தொல்காப்பியம் கூறும் உலக வழக்கு – நாடக வழக்கு

நாடக வழக்கு உலக வழக்கு என்ற சொற்பதங்களை தொல்காப்பிய இலக்கணநூல் பொருளதிகாரத்திற் பேசுகிறது. தொல்காப்பியம் கூறும் வழக்குகள் நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்பாடல் சான்ற புலனெறி வழக்கம்கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்உரிய தாகும் என்மனார் புலவர்(தொல்: பொருள்: அகத்: 56) இலக்கியம் சார்ந்த புலனெறி வழக்கத்தை, நாடக வழக்கிலோ, உலகியல் வழக்கிலோ சொல்லும் பொழுது, கலிப்பாடல், பரிபாடல் என்ற இரு வடிவங்களும் ஏற்றதாக இருக்கின்றன என்று புலவர்கள் சொல்கின்றனர். விளக்கவுரை புலநெறி வழக்கத்தை, நாடகவழக்கு எனப்படும் இலட்சியப்படுத்தப்பட்ட…

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம்

மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம் (தொல்காப்பியம் – பொருளதிகாரம் – களவியல்) களவு என்பதின் வினை அடி கள்ளுதல். கள்ளுதல் – கவருதல். ஒருவருடைய உயிரை இன்னொருவர் கவருதல். (களவாடுதல், களவு செய்தல் எனும் பொருள்படும்.) இரண்டு அகங்கள் சேருகின்ற அகச் சேர்க்கையின் மனம் புணர் உணர்வே களவியல். ”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம் காணுங்காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.…

காலனியம் – பெண் – யானை

(நன்றி: காக்கைச் சிறகினிலே, 04.2019, ஓவியர் மருது) . ஈழத்து இலக்கியத்தை முன்வைத்து வல்லாதிக்க சக்திகளின் நலன்சார் அணுகுமுறையின் போக்கு மீதான வரலாற்றுப் பார்வை!   காலனியத்தின் ஆதிக்க ஆட்சிப்பின்னணியைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட ஈழத்து மக்கள் இலக்கியம் வேலப்பணிக்கன் ஒப்பாரி. இவ்விலக்கியத்தின் முக்கிய கதைமாந்தர்களாக அரியாத்தையும் யானையும் விளங்குகின்றனர். இது யானை பிடிக்கும் சமூகத்தின் கதையாடல். ஈழத்தில் வன்னியில் இருந்து எழுதப்பட்ட இவ் இலக்கியமானது வன்னி மண்ணின் மக்கள் இலக்கியமாக பெண்ணின் வீரத்தைப் பறைசாற்றும் படைப்பாகவே இன்றுவரை…

பரமசிவம் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?

ஈழத்துப் பெண் ஜெயமோகனுக்கு எழுதிக்கொள்வது. பெண்கள் தொடர்பாக அடிப்படை அறமே உம்மிடம் இல்லையே ? எழுத்தாளர் பட்டியலில் எப்படி உம்மை இருத்தி வைத்தார்கள்? கவிதைகளால் பெண்களின் கற்பழிந்து போகும் என்றால் என்ன? எப்படி யோசித்தும் புரியவேயில்லை? உமது பார்வையில் பெண்களிடத்தில் கற்பு கடைசியாக எங்கே இருக்கிறது? எம் மண்ணின் கவிதைகள் அல்லது கவிஞர்கள் எந்த விதத்தில் பெண்களின் கற்பை அழித்துவிடுவார்கள் என்ற கவலை உமக்கு? விளக்கமாகச் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோமல்லவா? உம் போன்றவர்களை இன்னும் எழுத்தாளர்கள்…