போரைப் பேசுதல்

ஒரு போரைப் பற்றி யாரிடம் பேசுவது? ஒரு போர் ஏற்படுத்தும் இழப்புகளையும், இழிவுகளையும் வலிகளையும், அதன் பரிமாணங்களையும் எப்படிப் பேசுவது? இன்னும் பிறக்காத நட்சத்திரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உறைந்து போயிருக்கும் ஒரு பெருநதியைப் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? ஒரு நகரமே அழிவதை நின்று பாரக்கும் ஒரு பெண்ணை நீங்கள் சந்தித்ததுண்டா? ஒஸ்லோ நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி ஓவியக்கண்காட்சி. ”ரோஜாஅரண்மனை” என்பது ஒரு ஓவியக் கண்காட்சி. இரண்டாம் உலகயுத்ததின் போது நோர்வே சந்தித்த பேரழிவுகளின், ஆக்கிரரமிப்பின் சாட்சியாக…