சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்

தென்னக ஓவியக்கலைகளின் முன்னோடியாக இருப்பது சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டின் இடைக்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குடைவரை ஓவியங்கள் இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் தொன்மை வாய்ந்த ஓவியக்கலைகளைக் காணலாம். அதில் ஒன்று அஜந்தா மற்றொன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அமைந்த சித்தன்ன வாசல். ’சித்தன் கிரி வாசல்’ என்ற பெயரிலும், ’சிறிய அன்னல் வாழிடம்’ என்ற பெயரிலும் பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.     2019ஆம் ஆண்டு சித்தன்ன…

Sigrid undset – நோர்வே நாட்டில் நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர்

Sigrid undset –நோர்வே நாட்டில் இலக்கியத்துறையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களில் பெண் எழுத்தாளர் சிக்றிட் உன்செத். அவர் வாழ்ந்த இல்லம் அருங்காட்சியமாக பேணப்பட்டுவருகிறது. வீட்டினை சுற்றி சிற்றோடை, பூங்கா மட்டுமல்ல ஒரு பகுதியை அப்படியே காட்டுப்பகுதியாகவே விட்டு வைத்திருக்கிறார். அவருடைய அழகியல் உணர்வு வீடுமுழுதும் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு அறையிலும் புத்தகத்தட்டுக்கள், புத்தகங்கள் மட்டும் தோராயமாக பத்தாயிரம் என அறியக்கிடைத்தது. தொன்மைவாய்ந்த தளபாடங்களின் மேல் அவருக்குப் பெருவிருப்பு இருந்திருக்கிறது. மிகநுணுக்கமாண வேலைப்பாடுகளை தன் இல்லம் முழுவதும் கலைத்துவத்தோடு வடிவமைத்திருக்கிறார். ஓவியங்களையும் பழங்காலத்துப் பொருட்களையும் அவர் அவைகளை வைத்திருக்கும் நேர்த்தியும் மிக அழகு. அவரைப்பற்றி பானுபாரதி எழுதிய அறிமுகக்குறிப்பு ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

சந்திரகிரிக் கோட்டை

  சந்திரகிரிக் கோட்டை கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் நாராயணவனத்தைத் தலைநகராகக் கொண்டு சந்திரகிரி மண்டலப் பகுதியை மண்டலாதிபதியாக இருந்து ஆண்டு வந்த இம்மடி நரசிம்ம யாதவ ராயர் என்ற குறுநிலத் தலைவனால் கட்டப்பட்டது. திருப்பதி – ஊத்துக்கோட்டை – சென்னை வழியில் இந்த நாராயணவனம் உள்ளது சந்திரகிரி ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அழகான கிராமம். ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலத்தில் அமைந்துள்ள சந்திரகிரி கி.பி 1367 ஆம் ஆண்டு முதல்…

அத்திரம்பாக்கம்

அத்திரம்பாக்கம் என்ற இடம் பார்ப்பதற்கு ஒரு சாதாரணக் கிராமம் போலதான். இது சென்னை 60 கீலோமீட்டர் தூரத்தில், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையில் இருக்கிறது. இது தொல்பழங்கால மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் (குவார்சைட் கற்கள்) பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான (5 -10 லட்சம் வருடம்) ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இவ்வினம் வாழ்ந்ததற்குரிய சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. தமிழகத்தில் அல்லது இந்தியாவில் என்று இல்லாது, உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள…

பட்டதகல் – கர்நாடகா

வாதாபியில் இருந்து ஏறத்தாழ இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பட்டடக்கல் கோவிற் தொகுதிகள். இங்கு அமைந்துள்ள கோவில்கள் ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்தியாவில் காணப்படும் மூன்று விதமான கட்டிடக் கலை அமைப்பை இங்கு காணலாம். இந்தியாவின் கட்டிடக் கலைப் பாணிகளான திராவிடம் , வேசரம் மற்றும் நாகரப் பாணிகளை எழுப்பிய இடமாக பட்டடக்கல் விளங்குகின்றது. கோவிற் கட்டிடக் கலையில் பலவித நுணுக்கமான வேலைப்பாடுகளையும் , புதுமைகளையும் செய்து கற்றாராயும் ஒரு கலைப் பள்ளியின் ஆக்கங்களாக…

விஜயநகரப் பேரரசு – 2 – சுலே பஜார்/ சூலை பஜார் ( Harlots Market)

ஹம்பியில் நான் பார்க்க விரும்பிப் போன இடம் சுலே பஜார்/ சூலை பஜார். ஹம்பியில் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தேவரடியார்கள் வாழ்ந்த இடம் இது. தேவரடியார்கள் பின்னைய காலங்களில் தேவதாசிகள் எனவும், தாசிகள் எனவும் அழைக்கப்பட்டது வேறு கதை. இந்தியச் சுதந்திரப் போராட்டகாலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தபோது தேவதாசி தொடர்பாக சமூகம் கொண்டிருந்த பார்வைக்கும் அதற்கு முந்தயை காலங்களில் தேவரடியார் மீது சமூகம் வைத்திருந்த பார்வைக்கும் வேறுபாடுகள் இருந்தன. கோவில்கள் நிறுவனமயமாக்கப்பட்ட காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும்…

விஜயநகரப் பேரரசு – 1 ‘ஹசார ராமா கோவில் ‘

ஹம்பியில் அமைந்துள்ள கலையம்சம் மிக்க ஒரு அழகிய கோவில் ஹசார ராமா கோவில். இது விஜயநகர அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட வழிபாட்டுத்தளமாக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஹம்பியில் உள்ள கோவில்களுள் சிறிய அளவிலான கோவிலாக இருந்தாலும் ஏனைய கோவில்களில் இருந்து சற்று மாறுபட்டதாகத் தெரிகிறது. ஹசார ராமா கோவில் பதினைந்தாம் நூற்றாண்டின் காலப்பகுதியில், இரண்டாம் தேவராயரால் கட்டப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஹம்பி உலகில் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளங்கள் மிக்க நகராகவும் இருந்திருக்கிறது. நீண்ட கடைத்தெருக்கள்…

பெயர் என்பது வெறும் பெயரல்ல.

ஒரு மனிதனுடைய பெயர் என்பது வெறும் பெயரல்ல. அது ஒரு பெயராக மட்டும் மனதில் பதிவதில்லை. அது உடலுக்கும் உயிருக்குமான அடையாளம் என்பதுகூட அல்ல. மனிதனுடைய செயற்பாடுகளினதும், செயற்பாட்டின் வினைகளாலும் அது கட்டியெழுப்பப்படுகிறது. பெயர்கள் எமது உணர்வலைகளைக் தட்டியெழுப்பக்கூடியவை. ஒவ்வொருவருக்கும் சில பெயர்கள் மனிதில் பதிந்துவிடும். சில பெயர்களின் மேல் ஒதுவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும்.     இந்தப் பெயர்களைப் பற்றியெல்லாம் நான் அதிகம் சிந்தித்ததில்லை. இருந்தும் பல வருடங்களாக எனக்குள் ஒருவித கிளர்ச்சியை, இனம் தெரியாத…