எதிர்ப்பின் நடனம்

துணிவப்பிய முகத்தோடு நான் வெளிக்கிளம்பினால் முகப்பூச்சும் பொட்டும் இட்டுவிடுகிறாள் அம்மா கால்களைப் பரப்பி கம்பீரமாய் எதிர்பை உடுத்திப் புறப்பட்டால் சேலையொன்றைப் பாசமாய் பரிசளிக்கிறார் அப்பா என் பேருருவில் பதுக்கிய உணர்வுகளை பிறாண்டி எடுத்து பேசத் தொடங்கினால் பெண்ணாக இரேன் என்கிறான் தம்பி மனுசியாய் இருக்க யாருக்கு மனுப்போட என சர்ச்சித்தால் பிரளயத்திற்கு பிறந்தவளே உட்கார் என்கிறான் திருப்தியற்று, கணவன் பெருந்திசைகளில் நான் எங்கிருந்தாலும் முலைகளையும் பெண்குறிகளையும் முதலிற்கண்டு, எனக்கே காட்டி ”இவை நீ“ என்கிறார் பிரபஞ்சம் வியக்க இவர்களை…

கண்ணம்மாவின் காதலர்கள்

ஒற்றைச்சூரியன் ஒரு நிலவு ஒரு உலகு ஒரே காதல் என்பது பொய் எங்கள் பார்வைக்கு வந்தது இதொரு சூரியன் தான் கண்ணுக்குக் காட்டப்படுவது இந்த ஒரு நிலவுதான் எங்கள் இருப்பைத் தாண்டி எங்கோ  உலகங்கள்  இருக்கலாம்; ஒரே காதல் என்பது ரகசிய நகரம் ஒரே காதல் என்பது மர்மங்கள் புதைந்த கண்ணாடிச் சவப்பெட்டி உடையாதவரை எந்தப் பேய்களும் கிளம்புதற்குரிய பீதியில்லை மனித இனத்தின் யதார்த்தங்களை இரவுகளில் ஒளித்துவைக்கக் கற்றவர்களின் நாணயங்கள் கரும்புலிகளின் கண்களைப்போல் ஒளிர்கின்றன கதவின் பின்புறத்தில்…

பெண்மை விலங்கில்

என்னிடம் பெண்மையில்லை மன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்க கொழுசொலியுடன் வளையவரும் பெண்மை காலை முழுகி குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும் பெண்மை நாற்சுவரில் தூசிதட்டி நல்ல பெயர்வாங்க முடியவில்லை என்னால் கண்முடி நின்று கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும் பிரார்திக்க விருப்பமில்லை எனக்கு அதற்கும் மேலும் சிந்திக்க இருக்கிறது சமுகத்தின் வக்கிர வார்த்தைகளை வெல்ல மொழியும் வழியும் புரிந்து போனதில் மௌணித்திருக்க மறுக்கிறது அது தாயோ என்னை தனதாக்கிக் கொண்டவனோ தொங்கப்போடும் தாலியில் எனது கண்ணியத்தையும் பெண்மையையும் நிரூபிக்க இஸ்டமில்லை நிமிர்ந்தே…

மூலைகள்

இது எனது வீடு. இந்த வீட்டின் ஓவ்வொரு மூலையும் என்னுடையது ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை! இதோ இந்த மூலையில் இரண்டு பாத்திரம், நாலு கரண்டி ஒரு அடுப்பு… எல்லாம் எனது எதிர் மூலையில் எனக்கென்று வாங்கித்தந்த பெரும் இயந்திரங்கள் துணிகள் துவைக்கவும்.. காயப்போடவும்.. ஒவ்வொரு அறையிலும் பெரிய அலமாரிகள் காய்ந்ததை அடுக்கவென்று வலப்பக்கம் இருக்கும் மூலையில்தான் படுக்கையறை. படுக்கவும்… கலைக்கவும்… பின் விரிக்கவும்! அதன் இடப்புறமும் எனது மூலைதான் ஒரு தொட்டில் பால் போத்தல்கள் பொம்மைகள் அழுக்குத்…

ஆடுகளம்

சாண்டில்யன் கதை நாயகியாக வெள்ளைக்குதிரை நாயகனிடன் பறிகொடுக்கும் கன்னியாக.. சீதையாக, கண்ணகியாக இதிகாசங்களின் நாயகியாக நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை. பாவம் என்று விட்டுவிடுவேன் ராமனும், கோவலனும் இவர்கள் என்னிடம் மாட்டியிருந்தால் புராணங்கள் மாறியிருக்கும் நீ நினைக்கிறாயா நான் பதுமையென்று புதுமையும் பதுமையம் எம் விரல் நுனியில்தான் எந்த விரல் நீட்டுவதென்று நானே தீர்மானிக்கிறேன் நாணி ஆடவும் நாண் ஏற்றவும் கூட என் சுட்டுவிரல் போதும். சுடுகுழல் தூக்குதற்கும் கூட செக்குமாடாய் பின் முற்றத்தில் போட்ட வட்டங்கள் எல்லாம்…