நூலைப்படி!

நூலைப்படி! நூலைப்படி — சங்கத்தமிழ்நூலைப்படி — முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படிநூலைப்படி பாரதிதாசன் தனது பாடலில் நூலைப்படி என்று வெறுமாகக் சொல்லவில்லை, குறிப்பாக சங்கத்தமிழ் நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அதையும் முறைப்படி, பொருள் விளங்கும் படி படிக்கச் சொல்கிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்கக்கவிதைகள், சங்கமருவியகாலத்துக் காப்பியங்கள் வரையான நூல்களைக் கைகாட்டுகிறார். தொல்காப்பியத்திற்கும், சங்கக்கவிதைகளுக்கும் அத்தனை முக்கியத்துவம் ஏன்? எல்லாமொழிகளும் சிறந்தனவே. உலகின் அனைத்து மொழிகளுக்கும் இலக்கண நூல் இருப்பது வழமையே. ஆனாலும் தமிழ்…

ஊர் – Conques

சென்ற நடைப்பயணத்திலேயே பிடித்த கிராமத்தின் பெயர் கொங்க்ஸ். பேரழகு வாய்ந்ததொரு கிராமம். கிராமத்தின் அழகை என்னிடம் உள்ள சொற்களை கொண்டு வர்ணித்து விட முடியாதிருக்கிறது. அக்கிராமம் ஒரு மலையின் இடுக்கில் இருக்க, மலைத் தாழ்வாரத்தில் மிக அழகிய நதி ஒன்றும் அதன் மீது கடந்து செல்கிறது. பழமை வாய்ந்த பாலம் ஒன்றும் அழகின் முத்தாய்ப்பாய் காணக் கிடைக்கின்றது. கிராமத்தைச் சுற்றி மலை காடுகள் பச்சை பசேல் என்று விரிந்து கிடக்கிறது. ஆங்காங்கே முகில்களை தமக்குள் உறிஞ்சி கொண்டிருந்தபடி…

இப்சனுடனான பொழுதுகள் (பருவம் – 2)

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் இரண்டுஇடம்: கிரிம்ஸ்தா முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல் கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு…

இப்சனுடனான பொழுதுகள்

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் ஒன்றுஇடம்: ஷீயன் ……… கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய…

கொஞ்சம் நான் கொஞ்சம் கலை

நேற்று உலக நாடக நாள். நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக நாட்டியம் கற்கத் தொடங்கினேன். பரதநாட்டியம் கற்பதிற் பயனில்லை. நாட்டியக்கலை மதம் சார்ந்த சடங்குகளாகவே இருக்கிறது என்பதால் வீட்டில் மாமாக்களுக்கு நாட்டியத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்கவில்லை. கராத்தே கற்றுக்கொடுத்தாற் கூட பயனுண்டு என்ற வாதமும் உரையாடலும் வீட்டில் நடைபெற்றது. நான் நாட்டியம் கற்றது எனது தனிப்பட்ட விருப்பின்…

புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளும் எதிர்காலமும்

தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு ஐந்து தசாப்தங்களைக் கடந்துதிருக்கிறது. பெரும்பான்மையினர் போர் அழுத்தங்களாற் புலம் பெயர்ந்தவர்கள். தமிழ் உணர்வும், தம் நிலம் சார்ந்த பற்றும் இவர்களுடைய வாழ்வில் பல அமைப்புகளைக் கட்டியெழுப்புதலுக்கான உந்துதலாகவும், அடிப்படையாகவும் இருந்திருக்கின்றன. புலத்தில் வாழும் தம் சந்ததிகளுக்கு தமது மொழி, கலை, கலாசாரம் போன்றவற்றைக் கடத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்புகள், கல்விக்கூடங்கள், கலைக்ககூடங்கள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. இவ்வமைப்புகளிற் பணியாற்றியவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்து வாழும் முதற் சந்ததியினர் தாம். அன்றைய சூழ்நிலையாலும் தேவைகளினாலும் அமைப்புகள்…

உலகின் மிக அழகிய புத்தகக் கடை

உலகின் மிக அழகான புத்தகக் கடை. தமிழகத்திற்கோ, இலங்கைக்கோ சென்றால் புத்தகக் கடைகளுக்குச் செல்வது வழக்கம். ஐரோப்பிய பயணங்களில் புத்தகக் கடைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தப் புத்தகக்கடை விதிவிலக்கு. அங்கு புத்தகங்கள் வாங்குவதற்காகவும் நான் செல்லவில்லை. எனது ஸ்பெயின் நடை பயணத்திற்காகப் போத்துக்கல்லின் பொட்டோ (Porto) என்ற நகரத்தில் வந்திறங்கி, யாத்திரைக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக ஒரு நாள் அங்கு தங்க வேண்டியிருந்தது. அந்த நகரில் உலகின் அழகிய புத்தகக் கடை இருப்பதை அறிந்து சனிக்கிழமையன்று காலையிலேயே…

8 மணிநேர வேலை – போராட்டம் – ஊதிய உடன்படிக்கை

வேலைநிறுத்தம் செய்வது பெருமிதத்திற்குரியது. அதிகநேரம் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலை, குறைந்த அளவு ஊதியம், பெ¯ண்களின் பங்களிப்பு மறுப்புப் போன்ற சமூகப் பின்னடைவுகளை முன்னொரு காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்த நாடாகவே நோர்வே இருந்தது. சில தசாப்தங்கள் முன்புவரை நோர்வே நாட்டின் நிலை வேறு, இன்றைய நிலை வேறு. இன்று, வாழ்க்கைத் தரத்தில் உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது. நோர்வே நாட்டின் இன்றைய வளர்ச்சியின் அடைவுகளுக்கான பாதையில், தொழிற்சங்கங்களின் உருவாக்கம்,…

ஆன்மீகம் – மெய்யியற்தேடல்

ஆன்மீகம் – மெய்யியற்தேடல் …… இந்தியக் கலைமரபு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பலரும் சொல்லும் விடயங்களில் முதன்மையானது ஆன்மீகம். மனித புத்திக்கு எட்டாத, அப்பாற்பட்ட விடயங்கள் என்று மனம் கருதும் விடயங்களை நோக்கிய தேடலே ஆன்மீகம். ஆன்மாவினூடு நடைபெறும் தேடல் என்பது அதன் பொருள். இந்தியக் கலை மரபிலிருந்து ஏனைய கலை மரபுகளை வேறுபடுத்திக் காட்டும் தன்மையுடையது ஆன்மீகம். எனினும் ஏனைய நாட்டுக் கலைமரபுகளில் ஒட்டுமொத்தமாக ஆன்மீகம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியக் கலைமரபில் ஆன்மிகம்…

சக்திக்கூத்து

பாரதியின் சக்திக்கூத்துஅகம் – அண்டம் – கலவியின்பம் – உயிர்த்தொடர்ச்சி பாரதியின் கவிதைகள் ஆழமானவை. இந்தியத் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகள் பலவற்றை எளிமையாக எடுத்தியம்புபவை. கண்ணன் பாடல்கள், சக்திப் பாடல்கள், குயில் பாட்டு என்பவை அவைக்குச் சிறந்த உதாணரங்கள். பாரதியின் சக்திக்கூத்தும் அவ்வகையே. சக்திக்கூத்தினை இரண்டு வகையாக உணர்ந்துகொள்ள முடியும். சாக்த்த தத்துவச் சிந்தனையும் சக்தி வடிவமும் அகத்தகத்தகத்தினிலே உள்நின்றாள்.அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றாள் ‘அகத்தகத்தகத்தினிலே’:அகத்தின் அகத்து அகம்.மனித அகம் என்றாலும் அல்லது இவ் அண்டத்தின்…