மனித இனம் இன்னும் எத்தனை வன்முறைகளைக் கடக்க வேண்டும்
. எந்த இடத்தில் இருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கேள்விக்கு உட்படுத்துவது? எதன் அடிப்படையில் இப்படியான அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றன? ஒரு பெண்ணை நிர்வாணமாக்குதல், அவளுடைய உடலை வன்முறைக்கு உள்ளாக்குதல் என்பது எதன் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு திருப்தியையோ மகிழ்ச்சியையோ அளிக்கின்றது? எந்தப் பின்புலமும் இல்லாமல் திடீரெனச் சிலருக்கு இப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றுமா? இப்படியான அவலங்களை நிகழ்த்துவது என்பது ஒரு தனிமனித மனப்பபிறழ்வா அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்பிறழ்வா? நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து பெண்களை…









