நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’
நடம்புரி – ‘தமிழ்வழி ஆடல்’ எனும் படைப்பாக்கத் திட்டத்தின் மூலம் நம் தமிழ் மரபின் வழி வந்த சிந்தனையை, சொற்களை, அழகியலை, கலைத்துவத்தை அறிமுகம் செய்ய விழைகின்றோம். இப்பதிவுகளின் வழியாக தமிழ்வழி நாட்டியத்திற்குரிய கைகள், அசைவுகள், மெய்ப்பாடுகள், கோட்பாடுகள், வரலாற்றுப் போக்குகள், தத்ததுவார்த்த சிந்தனைகள் ஆகியவை தொடர்பாகப் பேசவுள்ளோம். தொல்காப்பியம், கூத்த நூல், பஞ்சமரபு, சிலப்பதிகாரம் மற்றும் பல தமிழ் நூல்களின் வழி – இப்பாடத் திட்டத்தினை ஒளி-ஒலி வடிவத்தினூடாக உங்களுக்கு அளிப்பதில் நாம் பெருமிதம் அடைகிறோம்.…









