சக்திக்கூத்து

பாரதியின் சக்திக்கூத்துஅகம் – அண்டம் – கலவியின்பம் – உயிர்த்தொடர்ச்சி பாரதியின் கவிதைகள் ஆழமானவை. இந்தியத் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகள் பலவற்றை எளிமையாக எடுத்தியம்புபவை. கண்ணன் பாடல்கள், சக்திப் பாடல்கள், குயில் பாட்டு என்பவை அவைக்குச் சிறந்த உதாணரங்கள். பாரதியின் சக்திக்கூத்தும் அவ்வகையே. சக்திக்கூத்தினை இரண்டு வகையாக உணர்ந்துகொள்ள முடியும். சாக்த்த தத்துவச் சிந்தனையும் சக்தி வடிவமும் அகத்தகத்தகத்தினிலே உள்நின்றாள்.அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றாள் ‘அகத்தகத்தகத்தினிலே’:அகத்தின் அகத்து அகம்.மனித அகம் என்றாலும் அல்லது இவ் அண்டத்தின்…

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

எத்தனை எத்தனை கவிஞர்கள் பிறந்து வந்திருக்கின்றனர். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை , பாரதியின் கவி வரிகளை மேவியோ கடந்தோ ஒற்றைச் சொல்லைக் கூட இதுவரை இலகு தமிழில் யாரும் எழுதிவிட இல்லை என்றே தோன்றுகிறது. துமிக்கும் மழையின் முதற் துளி போல அத்தனை இளமையோடு இருக்கின்றன அவன் எழுதிய வரிகள். அவனது ஒற்றைச் சொற்களுக்குக்கூட அத்தனை வலிமையுண்டு. ஆண்டு பலவாய் அவன் கவிதைகளைப் படித்து வந்தபோதும் அவன் யாத்த சொற்களும் வரிகளும் இன்றும் நம் உணர்வுகளைப் புத்தம்…

ஞானரதம்

ஞானரதம் பாரதி கவிதைகளைப் போலவேதான் பாரதியின் உரைநடைகள், கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் ஞானத்தேட்டத்திற்கானவை. ஆனாலும் பாரதி கவிதைகளைப் போல அவை வாசிப்புப் பெருவெளியை இன்னும் சென்றடையவில்லை என்பது என் எண்ணம். ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை. குறுநாவல். தத்துவ விசாரணை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே அவ்வப்போது கற்பனையிற் கண்ட புதிய உலகொன்றில் சஞ்சாரம் செய்வதுண்டு. அப்படியான ஒரு சஞ்சாரப் பொழுதில் பாரதி பற்பல உலகங்களில் பறந்து திரிந்து யாத்த கற்பனைச் சித்திரந்தான் ஞானரதம். வாழ்வின் உன்னத கணமொன்றைத்…

செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.  … எனது அன்பான சகோதரர்களே!! குழந்தைகளே!!!  என்னிடம் எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். °மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.  நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது,…

பாரதி மறந்த ஆசைமுகம்….

ஒரு தேடல்கவிதா லட்சுமி பாரதியின் கவிதைகளில் அதீத காதலுள்ளவள் நான். சில பாடல்களை வருடக்கணக்கில் இரைமீட்டுக் கொண்டிருப்பேன். அப்படியாக என்னை அலைக்கழித்த பாடலில் ஒன்று ‘ஆசைமுகம் மறந்து போச்சே’. பல வருடங்களாக இதன் பொருளைத் தேடி அலைந்திருக்கிறேன். பாரதியின் கவிதைகள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. சொற்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை அடுக்கும் முறையிலும் அதன் எளிமையை நாம் உணர்ந்து கொள்ள முடியும். எளிய இனிய சொற்களைக் கொண்ட கவிதைகளாயினும் அக்கவிதைகளின் பொருளுணர்ந்து கொள்வது பெரும்பாலும் அத்தனை இலகுவானதல்ல. பாரதியின்…

ஊழிக்கூத்து – உணர்ந்தார்க்குப் பேரனுபவம்!

கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று பாரதியின் பல படைப்புகள் அவனின் கவித்திறனை பறைசாற்றிய போதும், தனிப் பாடலாக உச்சத்தைத் தொட்ட கவிதைகளுள் அவனின் ஊழிக்கூத்து சிகரமாக நிற்கின்றது. ஆழ்ந்த பொருளுள்ள பாரதியின் கவிதைகளில் ‘ஊழிக்கூத்து’ மிகவும் தனித்துவமிக்கது. தெய்வப் பாடல்கள் என்ற பகுப்பில் இக்கவிதையைச் சேர்த்திருப்பது எத்தனை தூரம் பொருந்தும் என்பதை இக்கவிதையை படித்துணர்ந்தவர்களின் முடிவிற்கே விட்டு விடுதல் நன்று. இப்பாடலின் உட்பொருளாகி ஆடும் அன்னை பிரபஞ்ச சக்திகளின் மூலம். மூலசக்தி! அவள்…

பாரதியும் புதுமைப்பித்தனும்

புதுமைப்பித்தனும் பாரதியும் எப்படி ஒரே பேசுபொருளை இரண்டு வேறுபட்ட இலக்கிய வடிவங்களுக்கூடாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரசியமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இவர்கள் வெவ்வேறு இலக்கிய வடிவங்களை மட்டும் கையில் எடுக்கவில்லை. எடுத்த விடயத்தைப் பார்க்கும் விதமும் அதைக் கையாளும் முறையும் மிக மிக வேறுபட்டிருக்கிறது. பாரதியோ காதல் குணம் படைத்தவன். அவனுடைய வடிவமோ ஒன்றிப் போவது. இதயத்திலிருந்தே விடயங்களைக் கையாள்வது. காதலும், ஆன்மீகமும், தத்துவமும் கூடிக் கவி செய்வது. கவிதையில் ஓசையும், அழகும், ஆழமும் கொண்டுவரும் கவிதைச்…