அம்மா

என் அம்மா தீர்க்கமானவள் அதிக தன்நம்பிக்கை அவளுக்கு மூர்க்கமானவள் கொஞ்சம் ஆணவம் நிறைய அதிகாரம் அவளுடன் மல்லுக்கட்டுவதே வழக்கம் மண்டியிட்டதில்லை… அவள் எனக்குச் சொல்லித்தரவில்லை! உலகில் இருக்கும் எல்லாத் தாய்களையும் போல அவள் ஒரு மனுசியாய்தான் இருக்கிறாள் அவளைச்சுற்றி எந்தக் கோயில்களும் என்னால் கட்டப்படவில்லை தூசியும் குப்பையுமாய் இரைந்த கூரைவீட்டில் கோபத்தோடும், சோகத்தேடும் கோப்பையில் உள்ளவற்றை அன்போடும் அழுக்குத் துணியோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் எனக்கு முக்கியம் அவளுக்கென்றொரு கோபம் அகந்தை வெளியுலகு நட்பு காதல் காமம் ஆளுமை…

எதிர்ப்பின் நடனம்

துணிவப்பிய முகத்தோடு நான் வெளிக்கிளம்பினால் முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய் எதிர்பை உடுத்திப் புறப்பட்டால் சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார் அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளை பிறாண்டி எடுத்து பேசத் தொடங்கினால் பெண்ணாக இரேன் என்கிறான் தம்பி மனுசியாய் இருக்க யாருக்கு மனுப்போட என சர்ச்சித்தால் பிரளயத்திற்கு பிறந்தவளே உட்கார் என்கிறான் திருப்தியற்று, கணவன் பெருந்திசைகளில் நான் எங்கிருந்தாலும் முலைகளையும் பெண்குறிகளையும் முதலிற்கண்டு, எனக்கே காட்டி ”இவை நீ“ என்கிறார் பிரபஞ்சம் வியக்க இவர்களை…

கண்ணம்மாவின் காதலர்கள்

ஒற்றைச்சூரியன் ஒரு நிலவு ஒரு உலகு ஒரே காதல் என்பது பொய் எங்கள் பார்வைக்கு வந்தது இதொரு சூரியன் தான் கண்ணுக்குக் காட்டப்படுவது இந்த ஒரு நிலவுதான் எங்கள் இருப்பைத் தாண்டி எங்கோ  உலகங்கள்  இருக்கலாம்; ஒரே காதல் என்பது ரகசிய நகரம் ஒரே காதல் என்பது மர்மங்கள் புதைந்த கண்ணாடிச் சவப்பெட்டி உடையாதவரை எந்தப் பேய்களும் கிளம்புதற்குரிய பீதியில்லை மனித இனத்தின் யதார்த்தங்களை இரவுகளில் ஒளித்துவைக்கக் கற்றவர்களின் நாணயங்கள் கரும்புலிகளின் கண்களைப்போல் ஒளிர்கின்றன கதவின் பின்புறத்தில்…

பெண்மை விலங்கில்

என்னிடம் பெண்மையில்லை மன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்க கொழுசொலியுடன் வளையவரும் பெண்மை காலை முழுகி குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும் பெண்மை நாற்சுவரில் தூசிதட்டி நல்ல பெயர்வாங்க முடியவில்லை என்னால் கண்முடி நின்று கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும் பிரார்திக்க விருப்பமில்லை எனக்கு அதற்கும் மேலும் சிந்திக்க இருக்கிறது சமுகத்தின் வக்கிர வார்த்தைகளை வெல்ல மொழியும் வழியும் புரிந்து போனதில் மௌணித்திருக்க மறுக்கிறது அது தாயோ என்னை தனதாக்கிக் கொண்டவனோ தொங்கப்போடும் தாலியில் எனது கண்ணியத்தையும் பெண்மையையும் நிரூபிக்க இஸ்டமில்லை நிமிர்ந்தே…

மூலைகள்

இது எனது வீடு. இந்த வீட்டின் ஓவ்வொரு மூலையும் என்னுடையது ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை! இதோ இந்த மூலையில் இரண்டு பாத்திரம், நாலு கரண்டி ஒரு அடுப்பு… எல்லாம் எனது எதிர் மூலையில் எனக்கென்று வாங்கித்தந்த பெரும் இயந்திரங்கள் துணிகள் துவைக்கவும்.. காயப்போடவும்.. ஒவ்வொரு அறையிலும் பெரிய அலமாரிகள் காய்ந்ததை அடுக்கவென்று வலப்பக்கம் இருக்கும் மூலையில்தான் படுக்கையறை. படுக்கவும்… கலைக்கவும்… பின் விரிக்கவும்! அதன் இடப்புறமும் எனது மூலைதான் ஒரு தொட்டில் பால் போத்தல்கள் பொம்மைகள் அழுக்குத்…

ஆடுகளம்

சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள் மாறியிருக்கும் நீ நினைக்கிறாயா நான் பதுமையென்று புதுமையும் பதுமையம் எம் விரல் நுனியில்தான் எந்த விரல் நீட்டுவதென்று நானே தீர்மானிக்கிறேன் நாணி ஆடவும் நாண் ஏற்றவும் கூட என் சுட்டுவிரல் போதும். சுடுகுழல் தூக்குதற்கும் கூட செக்குமாடாய் பின் முற்றத்தில் போட்ட வட்டங்கள் எல்லாம்…

என் மகனின் காதலிக்கு!

கதவுகள் கழற்றிய சுவர்கள் இவை எங்கினும் விரிந்திருக்கிறது உனது வார்த்தைகளுக்கான  பிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போல உன் உடல் காணப்போகும் சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லை பேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிது நட்சத்திரத் தூவலைப்போல முத்தம் கொட்டிய முற்றமிது ஒவ்வொரு மாலையும் அது நிகழும் இயற்கையென உயிர்ப்பசி தீர்க்கவே நாடிவருவான் பிறவேர்களில் நீர்உறிஞ்சும் செடியல்ல மகளே உன் காலச்செடிகளை தொலைவுகாணப் படரவிடு அவன் நதிகளைக் கண்டவன் மழைத்துளியின் புதல்வனவன் அருவியும் பறவையும் கடலும் சுடுமணலும் அறிவான் சிறகுகளை…

ஞானம்தேடிச் சென்றவர் கதை

ஒருவனுடைய தலைகள் அந்தக் கூடைமுழுவதும் விற்பனைக்கென நிரம்பிக் கிடக்கிறது கடைகளில் எல்லாம் அதே தலைகள் கவனத்திற்குரிய தற்கால அழகுப்பொருள் இந்தத் தலைகள்தான் முண்டத்தின் தேவை அற்றுப்போனதோ முழுமை விட்டுப்போனதோ சுயத்தை முழுதாய் இழந்த தலைகள் இவைகள் எதற்கும் தயாராயிருக்கின்றன ஒரு கொரூரத்தோடு வீட்டின் முலைமுடுக்குகளில் இடமாற்றிக்கொண்டே இருக்கிறேன் தோட்டத்து இலைகொட்டிப்போன மரத்தடியில் சமயலறையின் நாற்றம் விரட்ட வைத்த மெழுகின் அருகில் காலணிகள் கழட்டும் கீழ்படிக்கட்டின் மூலையில் சின்ன அழகியல் காட்ட வரவேற்பறையில் சுவரின் நிறத்தோடு ஒத்துப்போக அம்சமாக…

உனக்கான எனது இரண்டாவது கவிதை

                      மகனே! ஒரு வைத்தியனைப்போல வக்கீலைப்போல விவசாயியைப்போல நீ தொழிலாளியாகலாம் அல்லது விளையாட்டு வீரனாகவோ முதலாளியாகவோ கலைஞனாகவோ எழுத்தாளனாகவோ ஒரு தேசாந்திரி போல இப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோ நீ உருவாகக்கூடும் எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாக அகிம்சைவாதியாக சோசலிசவாதியாக கடும்போக்காளனாக ஜனநாயகவாதியாக சமூகப்போராளியாக அல்லது இவையற்ற வேற்றொரு கொள்கையைக் கொண்டிருக்கலாம் உனது தேர்வுகளில் தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய் கிருஸ்தவனாய் இஸ்லாமியனாய் பௌத்தனாய் அல்லது கடவுள்…

உனக்கு நான் எழுதிய முதற்கவிதை

  முதல்முறை எமது பிரிவு நிகழ்ந்தபோது கருவறையிலிருந்து நீ பிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய நீ புறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்ட அந்த இரவின் தீப்பொறி போல் பிரிவு நிகழ்தலின் மனச்சலனம் தாக்கிய வடுக்கள் முதல்முறை என்னுள் நுழைந்தது கண்ணே! என் விரலினூடு நடந்த நீ கைகளை உதறிக்கொண்டு உலகை தனியாக அளக்கத் தொடங்கிய அதிர்வும் துளிர்க்கும் கண்களோடு விடைபெறும் நீ… அன்று திரும்பிப்பாராமல் ஓடிய நிமிடம் என்மீது எறியப்பட்ட திகைப்பும் கண்ணாடிச் சாரளத்தனூடு தொடரும் உன் கையசைவுகள்…