இப்சனுடனான பொழுதுகள் (பருவம் – 2)

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் இரண்டுஇடம்: கிரிம்ஸ்தா முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல் கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு…

இப்சனுடனான பொழுதுகள்

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் ஒன்றுஇடம்: ஷீயன் ……… கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய…

8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை

வேலைநிறுத்தம் செய்வது பெருமிதத்திற்குரியது. அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம்,…

முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம் – Norway

முகநூலில் நான் அவசரமாகக் கடந்து செல்லும் சில ஒளிப்பதிவுகள் இருக்கின்றன. அவைகளில் முதன்மையாக இருப்பது முதுமையில் சில மனிதர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திய பதிவுகள்தாம்.  அசையக்கூட முடியாத மூதாட்டிகளை அடிப்பதும், உதைப்பதும், பலங்கொண்ட மட்டும் இழுத்துவீசுவதும் பார்த்திருக்கிறேன். அது ஏற்படுத்தும் வலியாலும், செயலற்ற எனது நிலையாலும், அவசரமாகத் தாண்டிச் செல்ல முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடிந்ததில்லை.கொடுமைகளை அனுபவிக்கும் முதியவர்களுக்கு முதுமையில் வரும் மறதி என்பது ஒரு வரமாகவும் இருக்கக் கூடும். மறதி என்பது எந்த…