யசோதரை!

வயதான கிழவன் நோயாளி அழுகியதொரு பிணம் ஒரு முனிவன் ஒரு போதிமரம் புத்தன் போய் வெகுநாளாகிறது! வேறுலகம் காணக் கொஞ்சமாய் நகர்ந்தாலும் அம்மாகூடச் சொல்வாள் எங்கே போகிறாய் பேசாமல் இரு பிள்ளையோடென மரபின் தொடர்ச்சியாக அதே சாரத்தோடு இன்றுவரை தப்பிக்கத் தெரியாதவள் யசோதரை!  

நீ எங்கிருக்கிறாய்?

மண் நுழைந்து வேர்களினிடையே ஊறிய அந்தச் சொட்டுகள் போலவே என் பூமியின் விரிந்த தேகமெங்கும் கொட்டித் தீர்த்தனை நீ! என் வீட்டுப் புதர்களிலும் பூக்களிலும் படர்ந்து வரும் காற்றோடு கலந்து நின்றனை நீ! இப்போது எங்கிருக்கிறாய் நீ, என்று நான் கேட்கலாமா? யாதொன்றும் இல்லாத காலங்களின் அமைதியறுத்து யுத்தத்திற்குத் தயாராகி எழுந்து விரிகிறது ஒரு பறவை நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும் காற்றின் படர்வுமற்று எதுவும் தொலைத்த சிலவரிகளைத் தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி விரித்த சிறகோடு கண்…

வனச்சிறுக்கி

அந்தக் காட்டினில் ஒரு வனச்சிறுக்கியைப் போல பெயர் அறியாததொரு பூவைத் தேடி புறப்படவும் சூனியக்காரியைப் போல பறக்கும் கட்டையின் மேலேறி வானளாவக் கிளம்பும் பெருவிருப்பிலும் மந்தையில் இருந்து கழன்றதொரு ஆட்டுக்குட்டியைப்போல காலத்தைத் தாண்டியோடும் கனவுகளைச் சமைக்கிறது மனம். நளினமுமற்று நாணமுமற்று மதயானையின் வேகம் உச்சந்தலையில் சுர்ரென ஏற முள்வேலியைப் பிய்தெறியும்; ஒரு வேட்டை மிருகத்தைப்போலது சிலிர்ந்து கிளம்புகிறது. ஆட்டுக்குட்டிகள் சிலிர்கலாகாது சிலிர்தாலும் சீறலாகாது இது வேதாளத்தின் அறிகுறியென வனச்சிறுமிக்கு யார்யாரோ சொல்லிப் போகிறார்கள். தலைகீழாய் தொங்குவதே புனிதமோ…

பொம்மைத் தொழிற்சாலை

என் கனவு வானம் உயரத்தில் இருக்கிறது அங்கிருந்தபடியே அனைத்தையும் குனிந்து பார்க்கிறேன் பனிபடர் நிலத்தில் உயர்ந்த மரங்கள் மேலாகவும் சகாராவின் அழகிய அல்லிப்பூக்கள் நெடுகிலும் சிரித்துவிளையாடும் சோமாலியக் குழந்தைகளோடும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் புல்வெளிமீதும் இலங்கைத்தீவில் பௌத்த, இஸ்லாமிய மனிதர்களோடும் ஈரான் ஈராக்கிய புதிய நகரங்களுடாகவும் நான் பறந்து வருகிறேன். மேகத் துண்டுகள் மனதை துடைத்தெறிகிறது தேவதைகள் என்னோடு பூமிக்கு பயணப்படுகிறார்கள் உலக உருண்டையில், எதிலும் கோடுகள் இல்லை அண்டவெளியெங்கும் தெய்வீகமாக நான் கடவுள்கள் மனிதர்களாக பிறந்துகொண்டிருக்கின்றனர் சிரிப்பொலியில்…

நாயகனின் செருப்பை ஏன் காட்டுகிறீகள் என்று நாங்கள் கேட்டதுண்டா

சாயஉதடுகள் குவிப்பதுவும் மைஇமைகளைக் கொட்டுதலும் காற்றிற் கூந்தல் சுற்றிச் சுழலுதலும் அரைநிர்வாணமாய் குலுங்கும் முலைகளுடனும் வெண்சாயத் தேவதைக்கனவுகள் சுமந்துவரும் மனுசிகள் சுரக்கும் திரைஅரங்கில், நாயகனின் செருப்பை முதலில் காட்டுகிறார்கள் ம்…? கடவுள் உட்பட இப்படியிருக்கக் கடவதாக சொன்ன இயக்குனர்கள் மற்றும் மனிதர்கள் ஏதோவொன்றின் நகலாகவே விரும்பும் திரைமார்பில் பாலுறுஞ்சிய தோழர் தோழியரின் கனவுகள் அப்படியே கலையாதிருக்கிறது எப்போதும் விறைத்துப்பெருத்த வண்ணமே இருக்கும் திரைமார்புகள் இங்கு யார்மீதும் எதற்காகவும் ஆத்திரப்படுவதற்கு முன் எதிர்த்தலை முதலில் என் சலனத்தோடு வைத்தபின்…

அலகு

  கொண்ட நேசங்களுக்கும் வெறுப்பு உணர்வுகளுக்கும் அலகு மயிரிழைதான் பூக்களும் இலையும் செடியும் மரமும் வெளிகளும் மலைகளும் வானும் அகண்ட சமூத்திரங்களும் பெரும் பிரபஞ்சமும் எதனாலும் நிரப்பப்படுவதற்கில்லை. பால்மண்டலத்தைபோல விரிந்து கிடக்கிறது இந்த மயிரிழை விரிசல் அதன் மாயையின் பொருள் விளங்கா செய்வதறியாது உறைந்துவிட்டேன் சகி! இருந்தும் ஒன்று கண்டு வந்தேன் அண்டமெங்கும் அதுவே சக்தியென எதையும் தகர்த்து எதையும் மறைத்து எதையும் உடைத்து சூன்யத்தை நிறைத்து வாழ்க்கையை நிரப்பிவிடுகிறது இந்த முகமூடி.  

சகலமும் நான்

நீ சூரியனா இருந்து கொள்… தூரம் என்றாலும் உன் கதிர்கள் என்னை உரசிக்கொண்டுதானிருக்கும். நான் பூமி. நீ பறவையோ தூரம் போவாயோ…போய்வா நீ நிச்சயம் வருவாய். உன் கூடு என் விரல்களில். நான் மரம். காற்றாக மாறு காணாமல் போ. ஒவ்வொரு நொடியும் என்னுள் நிரப்பிக் கொள்வேன் நான் சுவாசம். மேகமாகி நீ அலைந்து திரி பொழிந்து கொட்டு எங்கோ வீழ்ந்து எங்கும் பாய்ந்து.. நீராகி நதியாகி உன் இறுதி சங்கமம் என்னிடம் தான். நான் கடல்.

இறைமீட்பு

நீ கொடுப்பாய் என்று தெரிந்தபின்னும் கேட்காமல் நான் எடுத்துக்கொண்டது காதல் ஒரு முறை அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச்சொன்னார் இயேசு அடிக்கடி நினைவில் வந்து தொலைக்கிறது அது நீ கொடுத்த முத்தத்தில் இன்பப் படுக்கையில் உன் நினைவுகளின் இறைமீட்பு. போர்த்திக் கொள்கிறது கனவு உன் விரலால் என் விரல் கவ்வி நீ கற்று தா நாம் கலைகள் பயில்வோம் நிலவினிலே மென் இதழ் முத்தமொன்றும் இதழ் உதிர்க்கும் வார்த்தைகளும் அள்ளிபோக நான் வருவேன் யாசகனாய்  இருப்பதில் ஆட்சேபனை எனக்கில்லை…

நீளமான இரவுகள்

நீளமான இரவில் இருட்டின் அடர்த்தி கிழித்து எரிந்து கொண்டிருந்தது உருகிவழிந்த மெழுகுவத்தி அழகான மழை வெளியே அற்புதமாயிருக்கிறது மண்வாசம் நிசப்தத்தின் ஆழுமையில் வெடித்து சிதறுகிறது உன்னுடனான என் முதல் நாள் நினைவுகள் ஒரு நொடியாய்க் கரைந்துபோன அந்த ஒருநாளப்பொழுது எத்தனை இரவை நீளமாக்கும் சொல் சிதறிய உன் நினைவுத்துண்டுகள் பொறுக்கி கீறிப்பார்க்கிறேன் என் உயிர்முழுதும் கசிந்துபோகும் ஏக்கத்தின் உச்சத்தில் யார் என்று நான் சொல்லியா தெரியவேண்டும் உனக்கு?

ஜடாமுடியில் நெளியும் பாம்புகள்

என் வெளிமீது படரும் பொய்க்காலங்களின் கண்கள் என்னை மேவி நுழைகிறது என் ஜடாமுடியிலிருந்து பிடுங்கி எறிந்த பிறகும் இறகு முளைத்த சர்ப்பங்களென நினைவுகளில் ஊர்ந்து விடத்தின் வீரியத்தை வக்கிரமாய் கக்கியெறிகிறது ஆற்றாமல் நெளிந்து, அருவெறுத்து ஒதுங்கி நின்று தள்ளி நடந்து பாராமல்ச் சென்றும்… உன்னோடானா அன்றைய பொய்காலங்களின் தனல் பட்டு அதிர்ந்து மௌனித்தேன் ரத்தம் கண்ட வடுகளில் வலி பழைய புண்களைக் கிளறும் துர்நாற்றம் பரபி உச்சந்தலையுள் ஊடுருவும் சடலங்கள் எனக்கடந்த யுகங்கள் மீண்டும் நிகழுமென் வெளிமீதில்…