என் மகனின் காதலிக்கு!

கதவுகள் கழற்றிய சுவர்கள் இவை எங்கினும் விரிந்திருக்கிறது உனது வார்த்தைகளுக்கான  பிரபஞ்சவெளி எல்லைகளற்ற காற்றினைப்போல உன் உடல் காணப்போகும் சுதந்திரப்பெருக்கு நிகழுமிடமாகுமிது மௌனங்களால் நீ அதிர்வுறத் தேவையில்லை பேச்சுக்களைப் பூக்கச்செய்தவள் தோட்டமிது நட்சத்திரத் தூவலைப்போல முத்தம் கொட்டிய முற்றமிது ஒவ்வொரு மாலையும் அது நிகழும் இயற்கையென உயிர்ப்பசி தீர்க்கவே நாடிவருவான் பிறவேர்களில் நீர்உறிஞ்சும் செடியல்ல மகளே உன் காலச்செடிகளை தொலைவுகாணப் படரவிடு அவன் நதிகளைக் கண்டவன் மழைத்துளியின் புதல்வனவன் அருவியும் பறவையும் கடலும் சுடுமணலும் அறிவான் சிறகுகளை…

உனக்கான எனது இரண்டாவது கவிதை

                      மகனே! ஒரு வைத்தியனைப்போல வக்கீலைப்போல விவசாயியைப்போல நீ தொழிலாளியாகலாம் அல்லது விளையாட்டு வீரனாகவோ முதலாளியாகவோ கலைஞனாகவோ எழுத்தாளனாகவோ ஒரு தேசாந்திரி போல இப்பிரபஞ்சத்தின் ஆன்மாவாகவோ நீ உருவாகக்கூடும் எனக்குத் தெரியவில்லை இடதுசாரியாக அகிம்சைவாதியாக சோசலிசவாதியாக கடும்போக்காளனாக ஜனநாயகவாதியாக சமூகப்போராளியாக அல்லது இவையற்ற வேற்றொரு கொள்கையைக் கொண்டிருக்கலாம் உனது தேர்வுகளில் தடை நிற்பதற்கில்லை நான் இந்துவாய் கிருஸ்தவனாய் இஸ்லாமியனாய் பௌத்தனாய் அல்லது கடவுள்…

உனக்கு நான் எழுதிய முதற்கவிதை

  முதல்முறை எமது பிரிவு நிகழ்ந்தபோது கருவறையிலிருந்து நீ பிரசவித்துக்கொண்டிருந்தாய் என் மார்போடு தூங்கிய நீ புறமுதுகு காட்டித் திரும்பிக்கொண்ட அந்த இரவின் தீப்பொறி போல் பிரிவு நிகழ்தலின் மனச்சலனம் தாக்கிய வடுக்கள் முதல்முறை என்னுள் நுழைந்தது கண்ணே! என் விரலினூடு நடந்த நீ கைகளை உதறிக்கொண்டு உலகை தனியாக அளக்கத் தொடங்கிய அதிர்வும் துளிர்க்கும் கண்களோடு விடைபெறும் நீ… அன்று திரும்பிப்பாராமல் ஓடிய நிமிடம் என்மீது எறியப்பட்ட திகைப்பும் கண்ணாடிச் சாரளத்தனூடு தொடரும் உன் கையசைவுகள்…