நூலைப்படி!

நூலைப்படி! நூலைப்படி — சங்கத்தமிழ்நூலைப்படி — முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படிநூலைப்படி பாரதிதாசன் தனது பாடலில் நூலைப்படி என்று வெறுமாகக் சொல்லவில்லை, குறிப்பாக சங்கத்தமிழ் நூலைக் குறிப்பிட்டுச் சொல்வது குறிப்பிடத்தக்கது. அதையும் முறைப்படி, பொருள் விளங்கும் படி படிக்கச் சொல்கிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்கக்கவிதைகள், சங்கமருவியகாலத்துக் காப்பியங்கள் வரையான நூல்களைக் கைகாட்டுகிறார். தொல்காப்பியத்திற்கும், சங்கக்கவிதைகளுக்கும் அத்தனை முக்கியத்துவம் ஏன்? எல்லாமொழிகளும் சிறந்தனவே. உலகின் அனைத்து மொழிகளுக்கும் இலக்கண நூல் இருப்பது வழமையே. ஆனாலும் தமிழ்…

இப்சனுடனான பொழுதுகள் (பருவம் – 2)

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் இரண்டுஇடம்: கிரிம்ஸ்தா முதற் குழந்தை – முதற் காதல் – முதல் நூல் கிரிம்ஸ்தா நகரம், எனது இருப்பிடத்திலிருந்து குறைந்தது நான்கு மணிநேரப் பயணத்தில் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் கோடைகாலம் கிரிம்ஸ்தா நகருக்குச் செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தது. பயணம் நீண்டதெனினும் மிகச் சுவாரிசியமானதும் அழகானதுமாக அமைந்தது. வழிநெடுகிலும் இயற்கையின் பேரருள். இப்சன் பணிபுரிந்த மருந்தகத்தின் எதிரிலேயே ஒரு தங்குமிடம். பேரானந்தம் எனக்கு. பழங்காலத்து தளபாடங்களுடன் அமைக்கப்பட்ட அறை. ஓர் இரவுக்குள் ஒரு…

இப்சனுடனான பொழுதுகள்

ஹென்றிக் யுகான் இப்சன்பருவம் ஒன்றுஇடம்: ஷீயன் ……… கலைஞர்களும் இலக்கியவாதிகளும் ஹென்றிக் இப்சனைத் அறியாது இருப்பது அரிது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்துப் பெரும் நாடக எழுத்தாளராக அறியப்படுபவர் இப்சன். மேடைநிகழ்வு சார்ந்தோ, மொழிபெயர்ப்பு சார்ந்தோ ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு படைப்பாக்கம் அவருடைய எழுத்துகளைக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் அருங்காட்சியகத்தில் சொல்லபடுகிறது. ஷேக்ஸ்பியருக்கு அடுத்து மிக அதிக அளவில் இப்சனுடைய நாடகங்களே மேடையேற்றப்படுகின்றன. ஷேக்ஸ்பியர் இப்சனுக்கு 300 ஆண்டுகள் முந்தையவர் என்பதும் இங்கு கருத்திற் கொள்ளத்தக்கது. இப்சனுடைய…

கொஞ்சம் நான் கொஞ்சம் கலை

நேற்று உலக நாடக நாள். நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக நாட்டியம் கற்கத் தொடங்கினேன். பரதநாட்டியம் கற்பதிற் பயனில்லை. நாட்டியக்கலை மதம் சார்ந்த சடங்குகளாகவே இருக்கிறது என்பதால் வீட்டில் மாமாக்களுக்கு நாட்டியத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்கவில்லை. கராத்தே கற்றுக்கொடுத்தாற் கூட பயனுண்டு என்ற வாதமும் உரையாடலும் வீட்டில் நடைபெற்றது. நான் நாட்டியம் கற்றது எனது தனிப்பட்ட விருப்பின்…

‘கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து

எது கலை? கலை என்பது என்ன? பெரும்பான்மை சமூகம் விரும்பவதெல்லாம் சிறந்த கலையாகிவிடுமா? நாயக முன்னிலைப்படுத்தல்கள், சமூகத்தை ஒடுக்கும் பஞ்ச் வசனங்கள், யதார்த்தமற்ற திரைக்கதைகள் தான் சிறந்த திரைப்படங்களுக்கான அடையாளமா அல்லது அளவுகோலா? பெண் உடலை வியாபாரப் பெருளாக்கும் காட்சிகளை, இலட்சியப்படுத்தப்பட்ட உடல்களை, பெண் ஆளுமையைச் சிதைத்து, நலிந்த மலினமான பாலினமாக்கும் உத்திகளை, எல்லா ஆணிகளையும் நாயகனே (ஆண்) பிடுங்குவான் என்ற பார்வையை, இரட்டை அர்த்தத்தில் வக்கிரத்தைக் கொட்டும் பாடல்களை, வசனங்களை, நகைச்சுவைகளைச்; சிறந்த கலையாக்கம் எனலாமா?…

பொது நிகழ்வுகளில் நிறுவனங்களின் இலட்சனை (Logo) பாவிக்கும் முறையும் – முரண்பாடுகளும்.

நாட்டியக் கலைக்குப் பல்லாயிரம் ஆண்டு தொடர்ச்சியிருப்பினும் அது காலத்தினூடு பல மாற்றங்களைக் கடந்தே இன்றைய நிலையை அடைந்திருக்கிறது. சில தசாப்த காலங்களுக்கு முன் நாட்டியத்தில் நிகழ்ந்த மாற்றங்களோடுதான் பெருவாரியாக இன்றும் நாட்டியம் பயணப்பட்டு வருகின்றது. நாட்டியக்கலையில் புதிய விடயங்களை எடுத்துச்செல்வதற்கு எதிரான கருத்துக்களே பெரும்பான்மையாக இருப்பினும் எனது கருத்துநிலை வேறானது. . நல் மாற்றங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் உட்படுத்துவது, எமது அடுத்த சந்ததிகளுக்கு இலக்கியம் சார்ந்து, சமூகம் சார்ந்து பேசும் ஒரு கலையாக நாட்டியக் கலையை நகர்த்திச்…

ஆன்மீகம் – மெய்யியற்தேடல்

ஆன்மீகம் – மெய்யியற்தேடல் …… இந்தியக் கலைமரபு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பலரும் சொல்லும் விடயங்களில் முதன்மையானது ஆன்மீகம். மனித புத்திக்கு எட்டாத, அப்பாற்பட்ட விடயங்கள் என்று மனம் கருதும் விடயங்களை நோக்கிய தேடலே ஆன்மீகம். ஆன்மாவினூடு நடைபெறும் தேடல் என்பது அதன் பொருள். இந்தியக் கலை மரபிலிருந்து ஏனைய கலை மரபுகளை வேறுபடுத்திக் காட்டும் தன்மையுடையது ஆன்மீகம். எனினும் ஏனைய நாட்டுக் கலைமரபுகளில் ஒட்டுமொத்தமாக ஆன்மீகம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியக் கலைமரபில் ஆன்மிகம்…

இந்தியக்கலையின் அங்கங்கள்- அழகியலும் கருத்தியலும் – பாகம் 1

இந்தியக் கலை மரபு: அங்கங்கள் | அழகிய ல் | கருத்தியல் உயிர்மிகும் ஓவியங்கள் அரங்காற்றுகை  பாகம் 1 இந்திய ஓவியக்கலை வரலாற்றில் இரவிவர்மாவினுடைய ஓவியங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இரவிவர்மாவின் ஓவியங்களினூடு இந்தியக்கலையின் அழகியல் அங்கங்களைப் பேசுவதே «உயிர்மிகும் ஓவியங்கள்» என்ற தலைப்பிலானா அரங்காற்றுகையாகும். இந்தியக் கலை மரபுகளை ஆய்ந்தறிந்த அறிஞர்களின் பார்வைகளின் படி, இந்தியக் கலை மரபுகளுக்கென்று தனித்துவமான பல கோட்பாடுகள் (அங்கங்கள்) இருக்கின்றன. பிறநாட்டுக்குரிய கலை மரபுகளிலிருந்து இந்தியக் கலை மரபுகள் வேறுபட்டுத் திகழ்வதற்குக்…

எழுத்து என் சுதந்திரம்

நேர்காணல் செய்தவர்: றஜித்தா சாம் கவிதா லட்சுமி: இலங்கையில் பிறந்து, இந்தியாவில் சிறுபராயத்தின் சில ஆண்டுகளைக் கடந்து, புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் குறிப்பிடத்தக்க இளம் பெண் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியம், நடனம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என பன்முக ஆளுமை கொண்டவர். தமிழ் இலக்கிய தேடல் உள்ளவர். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆழமான கருத்தியல்களைப் பதிவாக்கம் செய்பவர். கவிதையும் நடனமும் இவருக்கு உடலும் ஆன்மாவும் போன்றது. பனிபடலத் தாமரை, என் ஏதேன் தோட்டம், தொட்டிப்பூ, கறுத்தப் பெண், சிகண்டி என…

சக்திக்கூத்து

பாரதியின் சக்திக்கூத்துஅகம் – அண்டம் – கலவியின்பம் – உயிர்த்தொடர்ச்சி பாரதியின் கவிதைகள் ஆழமானவை. இந்தியத் தத்துவார்த்தச் சிந்தனை மரபுகள் பலவற்றை எளிமையாக எடுத்தியம்புபவை. கண்ணன் பாடல்கள், சக்திப் பாடல்கள், குயில் பாட்டு என்பவை அவைக்குச் சிறந்த உதாணரங்கள். பாரதியின் சக்திக்கூத்தும் அவ்வகையே. சக்திக்கூத்தினை இரண்டு வகையாக உணர்ந்துகொள்ள முடியும். சாக்த்த தத்துவச் சிந்தனையும் சக்தி வடிவமும் அகத்தகத்தகத்தினிலே உள்நின்றாள்.அவள் அம்மை அம்மை எம்மைநாடு பொய்வென்றாள் ‘அகத்தகத்தகத்தினிலே’:அகத்தின் அகத்து அகம்.மனித அகம் என்றாலும் அல்லது இவ் அண்டத்தின்…