்று வளர்ந்திருக்கின்றது. சமுதாயச் சீர்கேடுகளை உணர்த்தவும் உடனுக்குடன் பதிவு செய்யவும் இலக்கண யாப்பு தடையாக இருக்கின்றது. கருத்திற்கு முதன்மையளிப்பதே புதுக்கவிதையின் முதன்மை நோக்காகும். போரின் ரணங்களும் அதன் பரிமாணங்களும், விடுதலை வேட்கையும் கலந்த கவிதைகளை கொண்ட…

மனோரமா பிஸ்வால் – மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் – பகிர்வு 8

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” – பாரதி மிக அருகில் இருந்து ஆடித்திருவதைப்போல் நட்சத்திரங்கள், கைபிடித்துவரும் ஒற்றையடிப் பாதையின் காற்று, நிலா முட்டும் குடிசைகள், பொத்தான் தொலைத்து கோணலாக இழுத்துக் குத்தப்பட்ட காற்சட்டைச் சிறுசுகள், ஜன்னல் அருகில் காற்று வாங்கத் துடிக்கும் பாவாடை பூக்கள், மஞ்சள் பூசி வளைய வரும் ஆறுகள் எல்லாம் படியேறி எங்கே ஓடிவரப்போகிறது நாற்சுவரல் ஒடுங்கிவிட்ட எம் நகரத்து வாழ்க்கைக்கு?   ஓரியாவிலிருந்து ஒரு குட்டிக் கிராமத்தையே நம்…

குகை மா புகழேந்தி – ஒரு மனிதன் உணரக்கூடிய அற்புதமான உணர்வு காதல் – பகிர்வு 10

யாருமற்ற நிசப்த இரவில் போரும் வாழ்க்கையும் நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளைக் களைந்துவிட்டு அமைதியாய் சில நொடிகளை எமதாக்கிக்கொள்ளவதென்பது அரிதானது.இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை நல்லதொரு இலக்கியப் படைப்பினால் கொடுக்க முடியும். சில மணிப்பொழுதுகளானாலும் இந்த அமைதியை தரவல்ல சக்தியைக் கொண்டது காதல்க் கவிதைகள். இன்றைய போர்ச்சூழலை மையமாகக் கொண்ட கவிதைகள் என்பது மனப்போராட்டங்களையும் உணர்வுகளையும் போரின் மனஉளைச்சல்களையும் தாங்கிவரும் அக்கினிகுஞ்சுகளாக எறியப்படும் காலகட்டத்தில், வீணையின் பிசிறில்லாத நாதம் போல காதல் கவிதைகள் எம்மை சில நொடி பிரபஞ்சத்தின் வெளியே…

கனிமொழி – கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை – பகிர்வு 9

கனிமொழியின் கவிதைகளுக்கும் அவரின் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரத்தம் படிந்த கரங்களோடு கைகோர்த்துக் கொண்டவர். மனிதப் பிணங்களைக் கண்டும் மௌனமாயிருந்தவர். ஆனால் அண்மையில் வாசித்த கவிதைகளுள் இவை என்னைக் கவர்ந்தவை. பொருள் புதைந்து, பரந்து வரியும் கருத்தோடு கலந்த சொற்களின் சுருக்கம் கவிதை. எந்த ஒளிப்பும் மறைப்பும் இன்றி, நடைமுறையை இலகு மொழியில் எளிமையாக எடுத்துவரக்கூடியது புதுக்கவிதை.. தமிழ் பெண்களின் கவிதை வெளிப்பாடுகள் என்பது தமிழ் இலக்கிய பரப்பில் சமீப காலமாக நிகழ்ந்துள்ள மாற்றங்களில் ஒன்று.…

சேரன் – முகில்கள்மீது நெருப்பு தன் சேதி எழுதியாயிற்று சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக – பகிர்வு 7

”தொடரும் இருப்பு” என்ற கவிதைத் தொடரின் இறுதிவரி இப்படிச் சொல்கிறது. அலைக் கரங்கள் மணலுக்கு ஆகாய வெளியிருந்த செம்பரிதி கடலுக்கு ஆழப் பதிந்தபடி என் கவிதைச் சுவடுகளோ உயிர் வாழும் துடிப்பிற்கு   கவிஞர் சேரனின் ”இரண்டாவது சூரிய உதயம்” என்ற கவிதையில் இருந்து இந்த வரிகள் என்பதாம் ஆண்டுகளில் கவிஞரை அடையாளப்படுத்திய கவிதைளில் ஒன்று சிரஞ்சீவிதம் கொண்;டு எம் முன்னுடன் இன்றும் காற்றோடு வருகிறது. ….. என்ன நிகழ்ந்தது எனது நகரம் எரிக்கப்பட்டது எனது மக்கள்…

பானுபாரதி – கட்டுடைத்து விடுதலை செய்திருப்பது சொற்களை மட்டுமல்ல – பகிர்வு 6

எழுதத் தொடங்கி எத்தனையோ வருடங்களாகிவிட்டன பெண்கள். இருட்டையும் சுமையையும் கிழித்து தம் எழுத்துக்களை தொகுப்பதற்குள் சிலருக்கு ஆயுட்காலம் கேட்கிறது.பல வருடக் இலக்கியப் பயணத்தின் பின் தான் பானுபாரதியின் கவிதைகள் கோர்கப்பட்டிருக்கின்றன. நோர்வே நாட்டின் அனுபவங்களைவிட தான் அனுபவித்த தன் தேசச் சுவடுகளை நோக்கியே இவரது பல கவிதைகள் விரிகிறது. எழுத்துபவர்கள் எல்லாம் சமூகத்தை திருத்தும் நோக்குடன் தான் எழுதுகிறார்கள் என்ற எண்ணம் வாசகர்கள் பலருக்கும் இருக்கலாம். கவிதை இலக்கிய வெளிப்பாடுகள் எல்லாம் எதையும் எவரையும் திருத்தும் நோக்கோடு…

புதியமாதவி – எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எதிர் முகங்கள் கண்டு நான் எழுதுவதை நிறுத்திவிட எண்ணியதும் உண்டு! – பகிர்வு 4

கவிதைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளுதலைவிட சிறந்தது கவிதையை ஆறஅமர இருந்து உணருவது. ஒரு கவிதை படித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும் போது சில வேளைகளில் குழப்பம் தோன்றும். கவிதையின் உயிர் இருக்கும் பகுதியை மட்டும் கவிதைக்கு வலித்துவிடாமல் பிரித்து கொணரும்போது சின்னதாய் ஒரு கீறல் கைமீறி மனதில் ஏற்பட்டுவிடுகிறது. கவிதையை எப்படி உணருவது? உணர்வின் அதிர்வை ஏற்படுத்தக்கூடிய உச்சம் கவிதையில் எங்கே கிடக்கிறது? அதை எப்படி உணரப்போகின்றோம்? வார்த்தைகள் பிரசவிக்குமிடத்திலா? மனம் லயிக்கும் இடத்திலா? இதோ…

உருத்திரமூர்த்தி – சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்

உலகில் உள்ள அனைத்தும் போல இலக்கியமும் மாறிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் போர் குணத்துடனும் சில சமயங்களில் பெரும் கூச்சலுடனும் இன்னும்  பல சமயங்களில் மொளனித்தும் தமக்கென்ற மாற்றத்திற்கு வழி செய்து கொள்கின்றன. இந்த மரபுக் கவிதைகள் என்னதான் சொல்கின்றன? எந்த வகையில் அவை மரபுக்கவிதை என்ற பெயரைச் சூடிக்கொள்கின்றன என்று பார்த்தால், மரபுக் கவிதை என்பவை அறம், ஒழுக்கம், மதபோதனை, என்பன பாடுபொருளாகவும், புலமையின் வெளிப்பாடு என்பதும் இங்கே முக்கித்துவம் பெற்று நிற்ப்பதைக்காணலாம் இந்த மரபுகவிதைக்களும் ஒரு…

சிவரமணி – சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி – பகிர்வு 2

சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி    வரலாறிக்கு முன்னான காலப்பகுதியெனக் குறிக்கப்படும் குழு நிலைச் சமூக அமைப்பு நிலவிய காலத்திலாயினும், சாம்ராஜ்யங்கள் கோலோச்சிய நிலப்பிரபுத்துவ மன்னர் காலமாயினும், சங்கம் அமைத்து அறநெறி கூறிய வரலாறு தமிழ் இலக்கியத்திற்கு உண்டு. இச்சங்கங்கள் முறையே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என குறிப்பிடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் காணக்கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும் கடைச்சங்கத்தில் ஆக்கப்பெற்ற நூல்கள்தான் என்று நம்பப்படுகிறது. முதல் இரு சங்கங்களில் ஆக்கப்பட்டவை அனைத்தும் கடல் நிரப்பரப்பை ஆக்கிரமித்தபோது…